வெள்ளி, 25 ஜூன், 2010

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கைதேர்ந்த களவாடல்


லைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கான செலவு ரூ. 1.50 லட்சம் வந்தால், மீதமுள்ள ரூ. 50,000த்தை செலுத்த பலர் தயாராக உள்ளனர். ஆனால், இதுபோன்ற நிலை ஏற்படும்போது தகுதியில்லை என்று கூறி மருத்துவமனைகள் திருப்பி அனுப்பி விடுகின்றன.தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாதுஎன்று அண்மையில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்த்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் காயத்ரி தேவி கவலைப்பட்டிருக்கிறார்.

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கானகலைஞர் காப்பீட்டுத் திட்டம்முதல்வர் கருணாநிதி அரசின் மாபெரும் சாதனையாகக் கடந்த ஓராண்டாக பெரியளவில் விளம்பரப் படுத்தப்பட்டு மக்களிடையேயும் அந்தக் கருத்து புகுத்தப்பட்டுள்ள நிலையில் தி.மு..வின் கூட்டணிக் கட்சியை சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அதுவும் மருத்துவராக உள்ள ஒருவரின் சட்டமன்ற பேச்சு சற்றே கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

இந்த நேரத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றிய நமது அய்யத்தையும், கருத்தையும் நம்மால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. இந்தியாவின் மூத்த அரசியல் ஞானியாக அவரது உடன்பிறப்புகளால் புகழப்படும் தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக ஆட்சியில் அமர்ந்த பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அத்தகைய மக்கள் நலத் திட்டங்களில் மாகத்தானதாக அரசு எந்திரங்களாலும், கூட்டணிக் கட்சியனராலும் வியந்து போற்றப்படுகிற கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரித் திட்டமாக சொல்லப்படுகிறது.

ஆனால், ஒரு நாட்டின் குடிமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டும் இந்தியாவைப் பொறுத்தவரை முழுக்க தனியார்மயம் ஆகிவிட்டது என்பதற்கான எடுத்துக்காட்டுதான் இந்த கலைஞர் காப்பீட்டு திட்டம் என்றால் அது மிகையாகது என்றே நினைக்கத் தூண்டுகிறது. ஏனென்றால், இத்திட்டத்தை செயல் படுத்துவதற்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம்தான் நமது அய்யத்திற்கு மூல காரணமாக அமைகிறது.

ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சுஎன்ற பன்னாட்டு காப்பீடு நிறுவனத்திடம்தான் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு நான்காண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரசே ஆண்டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீடு தொகையாக ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி வரும். நான்காண்டுகளுக்கு அரசு செலுத்த வேண்டியத் தொகை 2070 கோடி. கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடந்த இதற்கான தொடக்கவிழாவில் முதல் காலாண்டு பிரீமியமாக ரூ.130 கோடியை ஸ்டார் ஹெல்த் நிறுவன அதிகாரிகளிடம் கலைஞர் வழங்கியுள்ளார்.

அத்தோடு இத்திட்டத்தின் மூலம் உயர் சிகிச்சையை தனியார் மருத்துவனைகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. சாதாரண வியாதிகளுக்கும் தீவிர சிகிச்சை என்று மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள் புத்துலகு புத்தர்கள் போல் சேவை என்ற அடிப்படையில் திடீரெனக் கருணை பொங்கஇலவசமாகசிகிச்சை செய்வதன் பின்னணி இதுதான்.

காப்பீட்டு திட்டம் என்பதே லாபமீட்டும் தொழிலாக நடத்தப்படுகிறது. ஒவ்வொருவரும் செலுத்தும் பிரீமியத்தைக் கூட்டினால் கிடைக்கும் மொத்தத் தொகையில், ஒரு சில பயனாளிகள் நோய்வாய்ப்பட்டால், அவர்களுக்கு மட்டும், அதிகபட்சமாக காப்பீடு செய்யப்பட்ட தொகை வழங்கப்படும். இதில் காப்பீட்டு நிறுவனத்தின் லாபமும், இயங்கு செலவும் கழித்தது போக மீதியுள்ளவையே பயனாளிக்கு கொடுக்க முடியும். ஒரு கட்டத்தில் பயனாளிகளின் விண்ணப்பங்கள் அதிகரித்தால் பிரீமியம் தொகையை உயர்த்த வேண்டும். நமக்கு கூட கடந்த சில ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களுக்கு 150 ரூபாய் பிரீமியம் செலுத்திய நிலையில் விண்ணப்பங்கள் அதிகரித்ததன் விளைவாக தற்போது 600 ரூபாக்கு மேல் பிரீமியம் செலுத்துவதை நினைவிற் கொள்ள வேண்டும். இதுதான் காப்பீட்டுத் தொழிலின் அடிப்படை.

இந்த அடிப்படையிலேயே ஸ்டார் காப்பீட்டு நிறுவனமானது 35 சதவீதத்தை லாபமாகவும் இயங்கு செலவாகவும் தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள 65 சதவீதத்தையே மக்களுக்கு வழங்குகிறது. இந்த 65 சதவீதத் தொகையானது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அவர்களின் லாபம், விளம்பரச் செலவு, ஆடம்பரங்கள் வல்லுனர்களுக்கு கொடுக்கும் அதீதமான ஆலோசனைத் தொகை போக மக்களுக்கு உண்மையாகப் போய்ச் சேரவேண்டிய தொகை எவ்வளவு என்று நம்மால் ஊகிக்க முடியும். ஒரு ஆண்டுக்கு 517 கோடி என்ற கணக்கில், நான்கு ஆண்டுகள் ஒப்பந்தப்படி அரசு செலவிடும் 2069 கோடியில் பத்து விழுக்காடு மக்களுக்கு பயனுள்ளதாக மாறினாலேயே ஆச்சரியம்தான். மீதமுள்ள 1800 கோடி தனியாருக்கு கைமாறுவது தவிர்க்க முடியாதது.

இப்படி கொள்ளை லாபத்திற்கு காப்பீட்டுக் கடையை தொடங்கியுள்ள ஸ்டார் நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளை அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மட்டுமே பயனாளி சிகிச்சை பெறமுடியும். அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டண வார்டுகளையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதுதான் மிகப்பெரிய கொடுமை. எனினும் இதில் பெருந்தொகை தனியார் நிறுவனங்களுக்கே செல்லும். இதே தொகையை அரசு தன்னுடைய நல்வாழ்வு கட்டமைப்பின் மூலம் நேரடியாக செலவழித்தால் பலன் பன்மடங்கு இருக்கும் என்பது கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறாத உயர்நிலைப் பள்ளி மாணவன் கூட கூறமுடியும்.

இதுவரை இத்திட்டத்தின் மூலம் 71,942 பேருக்கு ரூ.205 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 1.44 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்காக கொடுத்த பிரீமியத் தொகை எவ்வளவு என்பதை மட்டும் ஏன் சொல்லவில்லை? என்பது புரியாத புதிராக இருக்கிறது. காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 4 நபர்களுக்கு 4 வருடங்களுக்கு ஒரு முறை காப்பீடு செய்யப்படுகிறது. இதில் 4 வருடங்களில் ஒரு நபர் ரூ.1 லட்சத்துக்கு சிகிச்சை மேற்கொண்டுவிட்டால் மற்ற 3 பேருக்கு திட்ட பலன் கிடைக்காது என்பது ஒரு அதிர்ச்சியான செய்தி.

அதேபோல அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனை, தங்கியிருக்கும் செலவு, தொடர் சிகிச்சை ஆகியவைகளுக்கு பணம் செலுத்த முடியாமல் பலரும் அவதிப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆபரேஷன்களுக்கும் இந்த காப்பீட்டுப் பணம் வழங்கப்படுகிறது. அரசு பணத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்க இடையில் ஏன் ஒரு புரோக்கர்?

உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளிடம் அதனை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விக்கு, “முதலமைச்சரின் மருத்துவ நிதி உதவி பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும். எனவேதான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறதுஎன்று அரசு காரணம் சொல்கிறது.

ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு அரசு வழங்கப்போகும் தவணைத் தொகை ரூ.517 கோடிகளாகும். அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை, டில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகத் (AIIMS) தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், காப்பீடுக்குத் தனியாரிடம் ஒவ்வோராண்டும் போய்ச்சேரும் பணத்தைக் கொண்டு கிட்டத்தட்ட 13க்கும் மேற்பட்ட நவீன உயர்தர மருத்துவமனைகளை தமிழ்நாட்டில் கட்டி விடமுடியும்.

இந்த இடத்தில் சென்னை அரசுப் பொது மருத்துவமனையின் அவலத்தை நம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. இம்மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 12ஆயிரம் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் அங்குள்ள 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்குகின்றன. 5 சிகிச்சை மையங்கள் மட்டுமே 24 மணி நேரம் இயங்குபவையாக இருக்கின்றன. இவற்றை முறைப்படுத்தி 30 மையங்களையும் 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை என்பது வேதனையான ஒன்று.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருக்கிறது. குறிப்பாக 62,000 செவிலியர்கள் தேவை. ஆனால் 20,000 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், செவிலியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சையினை அரசே தரமுடியும் என்பது அரசே மறுக்க முடியாத உண்மை.

ஆனால், இதனைச் சேய்யாத அரசோ, கலைஞரின் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இதயநோய்க்கான பலூன் வால்வு சீரமைப்பிலும் இதய வால்வு சீரமைப்பிலும் நிபுணத்துவம் மிக்க சென்னை ரயில்வே மருத்துவமனையை தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக, ரயில்வே மருத்துவமனையையும் தனியாரையும் சேர்த்து மருத்துவக்கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளது.

மருத்துவ சேவையை தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்கா சரியான முன்னுதாரணமாகும். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீடு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீடுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவையே முற்றிலும் மறுக்கப்படுகின்றது. காப்பீடு நிறுவனங்களின் கொள்ளையால் அங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவும் அதே பாதையில் உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ்அனைவருக்கும் ஆரோக்கியம்எனும் சுகாதாரக் கொள்கையை 2002-ஆம் ஆண்டு அறிவித்து, அதன்படி மருத்துவ நலத்திட்டங்களில் அரசின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. தனியாரின் காப்பீடுத் திட்டத்திற்குள் பொது மருத்துவத்தைத் தள்ளிவிட உத்தரவு போட்டிருப்பது, உலகவங்கி. அதற்கு தனது பெயரைச் சூட்டியிருப்பதுதான், முதல்வர் கருணாநிதியின் மூளை.

இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீடுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீடு நிறுவனம் வீழ்த்தத் தொடங்கும். அதன் பிறகு மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் மட்டுமே நோக்குச் சிகிச்சை பெற முடியும் ஆபத்தான நிலை உருவாகும்.

சேமநல அரசினை இலாபகரமாக இயங்கும் அரசாக மாற்றுதல் எனும் போக்கைத் தாராளமயமும் தனியார்மயமும் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த அயோக்கியத்தனம் மக்களிடம் அப்பட்டமாகத் தெரிந்துவிடாதிருக்க அதற்குச் சில பூச்சுவேலைகளும் கவர்ச்சியான பெயர்களும் தேவைப்படுகின்றன. இப்போதைய எதிர்க்கட்சி அடுத்தமுறை ஆளும்கட்சியாகும்போது, இதே திட்டத்தை மாற்றமின்றி செயல்படுத்தும் என்பதால் எந்த எதிர்க்கட்சியுமே இத்திட்டத்தை தீவிரமாக எதிர்ப்பதில்லை.

இத்திட்டத்திற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளஸ்டார் ஹெல்த்நிறுவனம்தான்ஆரோக்கியஸ்ரீஎனும் பெயரில் ஆந்திர அரசோடு கைகோர்த்துக் கொண்டு, வாரங்கல் மாவட்டத்தில் சில பினாமி மருத்துவமனைகளை உருவாக்கி, அறுவை சிகிச்சையே தேவைப்படாத பெண்களுக்கும்கூடக் கருப்பைகளை அகற்றிப் பல கோடிகளைச் சுருட்டியிருக்கின்றது.

கருணாநிதியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மட்டுமே செலவிடப்படும். ஆனால், இன்றைக்கு இதய அறுவை சிகிச்சை மட்டும் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இத்திட்டம் பட்டியலிட்டிருக்கும் 150 தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் மட்டும் 65க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் சிகிச்சை என்ற பெயரில் கொள்ளையடிக்கின்றன.

காச்சல், இருமல் என்று போனாலே எக்ஸ்-ரே, எம்.ஆர்.. ஸ்கேன் எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக்கூடிய லைஃப் லைன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி, அப்பல்லோ, பில்ரோத், ராமச்சந்திரா, ஓசூரின் அகர்வால், அசோகா, விஜய் போன்ற மருத்துவமனைகள் குறைந்த பட்சம் தலா 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளன.

ஒரு இருதய நோயாளிக்கு அனுமதிக்கும் தொகை 1 இலட்ச ரூபாய் என்கிற போது ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் இதுவரை சம்பாதித்துள்ள தொகை எத்தனை கோடிகள் என்பதை நம்மால் கணக்கிட முடியாது.

அண்மையில் அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குநர் காஞ்சி காமாட்சி கோயிலுக்கு ரூ.40 இலட்சம் செலவில் தங்கத்தில் கிரீடம் சூட்டியுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

தொடக்கவிழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, கோபாலபுரத்தில் இருக்கும் அவரின் வீடு, அவரின் மரணத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் எதிர்ப்பே இன்றி நடைமுறைப்படுத்தப்படுமானால், அவருக்குப் பின், சென்னையில் கருணாநிதி வீடு ஒன்றில் மட்டும்தான் இலவச மருத்துவம் கிடைக்கும்.

அரசுப் பள்ளிகளின் அவலநிலையும் அலட்சியப் போக்கில் கல்வித் துறையும்


ண்மைக்காலமாக தமிழ்நாடு முழுவதிலும் தனியார் பள்ளியின் மீதான மோகமும், அவற்றில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் தற்பொழுது அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளியில் சேர்ந்த 6-14 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2005-ஆம் ஆண்டில் 16.4 விழுக்காடாக இருந்தது. அதுவே 2008-ஆம் ஆண்டில் அது 22.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளும் 2004 - 05-ஆம் ஆண்டில் 11.15 சதவிகிதமாக இருந்தது 2006 - 07-ஆம் ஆண்டில் 18.86 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தனியார் பள்ளிகளும் அதில் பயிலும் மாணவர்களும் இவ்வாறு அதிகப்பதற்கு ஒரு முதன்மையான காரணம் மக்கள் மதிப்பீட்டில் தனியார் பள்ளிகள் உயர்ந்தவை என்கிற கருத்து உருவாகியிருப்பதுதான்.

தங்கள் குழந்தைகள் தரமான கல்வி கற்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு பெற்றோர்கள் அக்கறை காட்டுகிறார்கள். அவர்களது எண்ணப்படி, அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள்தான் சிறந்தவை. அதைத் தவிர உலகமயமாதலின் தாக்கத்தால் தங்களது குழந்தைகளுக்கு ஆங்கில வழிக்கல்வியும் அவசியம் என்று கருதுகிறார்கள். இக்காரணங்களினால் தனியார் பள்ளிகளுக்கு சமுதாயத்தில் ஓரளவு வாய்ப்பும் வசதியும் உள்ளவர்களிடையே பெரும் ஆதரவு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தை ஏழை எளிய குடும்பங்களிலும் காணமுடிகிறது.

அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசியர்கள் முறையான கல்வித் தகுதி பெற்றவர்கள். அதைத் தவிர கற்பிக்கும் பயிற்சி பெற்றவர்கள். அரசுப் பள்ளிகளில் கல்விக் கட்டணம் ஏதும் கிடையாது. இலவச மதிய உணவு, இலவச சீருடை, இலவச நோட்டுப் புத்தகங்கள் இவையெல்லாம் வழங்கப்படுகின்றன. இருந்தபோதிலும், ஏழை பெற்றோர்கள்கூட ஏன் இவற்றை யெல்லாம் விட்டுவிட்டு தனியார் பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்புகிறார்கள்? இதைத் தீவிரமாக ஆராய வேண்டும்.

இந்தக் கருத்து உருவானதற்கு அரசின் கல்விக் கொள்கைகள் ஒரு மோசமான நிலையில் இருப்பதுதான் என்று சொல்லத் தேவையில்லை. உண்மையிலேயே பெரும்பாலான தனியார் பள்ளிகள் சில ஆண்டுகளுக்கு முன் கொடிய தீ விபத்து நிகழ்ந்த, கும்பகோணம் பள்ளியைப் போல்தான் உள்ளன. ஆனால் பொதுமக்கள் மத்தியில் ‘அனைத்து தனியார் பள்ளிகளும் உயர்ந்தவை. அனைத்து அரசு பள்ளிகளும் தரம் குறைந்தவை’ என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. உண்மையில் ஒருசில தனியார் பள்ளிகள்தான் சிறந்த முறையில் இயங்குகின்றன. அவை மொத்தத்தில் 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும்.

2007-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழ்நாட்டில் 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள துவக்கப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 34,342. இவற்றில் 24,310 பள்ளிகள் அரசுப் பள்ளிகள். அரசு உதவி பெறும் பள்ளிகள் 5,037. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் 4,995. அதேபோல் நடுநிலைப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 8,718. இவற்றில் 6,487 அரசுப் பள்ளிகள். அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் 1,679. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் எண்ணிக்கை வெறும் 552தான். மொத்தமாகப் பார்த்தால் துவக்கக் கல்வி நிலையில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 13 சதவிகிதம்தான். அவற்றில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையும் இதே அளவில்தான் உள்ளது.

ஆக 80 விழுக்காட்டிற்கும் அதிகமான குழந்தைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். இப்படி பெரும்பான்மை மக்களின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்துவதிலும், அதற்கான பாதுகாப்பை வழங்குவதிலுமே அரசு செயல்படுகிறது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான எந்த திட்டமும், நடவடிக்கையும் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. பல அரசுப் பள்ளிகளும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளிக் கட்டடங்கள் இல்லாமல் கேடுகெட்ட நிலையில் இருக்கின்றன.

அரசின் அலட்சியப் போக்கின் காரணமாகவும் ஆங்கிலப் பள்ளிகளின் மீது ஏற்பட்டுள்ள மோகத்தின் காரணமாகவும் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து பள்ளிகளை மூட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருத்தணியை அடுத்த குப்பம்கண்டிகை கிராம தொடக்கப் பள்ளி.

இப் பள்ளியில் கடந்த ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் தற்போது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 32 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் உள்ள ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

இதேநிலைதான் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. எந்தத் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கும் கிடைக்காத நிதி வசதி சென்னை மாந கராட்சிக்கு இருக்கிறது. சென்னை மாநகராட்சி தற்போது ஒவ்வோரு ஆண்டும் சுமார் 70 கோடி ரூபாய் துவக்கக் கல்வி வரியாக, சொத்துவரி செலுத்துபவடமிருந்து வசூலிக்கிறது. அவ்வாறு வசூலித்தத் தொகையை முழுவதும் செலவழிக்கப்படாமல் கையிருப்பில் உள்ள தொகை சுமார் ரூ. 120 கோடியாகும்.

சென்னை மாநகராட்சி 300 பள்ளிகளை நிர்வகித்து வருகிறது. இதில் சுமார் 250 பள்ளிகள் துவக்க நடுநிலைப் பள்ளிகள்தான். தற்போது மாநகராட்சி கையிருப்பில் உள்ள தொகையைக் கொண்டு 300 பள்ளிகளிலும் தலா ரூ. 40 லட்சம் வீதம் உள்கட்டமைப்பு வசதிக்காக உடனடியாகச் செலவழிக்கலாம். அதைத்தவிர வசூலிக்கும் துவக்கக் கல்விவரியைக் கொண்டு ஒவ்வோரு ஆண்டும், ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ. 20 லட்சம் செலவு செய்யலாம். இவ்வாறு செய்தால் எந்தத் தனியார் பள்ளியிலும் கிடைக்காத வசதிகளை மாநக ராட்சிப் பள்ளிகளில் செய்து கொடுக்க முடியும். ஆனால், மாநகராட்சி இன்றுவரை இதைச் செய்ய முன்வரவில்லை என்பதுதான் வருந்தக்கூடிய விடயம்.

அதைவிட கொடுமையான விடயம் கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போதிய மாணவர்கள் சேரவில்லையென்று, 30 பள்ளிகளை தமிழக அரசு மூடியுள்ளது. போதிய மாணவர்கள் சேரவில்லையென்பது, எவ்வளவு பெரிய பொய் என்பது பின்வரும் செய்தி சொல்லும்.

கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2,500 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையோ, வெறும் 8 பேர்கள்தான். அதாவது, 300 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்!! அப்பள்ளியில், போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர் சேர்க்கையையே நிறுத்திவிட்டனர். அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு போதிய மாணவர்கள் சேராதது காரணமா? அல்லது ‘அரசு பள்ளிகளை மூடவேண்டும்’ என்பது அரசின் கொள்கை காரணமா? என்பது விளங்க முடியா விடுகதையாக இருக்கிறது.

மாநகராட்சி பள்ளிகளின் மூடல் பற்றி மாமன்ற உறுப்பினர்களோ அல்லது வரி செலுத்தும் குடிமக்களோ ஏன்? என்று மாநகராட்சியை கேட்கவில்லை. இந்தநிலை சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் நடந்து வருகிறது. கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய அய்ந்து மாநகராட்சிகளில் கையிருப்பில் இருக்கும் துவக்கக் கல்விவரி நிதி தலா ரூ. 53.57 கோடியாகும். இவற்றை பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உள்கட்டமைப்பிற்கு பயன்படுத்தாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலை திடீரென்று ஏற்பட்டதல்ல. மாநகராட்சி, கல்வித்துறை, ஆசியர்கள், வரிசெலுத்தும் குடிமக்கள் ஆகியோர் பல ஆண்டுகளாகக் காட்டிய அக்கறையின்மையினால் வந்த விளைவுதான் இது. திருநெல்வேலி மாநகராட்சியில், மாநகராட்சியின் மையப்பகுதியில் - நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 250 மிட்டர் தொலைவில் - உள்ள மாநகராட்சி சிந்துபூந்துறை நடுநிலைப் பள்ளியில் 8 வகுப்புகளுக்கும் சேர்ந்து 6 மாணவர்களும் ஓர் ஆசிரியையும் இருக்கிறார்கள். ஏறத்தாழ ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பள்ளி இருக்கிறது. ஒரு காலத்தில் 400 - 500 மாணவர்கள் படித்த பள்ளிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறது.

இந்தப் பள்ளிக்கு எதிரிலேயே அண்மையில் தொடங்கப்பட்ட தனியார் பள்ளியில் பல மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த மாநகராட்சிப் பள்ளியை இடித்து அங்கு ஒரு திருமண மண்டபம் கட்டுவதற்கான ஆலோசனையும் பரிசீலிக்கப்பட்டது. ஏற்கனவே சென்னை தியாகராயர் நகர் ஜி.என். செட்டி சாலையில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியை இடித்துவிட்டுத்தான் அங்கு பிட்டி தியாகராயர் கலையரங்கம் கட்டப் பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அவலநிலை தமிழ்நாட்டில் கடந்த 20 - 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கல்வி வளர்ச்சியில் அரசு தகுந்த அக்கறை காட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களோ சற்றேனும் சமூக அக்கறையோடு செயல்படுவதாகத் தெரியவில்லை. தங்களது பணிப்பாதுகாப்பு, சம்பளம் ஆகியவற்றில் காட்டும் அக்கறையை கல்வி வளர்ச்சியில் காட்டுவதில்லை. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் இன்றைக்கு 30ஆயிரம், 40ஆயிரம் என்று ஊதியம் பெற்றுக் கொண்டு தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு அனுப்பிவிடுகின்றனர். அதாவது ஊதியம் வாங்குவதற்கு அரசுப் பள்ளி என்றும் தன்பிள்ளைகள் படிப்பதற்கு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் என்றும் சுயநலப் போக்கோடு செயல்படுகிறார்கள் என்பது கண்கூடு.

இதுபோன்ற பல பிரச்சனைகள் அரசுப் பள்ளிகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் செயல்வழிக் கற்றல், சமச்சீர் கல்வி போன்றவற்றை அரசு கொண்டு வருகிறது. இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாலும் அதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசு தனது கல்விக் கொள்கையை சீரிய முறையில் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளியைப் பொறுத்தமட்டில் கிராம ஊராட்சிக்கு அதற்கான பொறுப்பும், உரிமையும் அளிக்கப்பட வேண்டும். ஆசியர்களும் தங்களது தகுதி, பயிற்சி, ஊதியம் ஆகியவற்றுக்கு ஏற்ப அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கல்வித்துறை அரசுப் பள்ளியை புகழ்பெற்ற தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்துக்குக் கொண்டு வருவதைப் பற்றி சிந்தித்து சீய முயற்சிகளை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக அந்தந்தப் பகுதியிலுள்ள படித்தவர்கள் தத்தம் பகுதியில் உள்ள அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் இயங்குவது பற்றி ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் கல்வி என்பது அனைத்து மக்களுக்கும் சீரான முறையில் சென்றடையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

வேண்டுதல் வேண்டாமை - 5 - கோவன் மகன்


டுக்கப்பட்ட மக்கள்மேல முதல்வர் கலைஞருக்கு எப்பவுமே தனிப்பிரியம் இருக்குங்கறத அடிக்கடி வெளிப்படுத்தறாரு. அவிங்கமேல காட்டற அன்பு நாளுக்குநாள் அதிகமாகுதே தவிர கொறஞ்சபாட்டக் காணோம். குறிப்பா அந்த ஒடுக்கப்பட்ட மக்களோட விழாக்கள்ல கலந்துகிறதுன்னா கலைஞருக்கு ஒரே கொண்டாட்டந்தான் போங்க.

இப்படித்தாங்க சமீபத்துல தன்னோட அறிவார்ந்த நாடகத்து மூலமா பண்பாட்டையும், பகுத்தறிவையும்(!) மக்கள் மனசுல விதைச்சுட்டு வர்ற ஒடுக்கப்பட்ட மக்களின்சமூகப் போராளிஎஸ்.வி.சேகரோட நாடகத்தப் பாத்த நம்ம முதல்வரு அப்படியே அசந்து போயி புகழோ புகழுனு புகழ்ந்து தள்ளிட்டாரு.

எப்படிங்கறீங்கபத்து - பதினைந்து காட்சிகளாயினும் அதிலே நூற்றுக் கணக்கான காட்சிகளிலே ரசிக்கின்ற கருத்துகளைமருந்து கேப்சூல்போல வைத்துக் கொடுக்கின்ற அந்தத் திறமையை நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்குப் பிறகு இன்றைக்கு எஸ்.வி.சேகரிடம்தான் காண் கிறேன்னு அட்டகாசமா சொன்னாருங்க.

அதாவதுநடிகவேள்எம்.ஆர். ராதா மாதிரியே சமூக சிந்தனை கொண்டவரு இந்தசிரிப்புக் கோமாளி’(அய்யய்யோ டங்க் சிலீப்பு ஆரம்பிச்சிடுச்சே..) ‘சமூகப் போராளிஎஸ்.வி.சேகருன்னு ரொம்ப சரியா சொல்லாம சொல்றாரு நம்ம முதல்வரு.

அதுமட்டுமில்லீங்க ஏற்கனவேகடியுலக(சாரிங்க) நடிப்புலகச் சக்கரவர்த்திஒய்.ஜி.மகேந்திரனோட நாடக விழாவுக்குப் போன கலைஞர்நடிகர் திலகம்சிவாஜி மாதிரியே நடிக்கறாருன்னு பாராட்டிட்டு வந்தாரு. அந்தளவுக்கு அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் அவருக்கும் ஒருநூல்பிணைப்பு இருக்குங்க.

அந்த நூல்களின் பாசத்துல சுருக்குப் போட்டுத் தொங்கறதுக்கு (எத்தன தடவ சொன்னாலும் என் நாக்கு மாறுலீயே) இறுக்கமாகறதுக்கு எனக்கு தெரிஞ்ச சில யோசனைய தலைவர் கலைஞருக்கு சொல்லலாம்னு நெனைக்கிறேன். ஒய்.ஜி.மாகேந்திரன், எஸ்.வி.சேகர்னு பாராட்டுனவிங்க பட்டியல் போதும்னு விட்றாம பகுத்தறிவுத் தந்தை பெரியாருக்குப் பிறகு ஜாதி ஒழிப்புக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிட்ருக்கற ஒரே தலைவர் காஞ்சி மகா பேடிவா (அடக் கருமமே என்ன நாத்தம் புடுச்ச வாயிடாயிது மன்னிச்சுகோங்க) காஞ்சி மகா பெரியவா ஜெகத் குரு சங்கராச்சரின்னு அவரு நடத்தற விழாக்கள்ல கலந்துகிட்டு பாராட்டலாம்.

அடுத்ததா குஜராத் முதல்வரு நரேந்திர மோடிய கூப்ட்டு எர்னாஸ்டோ சேகுவேரா மாதிரியே அடிமை விலங்குடைக்க பாடுபடறபுரட்சி நாயகன்னு பாராட்டுத் தெரிவிக்கலாம். இல்லீன்னா வாழ்ந்து கெடுக்கும் இனப் பிறவி நாம.கோபலன்(நெசமாலுமே நாக்குதாங்க பிரச்சன பண்ணுது) வாழும் வீரத் துறவி ராம.கோபலனை காரல் மார்க்ஸ் மாதிரியே உழைக்கும் வர்க்கத்துக்காக போராடுறசமத்துவ நாயகன்பாராட்டுலாம்.

இப்படியெல்லாம் அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தான் செய்யவேண்டியக் கடமை தனக்கு இருக்குன்னு கலைஞருக்குத் தெரியும் இருந்தாலும் சொல்ல வேண்டியது என்ற கடமையில்லீங்களா அதனால சொல்ற சொல்லிபுட்டேன். கேட்டாக் கேளுங்க இல்லீன்னா காத ரெண்டையும்மூடிட்டுபோங்க. என்ன நாஞ்சொல்றது.

ன்னோட 87-ஆவது பிறந்த நாளுக்காக தமிழக முதல்வரான கலைஞரு செஞ்ச சாதனைய பத்திரிகைகள்ல பாத்து அப்படியே எனக்கு புல்லரிச்சுப் போச்சுங்க(அப்பற அந்தப் புல்ல மாடு வந்து மேஞ்சிட்டுப் போச்சு அது தனிக்கத. அத அப்பறஞ் சொல்றேன்).
பின்ன என்னங்க தான் வாழ்ற வீட்ட மக்களோட பயன்பாட்டுக்கு வாரி வழங்கற ஒம்பதாவது வள்ளல் கலைஞரு (எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆருன்னு சொல்றதால) மாதிரி ஒருத்தர நீங்க எங்காவது பாக்க முடியுமாங்க.

வேற ஒன்னுமில்லீங்க ஏழை மக்களுக்கு பயன்படட்டும்னு உயர்ந்த நோக்கத்துல இலவச மருத்துவமனையா (கண்டிப்பா கலைஞர் காப்பீட்டுத் திட்டத் துக்கும் இதுக்கும் சம்பந்தமில்லீங்க) செயல் படட்டும்னு தன்னோட கோபலபுரத்து வீட்ட கொடுத்துட்டாரு.
எப்படின்னா கலைஞருடைய அம்மா பேர்லயேஅன்னை அஞ்சுகம் அறக் கட்டளைன்னு ஒன்ன ஆரம்பிச்ச கலைஞரு அந்த அறக்கட்டளைக்கு எழுதிக் குடுத்துட்டாரு.

வழக்கமா இந்த மாதிரி செய்தியப் படுச்சதும் ஏதாவது குதர்க்கமா பேசற பொன்னுத் தம்பி இந்தத் தடவயும் நக்கலா பேசறாரு. என்னான்னுஏம்பா, அவரு வீட்ட அவரோட அறக்கட்டளைக்கு அவரே கொடுத்து, அவரே வாங்கிட்டா, அந்த வீடு அவருகிட்டயே இருக்கற மாதிரிதானப்ப அர்த்தம். இதிலென்னப்பா புதுசா வள்ளல் பட்டம்னு கேக்கறாருங்கன்னா.

இந்த பொன்னுத்தம்பி சொன்னதுக்கப்பறம் எனக்கு தலையும் புரியல வாலும் புரியல. ஆனா, ஒன்னு மக்களுக்காக தான் குடியிருக்கற வீட்ட கொடுத்திட்டாருங்கற தைரியத்துல யாரும் ஏழை மக்கள் வருமானத்துக்கு கலைஞர் தொலைக்காட்சிய எழுதிக் கேட்றாதீங்க. ஏன்னா அந்த நிறுவனம் ஏற்கனவே அவரு குடும்ப அறக்கட்டளைலதான இருக்கு.

ஸ்காட்லந்து போலீசுக்கு அடுத்துத் திறமையான போலீசு தமிழ்நாட்டுப் போலீசுதான்னு நமக்குத் தெரியும். அதிலியும் சென்னை மாநகரக் காவல் துறையப் பத்தி சொல்ல வேண்டியதில்ல. ஏன்னா? அந்தளவுக்கு குற்றங்களை களையறதுல அயராது பாடுபடுது. குறிப்பா சொல்லணும்னா சட்ட ஒழுங்கக் காக்கறதுக்காக அவதாரம் எடுத்துருக்கற கூடுதல் ஆணையாளரு ஷகில் அக்தர் குற்றவாளிகள மோப்பம் பிடிக்கறதுல கெட்டிக்கறாருங்க. எப்படிங்கறீங்களா?

சென்னை நகருல குற்றம் அதிகமாகறதுக்கு காரணம் என்னன்னு பொறுப்புக்கு வந்தவுடனேயே கண்டுபிடிச்சுடாருன்னா அவரு தெறமைய என்னன்னு சொல்றது. அவருடைய அரியக் கண்டுபிடிப்ப் என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

அதாவது சென்னையில நடக்கற கொல, கொள்ள, பாலியல் வன்கொடும, கலவரம்னு நடக்கறதுக்குக் காரணமே மெரினா கடற்கரையிலக் காதலர்கள் ஜோடியாடச் சுத்தறதுதான்னுக் கண்டுபிடிச்சு சொல்லியிருக்காரு. (நல்லவேள தீவிரவாதம் அதிகமாகறதுக்கும் அவிங்க காரணமில்லீன்னு நெனைக்கிறேன்.) அதனால கடற்கரைக்கு வரும் ஜோடிகள மோப்பம் பிடிக்கறதுக்குன்னு ஏகப்பட்ட (நாய்களல்ல) காவலர்கள ரோந்து விடப்போறதா ஒரு பேட்டியில சொன்னாரு. (இந்த உலக மகா சிந்தனைக்கே அவருக்கு விருது கொடுக்கலாம்) இப்படி காதலர்கள் பின்னால அலைஞ்சாலாவது சட்டத்தையோவிட்டத்தையோ காப்பாத்தலாம்னு நெனைக்கிறாங்க போல.

வேண்டுதல் வேண்டாமை - 4 - கோவன் மகன்


ப்பாடா கடந்த ஒன்ற மாசமா நடந்திட்டு இருந்த நாடகம் ஒரு வழியா முடிஞ்சிருச்சுங்க. இதுக்கு முன்னால இந்த நாடகத்த ரெண்டு தடவ நடத்தியிருக்காங்க. இப்ப நடந்து முடிஞ்சது அந்த நாடகங்களோட மூனாவது பாகம். ஏற்கனவே நடத்திய நாடகத்துக்கு கிடைச்ச வருமானத்தவிட அதிகமான வருமானமும்; வரவேற்பும் இப்பகிடச்சிருக்குங்கறதுல இதன் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ரொம்ப சந்தோசந்தான்.

சாதாரணமா நாமபாக்குற நாடகத்துக்கும் இந்த நாடகத்துக்கும் என்ன வித்தியாம்னா? சராசரி நாடகமெல்லாம் ஏதாவது கலையரங்குல நடக்கும். இல்லீனா, டிவியில சீரியல்ன்ற பேருல ஒளிபரப்புவாங்க. ஆனா, இந்த மெகா நாடகம் மட்டும் மைதானத்துல அதாங்க கிரவுண்ட்ல நடக்கும். இந்த நாடகத்தப் பாக்குற பைத்தியங்க மன்னிக்கோணும் ரசிகருங்க இந்தியாவுல (மட்டும்) அதிகங்கறதனால, கலையரங்குல எடம் பத்தாதுனு மைதானத்துலு நடத்தறாங்க. இந்த நாடகத்தின் தயாரிப்பாளர் எதிர்பார்த்த மாதிரியே ஏகப்பட்ட கூட்டம். பல பேத்துக்க டிக்கிட்டே கிடைக்கிலீனா பாத்துக்கோங்க.

அதனால, நேரடியாப் பாக்கக் கொடுத்து வைக்காதவிங்களுக்கு நல்ல வாய்ப்பா டிவியிலயும் காட்டுனாங்கன்னா எந்தளவுக்கு இந்த நாடகத்துக்கு மதிப்பு இருக்கும்னு நீங்களே ரோசன பண்ணிக்கோங்க. அட இவ்ளோ நேரமா அந்த நாடகத்தோட பேரு என்னான்னு சொல்லல பாருங்க. அய்பிஎல் டொண்ட்டி 20 (IPL-20) என்கிற இந்த நாடகத்து நடிகருங்க ஒவ்வொருத்தரும் கிரிக்கெட் வீரருங்க கணக்கா என்னமா ஆக்டிங் குடுக்கறாங்க.

பந்த அடிக்கற மாதிரியே அவுட்டாகறது, ஜெயிக்கற மாதிரி வந்து தோக்கறது, தோக்கற மாதிரியே நடிச்ச ஜெயிக்கறதும் அப்பப்பா.... சொல்லு போதே நமக்கு கண்ணக் கட்டுதே. அந்த கிரவுண்டுல அவிங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.

ஆனா, சும்மா சொல்லக்கூடாதுங்க. அவ்ளோகஷ்டப்பட்டு நடிச்சாலும் அதுக்கு தகுந்த கூலிய கோடியில வாங்கியிருக்காங்கன்னு தெரிஞ்ச பின்னால நமக்கு பெருமைதாங்க.அதேமாதிரி இந்த நாடகத்த தயாரிச்ச மோசடி மன்னன் அய்யய்யோ மன்னிச்சிடுங்க லலித் மோசடி அண்ணன் ரசிகருங்க எதிர்பார்க்கற மாதிரியும், பைனான்சியருங்க மனங்குளிர்ற மாதிரியும் ரொம்பவுந்தன் சிரமம்பட்டிக்காரு. அதுக்கு, பலனா அவருக்கும் ஓரளவுக்கு லாபம் கிடைச்சிருக்கு.

இது பொறுக்க முடியாதா அவரோட பார்ட்னருங்க சிலரு தங்களுக்கு லாபத்துல பங்குதரலைன்னு கோவிச்சுக்கிட்டு அந்த நாடகக் கம்பெனியிலிருந்தே அவர துரத்திட்டாங்க. இருந்தாலும் அய்பிஎல் நாடகக் கம்பெனியின் மத்த பார்ட்னருங்க சில பேரு இந்த மோசடிக்கு (நாக்குதாங்கக் கொளறுது) மோடிக்கு ஆதரவா இருக்காங்க.

அவிங்கள்ல ரொம்ம முக்கியமானவாரு இந்தியக் குடிமக்களோட தாகத்தத் தீக்கறதுக்காவே ‘தண்ணி’ கம்பெனி நடத்திட்டு இருக்கற விஜய் கொள்ளையாவும் (அடச்சே. . . என்னடாது இப்படி டங்க் சிலிப்பாடுது) விஜய் மல்லையாவும், சமூக சேவகிகங்க ஷில்பா ஷெட்டியும், ப்ரீத்தி ஜிந்தானு பல பேரு லலித் மோடிக்கு ஆதரவா இருக்காங்க. எப்படியோ இந்த அய்பிஎல்ங்கற நாடகக் கம்பெனி நல்லபடிய நடந்து மேலும் சிறப்பான நாடகங்களை நடத்துனாப் பரவாயில்லினு நெனைக்கிறேன். ஏன்னா, இந்த நாடகம் அரங்ககேற்றத்தின் மூலமா கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடிக்கு மேல வருமானம் புலஙகுது.

இந்த வருமானத்துக்குத்தான் பல உச்சிக்குடுமி நூலுங்க நடிக்கிறாங்க. குறிப்பா ராகுல் டெமி்ட், கருங்காலி, பண்டுல்கர், தும்முளேன்னு அத்தனை ஏழைகளும் இந்த அய்பிஎல் மாதிரியான நாடகத்த நம்பத்தான் கெடக்கறாங்க. அவா ‘நம்ம வாயில மண்ணள்ளி போடற மாதிரி, ‘அவா ’ வாயில்லேயும் மண்ணள்ளி போட்றாதீங்க அது ரொம்ப ‘பாவம்’....!

ரொம்ப நாளா பயன்படுத்திட்டு இருக்கற என்னோட பழய செல்பேசிய அதாங்க மொபைல மாத்திட்டு புதுசா ஒன்னு வாங்கலாம்னு நெனச்சேன். செல்போனுக் கடக்காரங்க ஒவ்வொருத்தரும் கொடுக்கற விளம்பரத்தப் பாத்த நமக்கே ஆச்சரியமா இருக்குது ஒன்னு வாங்குனா ஒன்னு இலவசம்னு ஒரு பக்கம் விளம்பரம்.இன்னொரு பக்கத்துல சிம்கார்டு இலவசம்னு ஏகப்பட்டது ஏங்கண்ணுல பட்டுச்சு. ஒரேக் கொழப்பம் நமக்குத் தேவை நல்ல செல்போனு அத எங்க வாங்கறதுன்னு யோசிச்சப்ப. அந்த நேரத்துல தான் என்னோட நண்பன் ரவுசு ரமேசு வந்தான். என்னப்பா ஒரே ரோசனைய இருக்கறாப்ல இருக்குது. என்ன விசயம்னு அக்கறைய கேட்டான்.

நானும் விசியத்த சொன்னேன். சும்மாவே அவனுக்கு ஏகப்பட குசும்பு இந்த செல்போன் வாங்கறதப்பத்தி சொன்னதும் கொஞ்சம் கூடுதலாவே ஆரம்பிச்சுட்டான்.‘ஏனப்பா இதுக்குப் போயி யாராவது இவ்ளோ யோசன பண்ணுவாங்களா... கௌம்புப்பா’ன்னு அதிரடியா சொன்னான். “நானும் அடதென்னப்பா திடீர்னு கெளம்புனா எங்க கௌம்பர்றது’’ன்னு கேட்டேன்.

“நல்ல செல்போன வெல கொறச்சலா உள்ளூர் மட்டுமில்லாம, வெளிநாட்டுக்கும் பேசற மாதிரி வசதியுல்ல புது மாடல் போனா வேலூர்ல கிடைக்கும் சீக்கிரம் கௌம்புப்பா’’னு அவசரப்படுத்தினான். எனக்கு தாங்க முடியாத ஆச்சரியம் என்னடாது சென்னையிலேயும், கோவையிலேயும் இல்லாத புது மாடல் வேலூர்ல மடடு எப்படி இருக்கும்னு. இதையே அவங்கிட்டையும் கேட்டேன்.

அதுக்கு அவஞ்சொல்றான் “அடப் போடா போக்கத்தவனே ஒரு வாரமா வேலூர்ல புது டெக்னாலஜி கொண்ட செல்போனு இருக்குன்னு சட்டமன்றத்துலேயே பேசிக்கறாங்க இதப்பத்தி உனக்குத் தெரியலியேன்’னு திட்றான். எனக்கு இன்னும் ஆவலா போச்சு, ‘ஏன்டா வேலூர்ல புது செல்போனு கெடைக்கறதப் பத்தியெல்லாமா சட்டமன்றத்துல பேசிக்குவாங்க’னு கேட்டுகிட்டே ரவுசு ரமேசோட பேருந்து நிறுத்தத்துக்கு அதாங்க பஸ் ஸ்டாண்டடுக்குப் போனேன். போறப்பவே அடக்க முடியாத ஆவலோட மீண்டும் கேட்டேன். ‘ஏம்பா புது செல்போனு வாஙகப் போறமே வேலூர்ல எந்த இடத்துலேன்னு விசாரிச்சிட்டியா...? அந்த இடம் உனக்கு தெரியுமா...-? ன்னு கேட்டேன். ‘நீ உம் பேர கோவன் மகன் வெச்சகிட்டதுக்கு கோமுட்டித் தலையன்’னு வெச்சிருக்கலாம். வேலூர்ல புது செல்போனுங்க கூரு கட்டி விக்கற எடம் வேலூர் ஜெயில்னு தமிழ்நாட்டு மக்கள்ல பல பேருக்கு தெரியும். உனக்கு இன்னும் தெரியலியே’ன்னு தலைல அடிச்சுகிட்டான்.

அதக் கேட்டதும் யாரோ எங்காதுல வெடிகுண்டத் தூக்கிப் போட்ட மாதிரி இருந்துச்சு. ஆனா, அவஞ் சிரிச்சுகிட்டே, ‘வேலூர் ஜெயில்லதான் செல்போனுங்க ரொம்ப சீப்பா கெடைக்கும். தீந்து போறதுக் குள்ள சீக்கிரம் போய் வாங்கலாம வாடா’ன்னு சொன்னாம் பாருங்க எனக்குத் தலையே சுத்த ஆரம்பிச்சது. ‘ஜெயில்ல எப்படிடா செல்போனு கெடைக்கும்’னு கேட்டேன்.

‘பத்தொன்பது வருசமா ஜெயில்ல ஆயுள் கைதியா இருக்காங்களே நளினி அவிங்களுக்கு திடீர்னு ஒரு செல்போன் கெடச்சதுன்னும், அது மூலிமா லண்டன், கனடான்னு பல வெளிநாடுகளுக்கு பேசியிருக்காங்கன்னு தமிழ்நாட்டுல மட்டமானத்துறை அமைச்சர் மன்னிச்சுக்க நாக்கு வறண்டுப் போச்சு அதாங் கொளறுது. சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் சொல்லியிருக்காரு’ங்கறான்.

‘கைதிகளுக்கு செல்போனு ஈஸியா கெடைக்கற அளவுக்கு ஜெயில்ல செல்போன் விக்கறவிங்க யாருப்பா?’ன்னு நானும் உடாம கேட்டேன். அப்பத்தான் ஆகா இவன் நம்மள எங்கயோ வம்புல மாட்டத்தான் பாக்குறான்னு நெனச்சுட்டு கழிப்பறை போறதாச் (அதாங்க டாய்லெட்டு) சொல்லிட்டு காம்பவுண்ட எட்டி குதிச்சு அவங்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன்.

அப்ப எனக்கொரு யோசன வந்தது. என்னமோ அந்தம்மா ரொம்ப ஆபாத்தானவி்ங்கன்னும் அவிங்கள வெளிவி்ட்ட சட்டமோ விடடமோ உளுத்துப் போயிரு்ம்னு சொல்லி 19 வருஷமாஅடச்சு வெச்சு தீவிரமா கண்காணிக்கறவிங்களுககு தெரியாம நளினிக்கு செல்போன கொடுத்த புண்ணியவான் யாராயிருக்கும்? ஒரு வேள கண்டுபுடுச்சவிங்களே வெளையாட்டுத்தானமா ஒளிச்சுவெச்சிருப்பாங்களோ? எனனமோ போங்க இதெல்லாம் நம்ம தமிழினத் தலைவருக்குத்தான் வெளிச்சம்.

கிரிக்கெட் சூதாட்டம் வினையான விளையாட்டு


பதினோரு கோமாளிகள் விளையாட பத்தாயிரம் முட்டாள்கள் ரசிக்கிறார்கள்என்று கிரிக்கெட் பற்றி மிகச்சரியாக கணித்துக் கூறியவர் அறிஞர் பெர்னாட் ஷா. அவரின் கூற்று எந்தளவுக்கு உண்மை என்பது இந்தியாவில் மற்ற விளையாட்டுகளுக்கு ஏற்பட்டுவரும் நிலையை பார்த்தாலே புரியும்.

உலகளவில் அதிகமான மக்களால் ரசிக்கப்படுவதும், அதிக நாட்டினரால் விளையாடப்படுவதுமான கால்பந்தாட்டத்தில், இந்தியா இன்று வரை உலக கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதிச் சுற்றுக்கே தகுதி பெற்றதில்லை என்கிற அவலம்.

ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெயரறிய நாடுகளெல்லாம் பதக்கங்களை வாரிக்குவித்து அந்தந்த நாடுகளுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்க இந்தியா மட்டும் ஒற்றைத் தங்கம் வாங்குவதற்கே தகிடுதத்தம் போடுகிற கேவலம்.

ஒரு காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று வாயளவில் மட்டுமே சொல்லப்படுகிற ஹாக்கி இன்றைக்கு இருக்கும் இடம் தெரியாமல் தேய்ந்து போகும் பரிதாபகரம்.

இப்படி உலகின் பெரும்பாலான நாடுகளில் பெரும்பான்மை மக்களால் விளையாடப்படும் ஆரோக்கியமான அறிவுப்பூர்வமான எந்த விளையாட்டும் இந்தியாவில் வளர்ச்சி பெறவில்லை அல்லது வளர்க்கப்படவில்லை. அதற்குக் காரணம் என்ன என்று அறிவது மிக எளிதான ஒன்றுதான்.

இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் விளையாட்டாக விளைவிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மீதான மோகமும், அதனுடைய வளர்ச்சியும்தான் மற்ற எந்த விளையாட்டும் இங்கே எழுச்சி பெறாமல் போனதற்கான காரணம்.

இந்தியத் துணைக் கண்டம் பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்தபோது அந்த நாட்டு பிரபுக்கள் தங்களது பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டதுதான் கிரிக்கெட் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் தொடர்பில்லாத இறக்குமதி செய்யப்பட்ட இந்த விளையாட்டு ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் அவலம் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடையாது.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திற்கு ஆட்பட்ட நாடுகளில் மட்டும்தான் இன்றைக்கு இந்த மட்டைபந்து எனப்படும் கிரிக்கெட் விளையாட்டு அதிகப்படியாக ரசிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்தியாவில்தான் இந்த கிரிக்கெட் பித்தர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கிரிக்கெட் பற்றி பேசினால் மேதாவிகள் என்கிற போக்கு உருவாகி இருக்கிறது. இந்தியாவின் பல வீர விளையாட்டுகளை புறந்தள்ளிவிட்டு மக்களை இந்த கிரிக்கெட்டிற்குள் சுருட்டிய புண்ணியவான்கள் பார்ப்பனர்களைத் தவிர வேறுயாராக இருக்க முடியும்.

எப்பொழுதும் கடினப்படாமல் மற்றவர்களை ஏய்த்து பிழைப்பதையே தொழிலாகக் கொண்ட இந்த உச்சிகுடுமிகள் இங்கிலாந்து பிரபுக்களிடம் இருந்ததை இரவல் வாங்கி கிரிக்கெட்டில் கோலோச்சி விட்டனர். இந்தியாவில் கிரிக்கெட் புகழ் பெற்றது முதல் இன்று வரை அவர்களின் ஆதிக்கமே நிலைத்திருக்கிறது.

சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார், ஸ்ரீகாந்த் என்று தொடங்கி சச்சிடெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், கும்ப்ளே என்று கிரிக்கெட் பூணூல்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே இருக்கிறது. 11 பேர் விளையாடும் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 8 பேர் பார்ப்பனர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.
ஏற்கெனவே ஊடகத்துறையை கையில் வைத்திருக்கும் பத்திரிக்கைப் பார்ப்பனர்கள் தங்களது இனஉணர்வின் காரணமாக கிரிக்கெட்டை புகழ்ந்து எழுதி வருகின்றனர். அத்தோடு லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட வணிக நிறுவனங்களும் தங்கள் பொருள்களை மக்களின் தலையில் கட்ட இந்த விளையாட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சுமார் 60 நாடுகளில் விற்கவேண்டியப் பொருள்களை கிரிக்கெட் மூலமாக விளம்பரப் படுத்துவதன் மூலம் இந்தியாவில் விற்க முடியும் என்பதைப் புரிந்து கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்த விளையாட்டிற்கு ஸ்பான்சர் என்ற பெயரில் பணத்தை வாரியிறைக்கின்றன.

பல்லாயிரம் கோடிகளை சொத்தாகக் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்ட அய்பிஎல் முழுக்க முழுக்க வரி ஏய்ப்பு பெருமுதலாளி பெருச்சாளிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட் சீனிவாசன் போன்ற தொழிலதிபர்களும், ஷாருக்கான், பிரித்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி போன்ற மும்பை திரைப்பட நட்சத்திரங்கள் என்ற அந்த சமூகப் போராளிகளின் எண்ணிக்கை கூடிக் கொணடே இருக்கிறது..!

கடந்த 2008 ஆம் ஆண்டு டிவென்டி20 என்ற பெயரில் இருபது ஓவர் மட்டைபந்துப் போட்டிகளைத் தொடங்கியது. தற்பொழுது மூன்றாவது ஆண்டாக போட்டிகளை நடத்திய நிலையில் இந்த விளையாட்டிற்கான சூதாட்டம் 5ஆயிரம் கோடிகளைக் கடந்து சென்றுள்ளது.

ஏற்கனவே கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போது (கவனிக்கவும் விளையாடும் போதல்ல) கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்று வந்தன. அந்த பெட்டிங்கையே மிஞ்சிவிடும் அளவுக்கு இந்த புதிய அய்பிஎல் சூதாட்டத்தில் களைகட்டி வருகிறது.

இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான தொலைக்காட்சி உரிமம் கூட மிகப் பெரிய தொகைக்கு விலைபோயுள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் ஆகியவற்றின் உண்மைத் தன்மை என்ன என்பதையும் ஆராய வேண்டியது கட்டாயமாகிறது.

இப்போது, அய்பிஎல் போட்டியில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாபம் கிடைப்பதால், இதில் அரசியல்வாதிகள் தற்போது பினாமி பெயர்களில் நுழைவது அதிகரித்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் ஆட்டத்துக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கின்ற ஒன்றை மட்டுமே முதலீடாக வைத்து, எந்த உழைப்பும் இல்லாமலேயே ஒரு கூட்டம் மிக எளிதாக, பல ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதிக்கும் என்றால் அதை இந்திய அரசு வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் என்றால் இதன் பின்னணி என்ன?

லாட்டரி டிக்கெட்டை ஒழித்து விட்டோம், சூதாட்டத்தை மக்கள் நலன் கருதித் தடை செய்து விட்டோம் என்று கூறும் அரசு, அந்த லாட்டரி சூதாட்டத்தைவிட மிகமோசமானதாக மாறிவரும் கிரிக்கெட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ அல்லது கிரிக்கெட் வாரியத்தை அரசு ஏற்று நடத்துவதற்கோ தயங்கு வதேன்? ஆட்சியாளர்களுக்கும் பங்கு போகிறதா என்ன?

ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு என இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. இந்திய கிரிக்கெட் அதை அய்பிஎல் ஏலம் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
இந்த வேளையில் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி அணியின் நிலையைப் பார்க்கும்போது வேதனையே ஏற்படுகிறது.? அண்மையில் சம்பள பாக்கி, சிறப்பாக விளையாடியதற்கான ஊக்கத்தொகை உள்பட தலா நான்கரை லட்சம் ரூபாய் தரக் கோரி இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள 22 பேரும் போராட்டம் நடத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

மொத்தமே 1 கோடி ரூபாய்தான். அதுகூட கைவசம் இல்லாமல் தவித்தது இந்திய ஹாக்கி சங்கம். பின்னர், அணியின் ஸ்பான்சரான சகாரா நிறுவனம் தந்த நிதியை வைத்து பிரச்னையைச் சமாளித்தது. தேசிய விளையாட்டுக்கு ஏற்பட்ட தேசிய அவமானம் இது.

ஆனால், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 50 லட்சங்கள் வரை காண்ட்ராக்ட் பேசப்பட்டு லட்சத்தில் புரளும் கிரிக்கெட் வீரர்கள் என்ற இந்த சூதாடிகள், அய்பிஎல் விளையாட்டின் மூலம் கோடிகளை அள்ளிச் செல்கின்றனர். இவைதவிர விளம்பரப் படங்களிலும் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் வறட்சியில் வாடும்போது கிரிக்கெட்டுக்கு மட்டும் ஏன் இந்தப் பணமழை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு இல்லை அது ஒரு தனி அமைப்பு. அந்த அமைப்பின் இப்போதைய சொத்து மதிப்பு ஆயிரக்கணக் கான கோடிகளில்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது சமச்சீராக இருக்க வேண்டும். விளையாட்டுக்கும் அது பொருந்தும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை இந்திய அரசே ஏற்று, கிரிக்கெட்டால் கிடைக்கும் பணத்தை மற்ற விளையாட்டுகளை மேம்படுத்தப் பயன்படுத்தினால் என்ன? என்பதே நம் கேள்வி.

கிரிக்கெட் இந்திய விளையாட்டு அல்ல; இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியான விளையாட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்திய பாரம்பரிய விளையாட்டுகளுக்கு இல்லாதது அவமானகரமானது.

இந்திய கிரிக்கெட் அணி ஏதாவது ஒரு கோப்பையை வென்றுவிட்டால் நாடாளுமன்றம் பாராட்டுகிறது. குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், அமைச்சர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்புகின்றனர். தமிழ்நாட்டு முதல்வரும் தமிழினத் தலைவருமான கலைஞர் தனது அயராதப் பணிகளுக்கிடையேயும் மைதானம் சென்று அய்பிஎல் போட்டியைப் பார்த்து ரசிக்கிறார்.

ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு புளகாங்கிதம் அடைகின்றன. கிரிக்கெட்டை போலவே மற்ற விளையாட்டுகளுக்கும் ஆதரவு தாருங்கள் என நாடாளுமன்றமோ, குடியரசுத் தலைவரோ, தலைமை அமைச்சரோ சொல்வதில்லையே ஏன்..? சம்பளபாக்கி கேட்கிறது ஹாக்கி; கோடிகளில் கொழிக்கிறது கிரிக்கெட். இந்தியாவின் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற ஜாதிய ஒடுக்குமுறை போலவே இதுவும் இந்திய விளையாட்டின் இருமுகங்கள். மாற வேண்டும் இந்நிலை.

வியாழன், 24 ஜூன், 2010

வேண்டுதல் வேண்டாமை -3 - கோவன் மகன்


(திரையுலகினர்க்கு நலவாரியம் அமைத்தது தொடர்பாக எழுதியது.)

கூத்தாடிப் பொழப்பாப் போச்சு ஜனங்க பாடுயிப்ப ததிங்கனத்தோம்.....

‘கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மனையில வைய்யின்னு’ சொல்றமாதிரி எதையெல்லாம் விமர்சிக் கோணும்னு நம்மாளுகளுக்கு வெவஸ்தையே இல்லீங்க. நாட்டு மக்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா ஓடோடிப்போயி அறிக்கை மூலமா தனது நெலப்பாட்ட தெரிவிக்கறவரு நம்ம கலைஞரு. அப்படிபட்டவரு சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு தோதா நல வாரியத்த அமைச்சாப் பாராட்டணுமுல்ல. அதவுட்டுட்டு ரொம்பத்தான் நக்கல் பண்றாரு இந்த பொன்னுத் தம்பி இது என்னங்க நியாயம்.

இதுவரைக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயனே இல்லாதவிங்களுக்கு தேவையில்லாம நலவாரியம் அமைச்சவரு கலைஞரு. முதன்முறையா நாட்டு நலனுக்காக தன்னோட உடல் பொருள் ஆவின்னு அனைத்தையும் அர்ப்பணிக்கிற சினிமாக்காரங்க ரொம்ப வறுமையில இருக்கறாங்கன்னுக் கேள்விப்பட்டு அவர்களுக்குனு ஒரு நலவாரியத்த அமைச்சுருக்காரு நம்ம முதல்வர். அந்த வாரியத்துக்கு தலைவரா செயதித்துறை அமைச்சரான பரிதி இளம் வழுதிய போட்டுருக்காரு.

எவ்ளோ முக்கியமான வாரியமா இருந்தா ஒரு அமைச்சரையே தலைவராப் போட்டிருப்பாரு நம்ம கலைஞருன்னு நம்மாளுங்க கொஞ்சங்கூட ரோசனையே பண்றதில்லீங்க. சினிமாக் காறங்கள்ல ரொம்ப அதிகமா கலைச் சேவை, உப்புமா, கேசரின்னு செஞ்சிட்டுருக்கற நடிகர், நடிகைகளை குளிர்விக்கற இந்த நலவாரியத்த மத்தவிங்க வேணா கிண்டல் பண்ணலாம் ஆனா, என்ர கருத்து என்னன்னா இது ரொம்ப அவசியங்கறேன்.

ஏன்னா சினிமாக்காறங்க ரொம்ப ஏழைங்கன்றத பல நேரங்கள்ல மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் தெரிவிச்சிருக்காங்க. குறிப்பா கலைச் சேவை புரியவந்த கேரளா, ஆந்திரா, இந்தி நடிகைகள் தங்களோட வறுமைய முதல்வர் புருஞ்சுக் கோணுங்கறதுக்காகவே கிழிஞ்சு போன உடையப் போட்டுகிட்டு விழாக்கள்ல கலந்துக் கறதும், கலை நிகழ்ச்சிகள்ன்ற பேருல கூத்தடிக்கறதும் (மன்னிக்கோணுங்க நெசமா நாக்குதாங்க கொளறுது) நடனமாடறதுமா தங்களோட வறுமைய காட்றாங்க. இப்படி அப்பட்டமா முதல்வருக்கும், மக்களுக்கும் காட்னா வயசான காலத்துல முதல்வரு என்னதாஞ் செய்வாரு பாவம்.

நடிகைக நெலம இப்படின்னா நடிகர்க நெலம படுமோசதாங்க. சம்பாதிக்கற பணத்துல வயத்தக்கட்டி வாயக்கட்டி கொஞ்சகொஞ்சமா சேத்து வெச்சு சின்னசின்ன வணிக நிறுவனத்தக் கட்டறதும், குப்பையும் கூளமுமா கெடக்கற எடத்த வாங்கிப் போடறதும், பெப்ஸி போன்ற உப்புசப்பில்லாத கம்பெனியில பங்குதாறார இருக்கறதுன்னு தங்களோட வறுமையை மென்னு முழுங்கிட்டு இருக்கறாங்க (இப்படி வறுமையில இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யணும்னு கட்சி வேற தொடங்கிறாங்க). இதையெல்லாம் காண சகிக்காத தமிழினத் தலைவரு தன்னோட நேரடிப் பார்வையிலேயே ஒரு வாரியத்த அமைச்சுட்டாரு.

தமிழ்நாட்டின் மூத்த குடிமகனான ஒருத்தருக்கு இதவிட வேற முக்கியமான மக்கள் பிரச்சன ஏதாவது இருக்குமானு என்ர ரோசனைக்கு தெரியிலீங்க. இத்தோடு சினிமாக்காறங்களுக்கு நாம செய்யவேண்டியது ஒண்ணு மில்லீன்னு கலைஞரு விட்றக் கூடாதுங்க. கொறஞ்சது மாசத் துக்கு ரெண்டு சினிமா நிகழ்ச்சிலீயாவது மறக்காம கலந்துக் கோணும். புதுசுபுதுசா பல விருதுகல அறிவிச்சு நடிகர்களின் சமூக அக்கறயப் பாராட்டி கொடுக்கோணும். பரிசு, பாராட்டு, பொன் முடிப்புன்னு வாரிவழங்கோணும்.

அத்தோடு கலைஞர் டிவியில மானாட மயிலாடங்கற மாதிரி பல டிவிகள்ல கோலாட கொரங்காடன்னு பல புதிய நிகழ்ச்சிய ஒளி பரப்போணும். அப்பத்தான் மக்கள் தங்களோட பிரச்சனைய மறந்துட்டு அரசு வழங்கிய டிவியில குடும்பமே உக்காந்துட்டு மகிழ்ச்சிய நிகழ்ச்சிய பாத்துட்டு இருப்பாங்க. அதனால நாட்டுல இருக்கற ஒட்டுமொத்த வறுமையும் ஒழியும்னு நாஞ்சொல்றது சரிதாணுங்களே?

பெரும்பாலன மக்களுக்குத் தெரிஞ்ச மொழிய கத்துக்கோணுங்கற அடிப்பட அறிவுகூட இல்லாம நம்ம தமிழ்மக்க இருக்கறத பக்கறப்போ வயிறுப்பத்திக்கிட்டு எரியுதுங்க. பரந்த மனப்பான்மைங்கறது கொஞ்சங்கூட இல்லாம இனம், மொழினு குறுகிப்போயி கிடக்கறாங்க. பின்ன என்னங்க உலகத்துலேயே பெரும்பாலான மக்கள் பேசக்கூடிய (கிட்டத் தட்ட மூவாயிரம், நாலயிரம் பேரு அம்மாடியோ... எவ்ளோ பேரு) சமஸ்கிருத மொழிய கத்துக்காம மொழிவெறி சிந்தனையோடு இருக்கறது தப்புதானுங்களே.

இது மத்தமொழிங்க மாதிரி மனுசங்களா உருவாக்கிப் பேசிகிட்டது கெடயாதங்க. தேவலோகத்தல தேவருங்க பேசிகிட்டதாம். அந்த மொழி எப்படியோ எட்டிகுதிச்சு வந்து ஜாதி ஒழிப்பயே முழுநேர நூலில் கட்டி வெச்சுருக்கற பாப்பரங்க வாயில உழுந்துடுச்சு. அதைய உலக மக்களுக்கு சொல்லிக் கொடுக்கோணும்னு கோயில்கோயிலா போயி கத்துவாங்க (சாரி கடவுளோட பேசிக்குவாங்க).
அந்த மொழிய பேசும் போது நம்ம காதுல ஈயத்தக் காச்சி (மன்னிக்கோணுங்க... ஆத்தரத்துல டங்க் ஸ்லீப்பாகுது) தேன காச்சி ஊத்தறமாதிரி அவ்வளவ இனிமையா இருக்குங்க. அந்த மொழிக்குள்ள இன்னொரு சிறப்பு என்னதெரிங்களா? கும்பலா இருந்துதான் பேசமுடியும். அப்ப எப்படி யிருக்கும்னா கொளங்குட்டயில்ல நூத்துக்கணக் கான தவளைங்க கச்சேரி நடத்தறமாதிரி அவ்வளவு கொடுமையா (அடச்சே... ) இனிமையா இருக்குங்க.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மொழிய கத்துகிட்டா என்னங்க தப்பு. ஏற்கனவே இந்தி ஆதிக்கத்த எதுக்கறோம்னு சொல்லி நம்மள இந்தி படிக்கவிடுல இந்த தமிழ் போராளிங்க. தமிழ்நாட்டுல ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு காரணமே இந்த எலவெடுத்த இந்தி படிக்காததாலதான்னு இந்திய தேசியத் தறுதலைக (என்னடாது ஒரு பேராவ எழுதறது குள்ள இத்தனத் தப்பாகுது) தேசியத் தலைவர்க கூவுனாங்க. இது நமக்கு இன்னுங்கூட புரியல.

ஆனா, குசும்புத்தனமா அப்பற ஏன்டா இந்தி பேசற பீகார், உத்ரபிரதேசத்து மக்க வேலை தேடிட்டு தமிழ்நாட்டுக்கு ஓடிவராங்கன்னு கேள்வி கேக்க மட்டும் தெரியும். இப்படி குதர்க்கமா பேசறதுகெல்லாம் நம்மாள பதில் சொல்ல முடியுமாங்க. இந்தி தெரியாம வேலய இழந்த மாதிரி அற்புதமான தேவபாஷையான சமஸ் கிருதத்த கத்துகாதனால எத்தன வேலய விடப் போறோம் தெரியமான்னு தெரியல. ஏன்னா இந்திய ராணுவத்துல சமஸ்கிரும் தெரிஞ்சவிங் களுக்கு வேலைவாய்ப்புன்னு அரசே அறிவிச்சுருக்கு.

ராணுவத்துல இருக்கறவனுக்கு எதுக்குடா சமஸ்கிரும்னு வழக்கமா கேக்கக்கூடாது. சமஸ்கிருதத்த உலக பொதுமொழிய அறிவிக்கறதுக்கு லோக மொழி ஆய்வாளருங்க துக்ளக் சோவும், சுசாமி போன்றவிங்களும் முயற்சி எடுத்துட்டிருக்காங்க. அதனால நம்ம புள்ளைங்கள ஒழுங்க சம்ஸ்கிருதம் படிக்க அனுப்புங்க வீட்டுல ஆயிரந்தவளைங்க கத்தற கேவலத்த கேளுங்க... கேளுங்க... கேட்டுகிட்டே இருங்க.....!

வேண்டுதல் வேண்டாமை - 2 - கோவன் மகன்

(தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கியதுத் தொடர்பாக எழுதியது)

இனிமேல் எதையாவது எழுதினா நறுக்குத் தெறித்த மாதிரி மூனு விசயத்த குறிப்பிட்டு எழுதனும்னு முடிவு செஞ்சிருகேன். அதுக்குக் காரணம் என்னன்னா இந்த "நூல்" போட்டு வந்த கொப்பரத் தேங்காத் தலையனுக நம்ம மக்களோட நெத்தியில மூனு கோடு போட்டுத் தான் அதாங்க பட்டையும், நாமத்தையும் சாத்தித் தான் நாட்டையே ஆட்டிப் படைக்கறத நம்ம பொன்னுத்தம்பி சொன்னாரு. மக்களுக்கும் இந்த மாதிரி மூனு, மூனா சொன்னத்தான் புரியுமோ என்ன மோங்கற எண்ணத்துல தான் இந்த முடிவு. அதுக்காகஅவாமாதிரி நானும் பட்டையோ, நாமத்தையோ சாத்திடு வென்னு நெனக்காதீங்க.

“நமக்கு நாமே”ங்கற திட்டத்தப் பத்தி தெரிஞ்சுக்க உங்களுக்கு விருப்பம் இருந்தா திட்டத்த கொண்டு வந்த தமிழ்நாட்டு முதல்வர் டாக்டர் கலைஞரின் செயல்பாடுகளப் பாத்தாலே புரிஞ்சிடும். நமக்கு நாமே திட்டம்ங்கறது வேற ஒண்ணுமில்லிங்க நமக்குத் தேவையானத நம்மலே சேகரிச்சுக் கறது அல்லது எடுத்துகிறது. அதாவது தன் கையே தனக்குதவி, தன்னோட முதுக தானே தட்டிக் கொடுத்துப் பாராட்டிக்கிறதுனு நாம எப்படி வேணா இத எடுத்துக்கலாம்.

கலைஞர் சமீபத்தில் செய்த செயல் மூலமா சொன்னா உங்களுக்குப் புரியும். தான் தலைவரா இருக்கற தி.மு.க.வின் சார்பா கடந்த செப்-26 ந்தேதி நடைபெற்ற அண்ணா நு£ற்றாண்டு நிறைவு விழாவில் மக்களுக்கும், தமிழ் சமூகத்துக்கும் (அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதின்-னு இவரால பயனடையற சமுகத்தின் எண்ணிக்கை கூடிட்டே போகுது.) அவர் செய்த தொண்ட அவரே பாராட்டி அவருக்கு, அவரே ‘அண்ணா விருது’ கொடுத்து கிட்டார். இதுதான் நமக்கு நாமேங்கற திட்டம்.

இன்னும் புரியலியா இப்ப சொல்ற விசயத்து மூலமா நிச்சயம் உங்களுக்கு புரியும் பாருங்க. சமீபத்தில் தமிழ்நாடு அரசின் 2008-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுல சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருதுக்கு உளியின் ஓசை படத்துல திரைக்கதை வசனம் எழுதியதுக்காக தன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறாரு நம் முதல்வர் கருணாநிதி. இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.

இதுக்கு மேலயும் உங்களுக்கு புரியலினா அதுக்காக வருத்தப்படதீங்க. 2010-ல கோயம் புத்தூர்ல நடக்கப் போறதா கலைஞர் அறிவிச்சிருக்கற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுல தனக்கு வேண்டிய தமிழ் விற்பனை யாளர்கள், தறுதலைத் தலைவர்கள் (மன்னிக் கோணுங்க) தமிழ் விற்பன்னர்கள், தமிழர் தலைவர்கள் மூலமா சில விருதுகள தனக்கு அறிவிச்சுக்குவாரு, அப்பப் பாருங்க நமக்கு நாமேத் திட்டப் பத்தி நிச்சயம் புரியும். தமிழ் மக்களாகிய உங்கள்ட்ட நான் ஒரே ஒரு கோரிக்க வைக்கறேன். அது என்னன்னா ஈழத் தமிழர் பிரச்சனையில் சிங்கள இனவெறியை கண்டிக்கிற தமிழினத் தலைவரா இயல்பா நடிக்கிற கலைஞருக்கு நாமெல்லாம் ஒண்ணு சேந்து 2009-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருத வழங்கி அவர கவுரவிக்கணும்.

ரொம்ப நாளா படமே பாக்காம இருந் துட்டேன். ஏன்னா, தமிழ்ப் படங்கள பாக்கற துனாலே அலர்ஜியாயிடுச்சு. அந்தளவுக்கு காதல்ங்கற பேருல மனச கசக்கிப் புழியறாங்க. அதனால நான் பாக்கக் போறப் படமும் அந்த மாதிரி இருந்துத் தொலைக்கப் போகுதோன்னு நெனச்சேன். இருந்தும் சமீபத்துல ஒரு படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டு போனேன்.

ஆனா அன்னைக்கு பார்த்த பேராண்மை ங்கற படம் தீவிரவாதிகள களையேடுக்கற மாதிரியான படங்கறதுனால கொஞ்சம் ஆர்வமா பாத்தேன். தீவிரவாதிகள காட்டுவாங்கன்னுப் பாத்தா கடைசிவரைக்கும் காட்டுல யாரோ வெளிநாட்டுக்காரங்களக் காட்டி இவிங்கதான் தீவிரவாதிகன்னு குழப்பறாரு டைரக்டர் எஸ்.பி. ஜனநாதன்.

தீவிரவாதிகள பத்தி படமெடுக்கறதுல அகில உலக புகழ் மணிரத்னம் மாதிரியான இந்துத்துவா இயக்குனர்கள் (என்னங்க இப்படி டங்க் சீலிப்பாகுது) இந்திய இயக்குனர்கள் எடுத்தப் படத்த பேராண்மை இயக்குனர் பாத்ததேயில்லின்னு நெனக்கிறேன். ஏன்னா அவிங்கப் படத்துல தீவரவாதின்னா அப்துல், இஸ்மாயில், நசீர்கான், இப்ராஹிம்னு முஸ்லிமத்தான் காட்டுவாங்க. தமிழ்நாட்டு ரசிகர்களும் தீவரவாதிகள்னா முஸ்லிம்கள்னு நம்பிட்டு இருக்கறாங்க அந்த நம்பிக்கையில மண்ணள்ளிப் போடறரு இந்த இயக்குனரு.
பத்தாததுக்கு ஜாதிப் பிரச்சனை, இடஒதுக்கிடுன்னு கௌப்பிவுடுறாரு. ஜாதிப் பிரச்சன என்னைக்கோ தீர்ந்துபோயி இந்தியா வல்லரசாயிட்டு இருக்குன்னு அரசாங்கம் தொண்டத் தண்ணிவத்தறளவுக்கு கத்திட்டு இருக்கு. இந்த நேரத்துல போயி பழங்குடியினர் முன்னேற்றம், பொதுவுடமைங்கறரு இந்த இயக்குனரு. இதனால நாட்டுக்கு எவ்ளோ பெரிய கெட்டபேரு.

அதவிட கொடும குடும்ப குத்துவிளக்கா இருக்க வேண்டிய பெண்களையெல்லாம் துப்பாக்கித் து£க்கிப் போராடச் சொல்றாரு. பெண்கள்னா எப்படியிருக்கனும்னு விசு, ராமநாராயணன் போன்ற பிற்போக்குவாதிகள் (என்னடாது இப்படி தப்புத் தப்பா வார்த்த மாறுது) முற்போக்குவாதிகள் எடுத்த குடும்பப் படங்களையும் பாத்ததில்லப் போலிருக்கு.
அந்தப் படங்கள இந்த இயக்குனர் பாத்திருந்தா இப்படி சமூகத்த மாத்தற மாதிரியான (சாரி) கெடுக்கற மாதிரியானப் படத்த எடுத்திருக்க மாட்டாரு. பொழைக்கத் தெரியாத ஆளாயிருக்கறாரே இந்தப் படத்தின் இயக்குனர்னு எனக்கு ரொம்ப வருத் தந்தான். இருந்தாலும் படத்துக்கு அப்படிஒரு கூட்டம். ஏதோ விசயம் இருக்கக் போய்த்தான் இவ்ளோ மக்கள் பாக்குறாங்கன்னு யோசனையோடவே ரசிச்சு பாத்தேன். வாய்ப் பிருந்தா நீங்களும் பாருங்க இந்தக் கருத்து உங்களுக்கும் தோணும்.

மைதிப் புறா, அன்பின் சின்னம், கருணைக் கடல், சமாதானத் தூதுவன்னு பல்வேறு அடைமொழிக்கு எடுத்துக்காட்டா இருக்கற அமேரிக்காவுக்கு மேலும் சிறப்பு சேக்கற புதிய மகாத்மா பாரக் ஒபாமாவுக்கு இந்த ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப் போறதா தேர்வுக் கமிட்டி அறிவிச் சதும் எனக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. ஆனா ஒரு விசயம் மட்டும் புரியல ஒபாமா பதவியேற்ற 20 நாளுக் குள்ள கணக்கிட்டு பரிச அறிவிச்சிருக்காங்க எப்படின்னுதான் புரியல.

அப்பறந்தான் தெரிஞ்சுது அந்த இருபது நாளும் ஒய்வொழிச் சலில்லாமல் சமாதானக் கொடியையும், வெள்ளைப் புறாவையும் கையில து£க்கிட்டு ஒவ்வொரு நாடா அலைஞ்சு உலக நாடுகள் அனைத்தும் சண்டைய கைவிட்டு சகோதரரா இருப் போம்னு சொல்லி போராடியிருக்காறாராம். அது மட்டுமில்லாம தன்னோட நாட்டுல இருந்த அணு ஆயுதங் களோட எல்லாவித கொடூர ஆயுதங்களையும் அழிச்சிட்டாராம். அத்தோட விட்டாரா அமெரிக்கா மாதிரியே சமாதானத் தூதுவனா மாறிட்டு இருக்கற இஸ்ரேல் நாட்டில் இருந்த அணு ஆயுதங் களையும் அழிச் சுட்டதாலதான் இந்த நோபல் பரிசு வழங்கப்போறங்கன்னு சொன்னாங்க.

தமிழ்நாடு மாதிரி அமெரிக்காவும் அமைதிப் பூங்காவா ஆயிடுச்சுங்கற நெனப்புல முஸ்லிம்கள் சுதந்திரமா தீவிர வாதத்த செய்லாம்னு நெனச்சா கவுதம புத்தர் மாதிரி ஒபாமா கண்ணமூடிட்டு இருக்க மாட்டாரு. மாறாக சிங்களத்து புத்தரா மாறிடுவாரு.
புரியலியா, நம்ம நாட்டுல தீவரவாதிகள ஒழிக்கறதுக்காகவே அவதாரம் எடுத்து தன் வாழ்க்கையே அதுக்காக அர்ப்பணிக்கற புரட்டுக் கலைஞர் (அய்யய்யோ சாரி) புரட்சிக் கலைஞர் ஸ்டைல்ல சொல்லணும்னா ஒபாமா மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியா இருக்கறதும், ஈழத்தை அழிக்க துர்காவா மாறுன சோனியா காந்தியா மாறுவதும் (அட இத நாஞ் சொல்லலிங்க இவிங்க பார்ட்னர் ராஜபக்ஷே சொன்னதுங்க) முஸ்லிம்கள் கையில தான் இருக்குங்கறத உணர்த்துவாரு. (இந்த வசனம் நல்லா யில்லின்னா அதுக்கு நான் பொறுப்பில்லிங்க) எனுங்க நாஞ் சொன்னது சரி தானுங்களே?

வேண்டுதல் வேண்டாமை - கோவன் மகன்


(சென்னையில் நடைபெற்ற கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலைத் திறப்பு நடந்தபோது எழுதியது)

ழுத்தாளர் என்ற பெயரில் எதையாவது எழுதி அதைய படிக்கற விங்க இதென்னடா கன் றாவின்னு கிளிச்சுப் போட்டு குப்பையை பெருக்கி விடக்கூடாதுங்கற உயர்ந்த நோக்கத்தில்(?) ஏதோ என்னால முடிஞ்ச மூனு விசயத்தப் பத்தி கருத்தச் சொல்லலாம்னு நினைக்கிறேன். அதுக்காக உடனே “கருத்து கந்தசாமி”ன்னு என்னைய புகழாதிங்க. ஏதோ எம் மனசுல தோணுனத உங்கள்ட்ட சொல்றேன். எது வேணும், வேண்டாம்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

நம்ம முத்தமிழ் வித்தகருக்கு இந்திய ஒருமைப் பாட்டைக் காங்கிரஸ்காரங்களை விட அதிகமா கட்டிக்காக்கறதால இன்னொரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.

ஏன்னா,கன்னடர்களின் நீண்ட நாள் கோரிக்கையா இருந்த (கிட்டதட்ட பத்து பதினைஞ்சு நாளு இருக்கும்னு நினைக்கிறேன். அம்மாடி..!!!) கன்னட கவிஞர் “சர்வக்ஞர்” சிலைய ஒரு வழியா போன மாசம் சென்னையில் திறந்திருக்காரு நம்ம முதல்வர் கலைஞர்.

இதுக்கு நம்ம தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவிச்சு மீண்டும் கன்னடர்களுக்கு எதிரா(?) கலவரத்த ஏற்படுத்த இருந்தாங்க. நல்லவேளயா மனித நேயமும், சிந்தனா தெளிவும் கொண்ட கன்னடர்கள் “சர்வக்ஞர்” சிலையத் திறக்கறத்துக்கு முன்னாடி உலகபொதுமறை தந்த வள்ளுவப் பெருந்தகையின் சிலையைப் பெங்களூருவில் திறக்கறதுக்கு ஒத்து கிட்டாங்க. (எவ்ளோ பெரிய மனசு பாருங்க) நம்மாளுங்களுக்கு அறிவே கிடையாதுங்க பதினெட்டு வருசத்துக்கு முன்னால வெச்ச சிலைய உடனே திறக்கணும்னு போராட்டாம் செய்யறது எவ்ளோ பெரிய முட்டாள்தானங்கறது புரியலையே.

ஆனா இந்தப் பிரச்சனைய புரிஞ்சிகிட்ட நம்ம தமிழினத் தலைவர் ஈழத்தமிழர் பிரச்சனையில சிங்கள இறையாண்மைக்கும், இந்திய இறை யாண்மைக்கும் சங்கடம் வராம எப்படி அடக்கி வாசிச்சாரோ அதேமாதிரி இந்த சிலைப் பிரச்சனையிலும் சிறப்பா செயல்பட்டு எந்த இறையாண்மைக்கும் கேடு வந்திராம செஞ்சிட்டதுல நமக்கு சங்கடந்தான் மன்னிக்கனும் சந்தோசந்தான்.

இதுல ஒரு விசயமட்டுந்தான் எனக்குப் புரியல என்னன்னா, பைபிள், குரானுக்கு அடுத்ததபடியா எல்லா மொழியிலேயும் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்ங்கறதுலேயும், எந்த சமயத்திக்கும் எந்த இனத்துக்கும் ஏன் எந்த தேசத்தையும் சாராத மனித குலத்தின் மாணிக்கம் வள்ளுவர் என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லிங்க. அதுக்காக காலத்தைக் கடந்து நிக்கற கன்னட கவிஞர் சர்வக்ஞருக்கு இணையா வள்ளுவர தூக்கிப்பிடிக்கறது என்ன நியாயம்னு துக்ளக் சோ கேட்டாலும் கேப்பாரு. இது வீணா போற தமிழர் களுக்குத் தெரியலையேன்னு வருத்தமாயிருக்கு.

ஆமா, இந்த சர்வக்ஞர் அப்படி என்னதான் சொல்லி இருக்காருன்னு யாராவது சொன்னா பரவாயில்ல(ஏன்னா எனக்குத் தெரியாதுங்க.). கண்ணியத்துக்குப் பெயர் போன கன்னடர் களாவது அவரபத்தி தெரிஞ்சிருந்தா தயவுசெஞ்சு சொல்லிக்குடுங்க அப்பவாச்சியும் கன்னடர்களுக்கு சாரி தமிழர்களுக்கு புத்தி வரட்டும்.

ரெண்டாவது விசயம் என்னன்னா விலைவாசி உயர்வால பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலத்தின் அவசியத்த கருதி நிவாரணம் செய்ய தமிழக அரசு முன் வந்திருக்கும் போல தெரியுது. ஏன்னா? உழைக்கும் ஏழை மக்களுக்கு சம்பளம் போதலன்னு கூட்டிக்(உயர்த்தினு படிங்க அப்பறம் வேற ஏதாவது நெனச்சா வம்பாயிடும்) கொடுத் திருக்கு. இவிங்க ஒழைச்சு ஒழைச்சு ஓடா தேஞ்சுபோறதால இந்த சம்பள உயர்வுன்னு அரசு சொல்லுது(என்ன ஒரு கருணையுள்ளம் பாருங்க).

இந்த ஏழைகளுக்கு சம்பளம் பத்தலைங்கறத விட இவிங்க வாழறத்துக்கு தமிழ்நாட்டுல எங்கேயும் இடமில்லாம நாடோடிகளா அலை யறாங்கன்னு கேள்விபட்ட கலைஞரு தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஏழைக்கும் “2 கிரவுன்ட்” நிலம் தர்றப் போறதா பேச்சு அடிபடுதுங்க.

உடனே எல்லோரும் ரேசன்கார்ட தூக்கிட்டு போய் இடங்கேக்காதீங்க. இது பரம ஏழைகளுக்கு மட்டும்தானாம். நானொரு முட்டாளுங்க யார் அந்த ஏழைகள்னு சொல்லலபாருங்க. கையில இருக்கிற கொஞ்ச நஞ்ச காசயும்(ஒரு கோடியோ ரெண்டு கோடியோ) செலவு செஞ்சு ஊண் உறக்கம் மறந்து (தாம் பெற்ற ) மக்களுக்காக பாடுபடற தமிழ்நாட்டு எம்.எல்.ஏ க்கள் தான் அந்த ஏழைகள்.
என்னங்க முழிக்கறீங்க மக்கள் பிரதிநிதிகளுக்கு செஞ்சா மக்களுக்கே செஞ்ச மாதிரின்னு தமிழினத் தலைவரு நினைக்கறாரோ என்னமோ. அப்பறம் இதுல முக்கியமான விசயம் என்னன்னா, இந்த 2 கிரவுன்ட் நிலம் வேணும்னு கேட்ட பரம ஏழை யார்னா தமிழர்களோட அடக்குமுறைக்கு ஆளாகி நாள்தோறும் சொல்லன்னா துயரத்துல வாழ்ந் திட்டிருக்கற சிங்கள மகாத்மா மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்து வரும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கோணசேகரன் (டங்க் ஸ்லீப்பாகுது சாரி) ஞான சேகரன் தான்.

மூனாவது விசயமும் சம்பளத்த பத்திதான் சொல்லவர்றேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணியாற்றும் நம்ம வாத்தியர்கள் எந்தப் பாடத்துல வல்லுனர்களா இருக்காங்களோ இல்லையோ கணக்குப் பாடத்துல ஜாம்பவான்களா இருப்பாங்கன்னு நெனக்கிறேன்.

ஏன்னா? ஏகப்பட்ட துன்பத்துல இருக்கற ஆசிரியர்களுக்கு இந்த ஆறாவது கமிசன் மூலமா சம்பளத்த உயர்த்திக் கொடுக்கறம்னு சொல்லி கால்குலேட்டரும் கையுமாத்தான் அலையவுடுது அரசு. அரசுப்பள்ளி, கல்லூரிகளில் பணி யாற்றிக் கொண்டே அதுல கிடைக்கற சொற்ப சம்பளத் துல தங்களோட புள்ளைங்கள கான்வன்டிலோ, தனியார் கல்லூரியிலோ சிரமப்பட்டு படிக்க வைக்கறங்க (அய்யோ பாவம் ..!).

இதை புரிஞ்சிகிட்ட முதல்வர் கொஞ்சமா சம்பளத்த கூட்டியிருக்கிறார். இனிமே நம்ம ஆசிரியர்கள் தங்களடோ வாரிசுகளுக்கு செலவு செய்யறதுல சிரமம் இருக்கதுன்னு நெனக் கிறேன். கூடவே சிட் பண்ட்டிலோ, பைனான்ஸ் கம்பனியிலோ இன்வஸ்ட் பண்ணி (ஏன்னா பைனான்ஸ் நிறுவனங்களில் அதிகமா இன்வஸ்ட் பண்றதுல இவர்களுக்குத்தான் முதல் பரிசு) ஓட்டாண்டியாகலாம் சாரி கோடிஸ்வரனாகலாம். ஆனா, யாரும் உங்க ஊட்டுப் பிள்ளைங்க எத்தன பேரு அரசுப் பள்ளியில் படிக்கறாங்கன்னு வாத்தியார்கள்ட்ட கேட்டறாதீங்க. அரசுப் பள்ளிகள் என்பது சம்பளம் வாங்கற ட்ரஸரி தான் என்பது அவிங்களுக்கு தெரியாதா என்ன?

டடே எது முக்கியமோ அதைய மறந்துட்டேன் தமிழ்நாட்டுல இருக்கற பதினெட்டு முதல் நாற்பது வயசு இளைஞர்கள் யாரையும் காணம்னு நாடு முழுக்க பேச்சு பரபரப்பா இருந்துச்சு. இது என்னடா புது வம்புன்னு விசாரிச்சுப் பாத்தா “இளைஞர்களின் எழுச்சி நாயகன்” கே.வி. தங்கபாலு சொல்றாரு காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுல சூறாவளி சுற்றுப் பயணம் செஞ்சராம். அந்த சூறாவளி எல்லா இளைஞர்களையும் டெல்லி வரைக்கும் அடிச்சிட்டுப் போயி திரும்பவும் கொண்டு வந்து வுட்டுச்சாம். அதுக்குள்ள எல்லா கட்சிக்காறங் களும் பயந்துட்டாங்களாம்.
ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தபோது பயங்கர கூட்டமாங்க. ஆனா, கூட்டத்துக்கு வந்தவிங்களெல்லாம் சீருடை போட்டுட்டு அமைதியா இருந்தாங்களாம். இது என்னடாது ஒரு சின்ன சண்ட கூட இல்லாம இவ்வளவு பேரு எப்படி அமைதியா இருக்க முடியும்னு பாத்தா அத்தன பேரும் போலீஸ்காரங்காளம் (என்ன கொடும பாலு சார்).

ஆனா, ஒரு ஆச்சரியம் பாருங்க நேரு குடும்பம் எப்படி காந்தி குடும்பமாச்சுன்னு புரியல. நேருவின் மகளான இந்திரா 1942 ஆண்டு பார்சி மதத்தை சேர்ந்த பெரோஸ் கேன்டி என்பவரை திருமணம் செய்து கொண்டதால “இந்திரா கேன்டி ”யானார் . இந்து மதத்துக்கு எதிரா காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக நேருவே இந்த திருமணத்தை ஒத்துக்கலையாம். பெரோஸ் மறைவுக்கு பின்னால காங்கிரஸின் கைங்கரியத்தால இந்திரா கேன்டி ,இந்திரா காந்தி ஆகி அதைத் தொடர்ந்துதான் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்காகாந்தின்னு காந்தி குடும்பம் ஆயிருச்சுன்னு விசயம் தெரிஞ்ச ஒருத்தர் சொன்னாருங்க.

என்னமோ போங்க எதையோ சொல்ல வந்து என்னத்தையோ உளறிட்டு போறேன். அடுத்த தடவயாவது சொல்ல வந்த விசயத்த கரெக்டா சொல்றேன். வரட்டுங்களா..!

வெள்ளி, 18 ஜூன், 2010

அரசியலில் பணியாற்றும் முழுத்தகுதியும், திறமையும் எங்களுக்கு உண்டு - திருநங்கை கல்கி


நேர்முகம் - சகா

அரவாணிகளுக்கு குடும்பத்தில், சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன?

முதல் பிரச்சினை மனம், உடல் என்கிறப் போராட்டங்களில் தடுமாற்றம் எங்களுக்குள் பெண்மை வெளிப்படும் பொழுதுக் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. அக்காவுக்கு கல்யாணம் நடக்காது, தங்கச்சிக்கு கல்யாணம் நடக்காது அதுமாதரி நிறைய விஷயங்கள். அதனால் பெரும்பாலானவர்கள் குடும்பத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அடுத்ததா கிண்டல்கள், கேலிகளுக்கு ஆளாக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகளில் இருந்துத் துரத்தப்படுகிறார்கள். அதனால் மற்ற திருநங்கைகளுடன் இணைந்து, என்ன பண்றாங்கன்னா ஒன்று, பாலியல் தொழில் அல்லது கைதட்டி பிச்சைக் கேட்பது அது இரண்டும் தான் பண்றாங்க.

இந்த நிலைமை எதனால் ஏற்படுது?

இருந்தே திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது. பாலியல் அடையாளம் என்ற காரணமாக ஒதுக்கி வைப்பது. அரவாணிகளாக இருப்பது குற்றமல்ல, அது ஒருதன்மை. அதைப்பற்றிய பாடங்களும் எந்த பாடத்திட்டத்திலும் இல்லை. அதனால் பட்டம் படிச்சவன், ஆராய்ச்சிப் படிப்பு முடிச்சவன்னாலும் இரண்டாவது தான். படிச்சவனானாலும் திருநங்கைகள் விசயத்தில் ஒரே மாதிரிதான் நடந்துக்குறாங்க. அருவருப்பா பாக்குறது - பாலியல் உறவுகளுக்கு பயன்படுத்து கிறது - கழிப்பிடங்களாக உபயோகப்படுத்துறது.

உங்களுக்கு இது மாதிரியான சங்கடங்கள், துன்பங்கள் நிகழ்ந்தது உண்டா?

வந்து என் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று வரை என் குடும்பத்துடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இப்ப சென்னையில் இருந்தாலும் மாசத்துக்கு ஒருதரம் எங்க ஊருக்குப் போய் எங்க அம்மா, அக்கா, தங்கச்சி கூட இருந்துட்டு வருவேன். எனக்கு நண்பர்களும் நிறைய இருக்காங்க. எனக்கு அந்த மாதிரியான தொந்தரவுகள் பெரிசா எதுவும் இல்லை. அந்த பாதிப்புகள், தொந்தரவுகள் அதிகம் நடந்து கொண்டிருந்தது.

இன்றைய தமிழக அரசு அரவாணிகளுக்கு தனியாக நலவாரியம் அமைத்து கொடுத்திருக்கு. அந்த நலவாரியம் அமைவதற்கு உங்களுக்கு பக்க பலமாக இருந்தார்ன்னு யாரைச் சொல்லுவீங்க?

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிதான். அவங்க அரவாணிகள் மேல ரொம்ப அன்பு கொண்டவங்க, அக்கறை கொண்டவங்க. அவங்களோட முயற்சியாலே அரவாணிகள் நலவாரியம் அமைச்சது மட்டுமல்லாமல் பல விசயங்களுக்கு அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துகிட்டே இருந்தாங்க. அரவாணிகள் உணர்வுகள் மதிக்கப்படனும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படனும் என்று எங்களுக்காக பல மேடைகளில் குரல் கொடுத்தார் கனிமொழி.

பெரும்பாலான திருநங்கைகளுக்கு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு இருப்பது இல்லை, அதற்கு என்ன காரணம்?
காரணமும் இந்த சமூகம் தான். ஏன்னா முறையான கல்விமுறை இல்லை. சரியான தகவல்கள் ஏதுமில்லை. இந்த சமூகம், திருநங்கைகள் இருக்கிறார்கள் என்பதையே அங்கீகரிக்கவில்லை. இவர்கள் கோமாளிகள், பாலியல் சுகத்திற்கு அலைபவர்கள் அப்படிங்கற பார்வைகள்தான் இருந்துட்டு இருக்கு. என்னைப்போன்று படித்த சிலபேர் தேடல்கள் பெரியளவிற்கு விரிவடையும். இணையத்தின் மூலமா சரியான சிகிச்சை, சரியான மாற்றம் அப்படின்னு நாங்க போயிற்றோம். ஆனால் படிக்காத, ஏழை அரவாணிகளெல்லாம் கொஞ்ச, கொஞ்சமாக காசு சேர்த்து என்ன சிகிச்சை செய்ய முடியும், அப்படின்னுதான் பார்ப்பாங்க.

மருத்துவர்கள் அரவாணிகள் பற்றி குறிப்பிடும்போது தங்களைப் பெண்கள் என்று மனதளவில்தான் நினைத்துக் கொள்கிறார்கள். ஹார்மோன் மூலம் பெண்ணாக மாறுவதற்கு வாய்ப்பில்லைன்னு சொல்றாங்க இது சரியானது தானா?

கூற்றை திருநங்கை மருத்துவர் சொல்லியிருந்தா நான் ஏற்றுக்கொள்வேன். இதுவந்து மனக்குறைபாடுங்கற மாதிரியான கருத்துத்தான் அவர்களது கூற்று. ஆனா அப்படியல்ல. புராண காலத்தோடு இந்து இதிகாசங்கள் எல்லாவற்றிலும் ஆண்கள், பெண்கள், அரவாணிகள் என்ற மூன்று பேரும் இருந்திருக்கிறார்கள். மகாபாரதத்துல அர்ஜூனன் ஒருஆண்டு காலம் அரவாணியாக வாழ்ந்ததா கதையும் உண்டு. சிகண்டிங்கற ஒரு அரவாணி வந்து பீஷ்மரை கொல்ற ஒரு பாத்திரமும் அந்த கதையில் உண்டு. இவர்களுக்கெல்லாம் மனநோயா? ஆக மருத்துவர்கள் வந்து இதுமாதிரி தவறான கருத்து வெச்சிருக்காங்க, இப்படி சொல்ற மருத்துவர்கள் யாரும் எங்களைப் போன்றவர்களுக்கு முறையான சிகிச்சை செய்யும்படி எந்தக்கோரிக்கையும் வச்சதில்லையே. எல்லா மேலைநாடுகளிலும் உள்ள மருத்துவர்களும் இது ஒரு மனநோயல்ல என்று நிரூபித்து விட்டார்கள்.

அரவாணியா இருக்கறதால சமூகத்துல வேறுபட்ட பார்வை இருக்கு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீடு வாடகைக்கு கிடைக்கிற துங்கறது பெரிய சிக்கலா இருக்கும். அதை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?

பார்த்தீங்கன்னா நெறைய இருக்கு. ஒரு பக்கம் வந்து வேலைக்கு போகும்போதும் முழு பெண்ணாக அறுவை பண்ணிக்கிட்டாலும் நிறையப் பேருக்கு பொருளாதார வசதி இல்லாததால முகமாற்றம், உடல்ரீதியான மாற்றத்திற்கான மருந்துகள் உட்கொண்டு முழுப்பெண்ணாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். அதனால் சிலபேர் தோற்றத்தில்  ஆண் தன்மையோடு இருப்பாங்க. அவர்களுக்குத்தான் சமூகத்துல பெரிய சவால்கள் இருக்கு. அவர்களுக்கு எங்கேயும் வேலை கொடுக்கமாட்டார்கள். வேலைக்காரியா செக்கறதுக்குக் கூட யாரும் தயங்குவாங்க. சமூகத்துல எல்லா நிலையிலும் அவங்க தள்ளப்படுறாங்க. வீட்டவிட்டு வெளியே வந்தாலே கிண்டல், கேலி. இப்படி துன்பப்படும்போது சமூகத்திற்கெதிராக கைதட்டி பணம் கேட்பது கொடுக்காதபோது புடவையைத் தூக்கி காட்கிறது அல்லது பலாத்காரமாக பணம் பறிக்க முயற்சிக்கிறதுன்னு பன்றாங்க. இதற்குக் காரணம் சமூகம்தான். எந்த ஒரு சிறுபான்மை சமூகத்தையும் அழுத்தி அழுத்தி வெச்சீங்கன்னா ஒரு கட்டத்துல அது போராட்டமா வெடிக்கும். அரவாணிகள் வந்து என்னடா மரியாதை கொடுக்கறது எடுடா காசு என்கிற மாதிரியான நடவடிக்கைல இறங்கி விடுகிறார்கள். ஆனா இந்த மாதிரி நடந்து கொள்ளும் அரவாணிகள் மாறனும். முக்கியமா சமூகத்தோட பார்வையிலும், நடத்தையிலும் மாற்றங்கள் வேணும்.

அரவாணிகள் பற்றி மாணவர்கள், இளைய தலைமுறையினர் புரிந்து கொள்வதற்கு எந்த அணுகுமுறையைக் கையாள்கிறீர்கள்?
தலைமுறையினர், மாணவர்கள் எங்களைப்பற்றி புரிந்து கொள்வதற்காக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் நான் சென்று உரையாற்றுகின்றேன். இங்கு மட்டுமல்ல, கேரளாவில் உள்ள கல்லூரிகளில் நுழைஞ்சு உரையாற்றுன முதல் அரவாணி நான்தான். கேரளா மாதிரியான ஒரு இடத்தில் அரவாணிகளுக்கு சுத்தமா அங்கீகாரம் கிடையாது. அடி உதை தான் கிடைக்கும். அங்குள்ள அரவாணிகள் ரொம்ப அடிமட்டத்துல இருக்காங்க. ஏன்னா, மதங்கிற ஒரு விஷம் வேரூன்றி இருக்கு. எங்கெல்லாம் மதம்ங்கறது பெரிய விஷயமா இருக்குதோ அங்கெல்லாம் அடக்குமுறை இருக்கும். அது வந்து அரவாணிகளுக்கு ஒரு பெரிய பிரச்சினையா இருக்கு. அதனால, அங்குள்ள கல்லூரிகளுக்கு சென்று உரையாற்றி நல்ல மாற்றத்திற்கான விதையை அங்கு விதைச்சிருக்கேன்.

சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?

அரசும் செய்யாத ஒன்றை இப்ப இருக்கிற அரசு எங்களுக்கு நலவாரியம் அமைச்சு கொடுத்திருக்குது, அடுத்ததா அரசு கல்லூரிகள்ல ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினமான திருநங்கைகளை சேர்த்திருக்காங்க. இதுவந்து, கோ எஜிகேஷன் கல்லூரிகளில் மட்டும் இந்த அங்கீகாரம் இருக்கும்ன்னு அறிவிச்சிருக்காங்க. மூன்றாவதா திருநங்கைகளுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா எல்லாம் குடுக்குறாங்க. வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, எல்லாம் கொடுத்திட்டு இருக்காங்க. இன்னும் பாத்தீங்கன்னா அரவாணிகள் எத்தனைபேர் இருக்காங்கன்னு கணக்கெடுத்துட்டு இருக்காங்க. இத அடிப்படையா வெச்சு இன்னும் பல விசயங்களை எங்களுக்காக தமிழக அரசு செய்ய இருக்கு. அடுத்துவர அரசுகளும் அதைத்தொடர்ந்து செய்யும். தமிழ்நாட்டுல அரவாணிகளுக்காக அரசு உதவ தயாராக இருக்கு. எங்களுக்கு குரல் கொடுக்க அரசியல் தலைவர்களும் தயாரா இருங்காங்க. நாங்கள் எதிர்பார்க்கறது எல்லாம் மக்கள் மனமாற்றம் தான். அரசியல் தலைவர்கள் எல்லோரும் வந்து அரவாணிகளுக்கு ஆதரவாகத்தான் இருக்காங்க. மக்கள் மனதில், ஒருவரின் உடல் அமைப்பு, உருவஅமைப்பு, பாலின அமைப்பை வைத்து எடைபோடுவது என்ற தவறான அணுகுமுறை மாற வேண்டும். அரவாணிகளும் மனிதர்கள் தான் என்கிற உணர்வு வரவேண்டும்.

உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதான் நீங்கள் காதல், திருமணம் போன்ற உறவுகளை எப்படி எதிர் நோக்கியிருக்கிறீர்கள்?
பாதுகாப்பற்றதாக எல்லா திருநங்கைகளுக்கும் இருக்கு. எல்லா உறவுகளையும் தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிடும் எல்லா அரவாணிகளுக்கும் ஆசை இருக்கும். தனக்கென்று ஒரு துணை வேணும் என்றும், தனக்கென்று காதலன், தனக்கென்று கணவன் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனா திருநங்கை வாழ்க்கை சோகம் என்னவென்றால் எந்த ஒரு ஆணும் நிரந்தரமா திருநங்கையோடு இருக்கமாட்டான். நிறையத் திருநங்கைகள் ஆண்களால் ஏமாற்றப்பட்டு, துன்புறுத்தப் பட்டு இருப்பார்கள்.

ஆண்கள் வந்து அரவாணிகளிடம் பழகுவது பணத்திற்காகவும், பாலியலுக்காவும் மட்டுமே. தனக்கு ஆண் துணை வேண்டும் என்பதற்காக அவன் என்ன சொன்னாலும் எப்படி துன்புறுத்தினாலும் பொறுத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். ஆக, காதல் என்பது அரவாணிகள் வாழ்க்கையில் அப்பப்போ வந்துவிட்டுதான் போகும். நிரந்தரமாக இருக்காது. இது எல்லா அரவாணிகளுக்கும் பொருந்தும்.

உறவுகளினால் ஏற்படும் இதுபோன்ற ஏமாற்றங்களை எப்படி தாங்கிக் கொள்கிறீர்கள்?

ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்வது ஒரு கஷ்டமான விசயம். பெரிய போராட்டமாக இருக்கும். பலர் நொந்து தற் கொலைப் பண்ணிக்கொள்வார்கள். சிலர் எதிரா திரும்பிவிடுவார்கள். ஏமாற்றிய ஆணை பழிவாங்க எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்தி விடுவார்கள். இன்னும் பலர் மனதுக்குள் குமுறிக் கொண்டு போதைப் பழக்கத்துக்கு, அதாவது குடி, பாக்கு போன்றவற்றை பயன்படுத்தித் துன்பத்தை மறக்க அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

ஜாதிக்கொடுமை, பெண்ணடிமை மூன்றாவதாக அரவாணிகள் ஒடுக்குமுறை இந்த மூன்றையும் செய்யும் ஆண் சமூகத்தின் மீது உங்கள் மனநிலை என்ன?

ஆணாதிக்கம் அப்டிங்கற விசயம் பெண் சமூகத்தையே அடக்கி வெச்சி ருக்குது. பெண்களை அடக்கும்போது அரவாணிகளை அடக்கு வது என்பது அதன் தொடர்ச்சி தான். இதற்கு மதங்கள் மிகப்பெரிய காரணம் தான். ஜாதிகள் பிரிப்பு, பாலின ஒடுக்குமுறை இதெல்லாம் அதற்குள் அடங்கிவிடுகிறது. ஆனா, அரவாணிகள் எல்லாம் இதற்குள் சிக்கவில்லை. நாங்கள் அரவாணிகளாக மாறிய உடனே எங்க ஜாதியெல்லாம் தூக்கிப்போட்டுவிடுகிறோம். அரவாணிகளாகிய நாங்களெல்லாம் ஒரே குடும்பமாக இருக்கிறோம். என்னுடைய குரு பிறப்பில் முஸ்லிம், நான் இந்து இருந்தாலும் அவர்தான் என்னுடைய தாய். ஆக ஜாதி மதமெல்லாம் எங்களுக்கு கிடையாது. மற்றபடி பெண்ணுக்கு ஏற்படுகிற அனைத்த அடக்குமுறைகளும் எங்களுக்கும் உண்டு. நீ பெண் மாதிரி இருக்கிறியா அதனால உன்னை அடக்குறேன் என்று ஆண் சமூகம் கேவலமாக நடந்து கொள்கிறது.

அரவாணிகளில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இப்ப கேள்வி என்னன்னா உயிர் கொல்லி நோய் அதாவது
எச்ஐ.வி, எய்ட்ஸ் இவர்களால்தான் பரப்பப்படுவதாக சமூகத்தில் கட்டமைப்பு நடந்து கொண்டு இருக்கே?

தன்னுடைய உடம்பில் எச்ஐவி கிருமிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றும் நடத்தல. ஒரு அரவாணிக்கு எய்ட்ஸ் வருதுன்னா அவங்ககிட்ட உறவு வைத்துக் கொள்கிற ஒரு ஆண் மூலமாகத்தான் வருது. அரவாணிகள் பாலியல் தொழில் செய்வது உடல் சுகத்திற்காக அல்ல, வயிற்றுப் பசிக்காக. எல்லா ஆண்கள் கிட்டேயும் காண்டம் போட்டுட்டு உறவு வெச்சுக்கங்கன்னு சொல்ல முடியாது. பல ஆண்கள் ரொம்ப முரட்டுத்தனமா இருப்பாங்க. அப்படி இருக்கறப்போ இந்தமாதிரி நோய் பரவுவதற்கு ஆண்கள்தான் காரணம்.

அரவாணிகள் அரசியலில் பங்கெடுப்பது குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை திருநங்கைகள்தான் அரசியலுக்கு, பொறுப்புகளுக்கு மிக மிக தகுதியானவர்கள் என்று சொல்வேன். அதற்கு காரணம் சமூகத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டது அரவாணிகள்தான், ஆணா இருந்து பெண்ணா மாறியதால் ஆணுக்கு என்ன பிரச்சினை பெண்ணுக்கு என்ன பிரச்சினை என்று தெரியும். அடுத்த காரணம் சொத்து சேர்த்து வைக்கலாம் என்கிற தேவை யெல்லாம் திருநங்கைகளுக்கு இல்லை. நாங்க அடிப்பட்டு வந்ததால் தைரியம் இருக்கு. அரசியலுக்கு தேவையான துணிச்சல், நேர்மை எங்களிடம் நிறையவே இருக்கு. அடுத்து வர தேர்தல்களில் நிறைய அரவாணிகள் போட்டியிடுவோம். அந்த சூழ்நிலை உருவாகி வருகிறது.

உங்களுக்காக மட்டுமேப் போராடிக்கொண்டு இருந்த நீங்கள் அதிரடி யாக ஈழத்
தமிழர்களுக்காக உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம் நடத்தினீர்கள். அதற்கு என்ன காரணம்?
எங்களுடையப் பிரச்சினைகள் ஒரு புறம் இருந்தாலும், சமூகத்துல என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டேதான் இருக்கிறோம். ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த இருபது ஆண்டுகளாக எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், எத்தனை பெண்கள் வன்கொடுமைக்கு ஆளானார்கள் என்பதை எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டு வந்திருக்கிறோம். போர் தீவிரமடைந்து பல பேர் மரணமடைந்தார்கள். அது எங்க எல்லாரையும் வேதனைப் படுத்துச்சு. தங்கள் குடும்பத்தை இழந்து, தன் சகோதரிகள், தாய் போன்றோரை இழந்து தன்னந்தனியாக தன்நாட்டை விட்டு எலிகளாக வரும் கொடுமை எங்களுக்கானதாக இருக்கிறது. ஏன்னா, நாங்க அரவாணிகள் என்றக் காரணத்திற் காகவே குடும்பத்தைவிட்டு வெளியே வந்து விடுகிறோம். அல்லது துரத்தப்படு கிறோம். ஆக சொந்த நாட்டிலேயே புலம் பெயர்ந்து வாழும் வேதனை எங்களுக்கு இருக்கிறது. அதுபோலவே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளையும் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே தான் அந்தப் போராட்டத்தை நடத்தினோம். ஈழத் தமிழர்களுக்கான எங்கள் ஆதரவைத் தெரிவிக்கவே நாங்கள் போராட்டத்தை நடத்தினோம். சகமனிதர்கள், தமிழர்கள் என்பதற்காக முதன்முறையாகக் குரல் கொடுத்ததற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். அதுபோல ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தால்தான் சமூகத்தால் நாங்களும் அங்கீகரிக்கப்படுவோம்.

அரவாணிகள் என்பவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் தான் என்று கருத்து நிலவுகிறதே, அது உண்மையா?
முழுக்க முழுக்க தவறான கருத்து. சில கருத்துக்கள் வதந்திகளாய் பரவுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும், அரவாணிகளுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு. ஓரினச் சேர்க்கையாளர்கள் அதாவது ஹோமோ செக்ஸ் வைத்து கொள்பவர்களுக்கு உடல் ரீதியான தொந்தரவுகள் எதுவும் இருப்பதில்லை. தங்களை ஆண்களாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆணாகிய தனக்கு ஒரு ஆண் மீது ஈர்ப்பு இருப்பது என்பதுதான் அவர்களது பிரச்சினை. ஆனா அரவாணிகளுக்கு தான் யார்? என்பதே முதல் பிரச்சினை. இரண்டாவதா தான் யாரால் ஈர்க்கப்படுகிறோம் என்கிறப் பாலியல் பிரச்சினை.

ஆக அரவாணியை பொறுத்தவரை பாலியல் உணர்வு என்பது இரண்டாம் பட்சம்தான். முதலாவது தான் ஆணா, பெண்ணா என்பதுதான். ஒரு அரவாணி யைப் பொறுத்தவரை துணையில்லாமல் பாலியல் ஈர்ப்பில்லாமல் இருந்து விடுவார். ஒரு ஆண் துணையில்லாமல் அவளால் இருக்கமுடியும். ஆனால் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் காதல் என்று வருவதைத் தவறென்று நாம் கருத முடியாது. ஏன்னா அது அவங்களுடைய தனிப்பட்ட விசயம். மற்றவர் படுக்கை அறையை நாம் எட்டிப்பார்க்கக் கூடாது