‘கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கான செலவு ரூ. 1.50 லட்சம் வந்தால், மீதமுள்ள ரூ. 50,000த்தை செலுத்த பலர் தயாராக உள்ளனர். ஆனால், இதுபோன்ற நிலை ஏற்படும்போது தகுதியில்லை என்று கூறி மருத்துவமனைகள் திருப்பி அனுப்பி விடுகின்றன.தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது’ என்று அண்மையில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்த்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் காயத்ரி தேவி கவலைப்பட்டிருக்கிறார்.
‘உயிர் காக்கும் உயர் சிகிச்சை’க்கான ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ முதல்வர் கருணாநிதி அரசின் மாபெரும் சாதனையாகக் கடந்த ஓராண்டாக பெரியளவில் விளம்பரப் படுத்தப்பட்டு மக்களிடையேயும் அந்தக் கருத்து புகுத்தப்பட்டுள்ள நிலையில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியை சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அதுவும் மருத்துவராக உள்ள ஒருவரின் சட்டமன்ற பேச்சு சற்றே கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
இந்த நேரத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றிய நமது அய்யத்தையும், கருத்தையும் நம்மால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. இந்தியாவின் மூத்த அரசியல் ஞானியாக அவரது உடன்பிறப்புகளால் புகழப்படும் தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக ஆட்சியில் அமர்ந்த பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அத்தகைய மக்கள் நலத் திட்டங்களில் மாகத்தானதாக அரசு எந்திரங்களாலும், கூட்டணிக் கட்சியனராலும் வியந்து போற்றப்படுகிற கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரித் திட்டமாக சொல்லப்படுகிறது.
ஆனால், ஒரு நாட்டின் குடிமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டும் இந்தியாவைப் பொறுத்தவரை முழுக்க தனியார்மயம் ஆகிவிட்டது என்பதற்கான எடுத்துக்காட்டுதான் இந்த கலைஞர் காப்பீட்டு திட்டம் என்றால் அது மிகையாகது என்றே நினைக்கத் தூண்டுகிறது. ஏனென்றால், இத்திட்டத்தை செயல் படுத்துவதற்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம்தான் நமது அய்யத்திற்கு மூல காரணமாக அமைகிறது.
“ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு” என்ற பன்னாட்டு காப்பீடு நிறுவனத்திடம்தான் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு நான்காண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரசே ஆண்டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீடு தொகையாக ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி வரும். நான்காண்டுகளுக்கு அரசு செலுத்த வேண்டியத் தொகை 2070 கோடி. கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடந்த இதற்கான தொடக்கவிழாவில் முதல் காலாண்டு பிரீமியமாக ரூ.130 கோடியை ஸ்டார் ஹெல்த் நிறுவன அதிகாரிகளிடம் கலைஞர் வழங்கியுள்ளார்.
அத்தோடு இத்திட்டத்தின் மூலம் உயர் சிகிச்சையை தனியார் மருத்துவனைகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. சாதாரண வியாதிகளுக்கும் தீவிர சிகிச்சை என்று மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள் புத்துலகு புத்தர்கள் போல் சேவை என்ற அடிப்படையில் திடீரெனக் கருணை பொங்க ‘இலவசமாக’ சிகிச்சை செய்வதன் பின்னணி இதுதான்.
காப்பீட்டு திட்டம் என்பதே லாபமீட்டும் தொழிலாக நடத்தப்படுகிறது. ஒவ்வொருவரும் செலுத்தும் பிரீமியத்தைக் கூட்டினால் கிடைக்கும் மொத்தத் தொகையில், ஒரு சில பயனாளிகள் நோய்வாய்ப்பட்டால், அவர்களுக்கு மட்டும், அதிகபட்சமாக காப்பீடு செய்யப்பட்ட தொகை வழங்கப்படும். இதில் காப்பீட்டு நிறுவனத்தின் லாபமும், இயங்கு செலவும் கழித்தது போக மீதியுள்ளவையே பயனாளிக்கு கொடுக்க முடியும். ஒரு கட்டத்தில் பயனாளிகளின் விண்ணப்பங்கள் அதிகரித்தால் பிரீமியம் தொகையை உயர்த்த வேண்டும். நமக்கு கூட கடந்த சில ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களுக்கு 150 ரூபாய் பிரீமியம் செலுத்திய நிலையில் விண்ணப்பங்கள் அதிகரித்ததன் விளைவாக தற்போது 600 ரூபாக்கு மேல் பிரீமியம் செலுத்துவதை நினைவிற் கொள்ள வேண்டும். இதுதான் காப்பீட்டுத் தொழிலின் அடிப்படை.
இந்த அடிப்படையிலேயே ஸ்டார் காப்பீட்டு நிறுவனமானது 35 சதவீதத்தை லாபமாகவும் இயங்கு செலவாகவும் தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள 65 சதவீதத்தையே மக்களுக்கு வழங்குகிறது. இந்த 65 சதவீதத் தொகையானது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அவர்களின் லாபம், விளம்பரச் செலவு, ஆடம்பரங்கள் வல்லுனர்களுக்கு கொடுக்கும் அதீதமான ஆலோசனைத் தொகை போக மக்களுக்கு உண்மையாகப் போய்ச் சேரவேண்டிய தொகை எவ்வளவு என்று நம்மால் ஊகிக்க முடியும். ஒரு ஆண்டுக்கு 517 கோடி என்ற கணக்கில், நான்கு ஆண்டுகள் ஒப்பந்தப்படி அரசு செலவிடும் 2069 கோடியில் பத்து விழுக்காடு மக்களுக்கு பயனுள்ளதாக மாறினாலேயே ஆச்சரியம்தான். மீதமுள்ள 1800 கோடி தனியாருக்கு கைமாறுவது தவிர்க்க முடியாதது.
இப்படி கொள்ளை லாபத்திற்கு காப்பீட்டுக் கடையை தொடங்கியுள்ள ஸ்டார் நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளை அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மட்டுமே பயனாளி சிகிச்சை பெறமுடியும். அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டண வார்டுகளையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதுதான் மிகப்பெரிய கொடுமை. எனினும் இதில் பெருந்தொகை தனியார் நிறுவனங்களுக்கே செல்லும். இதே தொகையை அரசு தன்னுடைய நல்வாழ்வு கட்டமைப்பின் மூலம் நேரடியாக செலவழித்தால் பலன் பன்மடங்கு இருக்கும் என்பது கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறாத உயர்நிலைப் பள்ளி மாணவன் கூட கூறமுடியும்.
இதுவரை இத்திட்டத்தின் மூலம் 71,942 பேருக்கு ரூ.205 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 1.44 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்காக கொடுத்த பிரீமியத் தொகை எவ்வளவு என்பதை மட்டும் ஏன் சொல்லவில்லை? என்பது புரியாத புதிராக இருக்கிறது. காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 4 நபர்களுக்கு 4 வருடங்களுக்கு ஒரு முறை காப்பீடு செய்யப்படுகிறது. இதில் 4 வருடங்களில் ஒரு நபர் ரூ.1 லட்சத்துக்கு சிகிச்சை மேற்கொண்டுவிட்டால் மற்ற 3 பேருக்கு திட்ட பலன் கிடைக்காது என்பது ஒரு அதிர்ச்சியான செய்தி.
அதேபோல அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனை, தங்கியிருக்கும் செலவு, தொடர் சிகிச்சை ஆகியவைகளுக்கு பணம் செலுத்த முடியாமல் பலரும் அவதிப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆபரேஷன்களுக்கும் இந்த காப்பீட்டுப் பணம் வழங்கப்படுகிறது. அரசு பணத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்க இடையில் ஏன் ஒரு புரோக்கர்?
உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளிடம் அதனை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விக்கு, “முதலமைச்சரின் மருத்துவ நிதி உதவி பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும். எனவேதான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று அரசு காரணம் சொல்கிறது.
ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு அரசு வழங்கப்போகும் தவணைத் தொகை ரூ.517 கோடிகளாகும். அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை, டில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகத் (AIIMS) தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், காப்பீடுக்குத் தனியாரிடம் ஒவ்வோராண்டும் போய்ச்சேரும் பணத்தைக் கொண்டு கிட்டத்தட்ட 13க்கும் மேற்பட்ட நவீன உயர்தர மருத்துவமனைகளை தமிழ்நாட்டில் கட்டி விடமுடியும்.
இந்த இடத்தில் சென்னை அரசுப் பொது மருத்துவமனையின் அவலத்தை நம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. இம்மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 12ஆயிரம் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் அங்குள்ள 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்குகின்றன. 5 சிகிச்சை மையங்கள் மட்டுமே 24 மணி நேரம் இயங்குபவையாக இருக்கின்றன. இவற்றை முறைப்படுத்தி 30 மையங்களையும் 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை என்பது வேதனையான ஒன்று.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருக்கிறது. குறிப்பாக 62,000 செவிலியர்கள் தேவை. ஆனால் 20,000 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், செவிலியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சையினை அரசே தரமுடியும் என்பது அரசே மறுக்க முடியாத உண்மை.
ஆனால், இதனைச் சேய்யாத அரசோ, கலைஞரின் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இதயநோய்க்கான பலூன் வால்வு சீரமைப்பிலும் இதய வால்வு சீரமைப்பிலும் நிபுணத்துவம் மிக்க சென்னை ரயில்வே மருத்துவமனையை தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக, ரயில்வே மருத்துவமனையையும் தனியாரையும் சேர்த்து மருத்துவக்கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளது.
மருத்துவ சேவையை தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்கா சரியான முன்னுதாரணமாகும். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீடு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீடுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவையே முற்றிலும் மறுக்கப்படுகின்றது. காப்பீடு நிறுவனங்களின் கொள்ளையால் அங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்தியாவும் அதே பாதையில் உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் “அனைவருக்கும் ஆரோக்கியம்” எனும் சுகாதாரக் கொள்கையை 2002-ஆம் ஆண்டு அறிவித்து, அதன்படி மருத்துவ நலத்திட்டங்களில் அரசின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. தனியாரின் காப்பீடுத் திட்டத்திற்குள் பொது மருத்துவத்தைத் தள்ளிவிட உத்தரவு போட்டிருப்பது, உலகவங்கி. அதற்கு தனது பெயரைச் சூட்டியிருப்பதுதான், முதல்வர் கருணாநிதியின் மூளை.
இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீடுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீடு நிறுவனம் வீழ்த்தத் தொடங்கும். அதன் பிறகு மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் மட்டுமே நோக்குச் சிகிச்சை பெற முடியும் ஆபத்தான நிலை உருவாகும்.
சேமநல அரசினை இலாபகரமாக இயங்கும் அரசாக மாற்றுதல் எனும் போக்கைத் தாராளமயமும் தனியார்மயமும் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த அயோக்கியத்தனம் மக்களிடம் அப்பட்டமாகத் தெரிந்துவிடாதிருக்க அதற்குச் சில பூச்சுவேலைகளும் கவர்ச்சியான பெயர்களும் தேவைப்படுகின்றன. இப்போதைய எதிர்க்கட்சி அடுத்தமுறை ஆளும்கட்சியாகும்போது, இதே திட்டத்தை மாற்றமின்றி செயல்படுத்தும் என்பதால் எந்த எதிர்க்கட்சியுமே இத்திட்டத்தை தீவிரமாக எதிர்ப்பதில்லை.
இத்திட்டத்திற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ள “ஸ்டார் ஹெல்த்” நிறுவனம்தான் “ஆரோக்கியஸ்ரீ ” எனும் பெயரில் ஆந்திர அரசோடு கைகோர்த்துக் கொண்டு, வாரங்கல் மாவட்டத்தில் சில பினாமி மருத்துவமனைகளை உருவாக்கி, அறுவை சிகிச்சையே தேவைப்படாத பெண்களுக்கும்கூடக் கருப்பைகளை அகற்றிப் பல கோடிகளைச் சுருட்டியிருக்கின்றது.
கருணாநிதியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மட்டுமே செலவிடப்படும். ஆனால், இன்றைக்கு இதய அறுவை சிகிச்சை மட்டும் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இத்திட்டம் பட்டியலிட்டிருக்கும் 150 தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் மட்டும் 65க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் சிகிச்சை என்ற பெயரில் கொள்ளையடிக்கின்றன.
காச்சல், இருமல் என்று போனாலே எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக்கூடிய லைஃப் லைன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி, அப்பல்லோ, பில்ரோத், ராமச்சந்திரா, ஓசூரின் அகர்வால், அசோகா, விஜய் போன்ற மருத்துவமனைகள் குறைந்த பட்சம் தலா 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளன.
ஒரு இருதய நோயாளிக்கு அனுமதிக்கும் தொகை 1 இலட்ச ரூபாய் என்கிற போது ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் இதுவரை சம்பாதித்துள்ள தொகை எத்தனை கோடிகள் என்பதை நம்மால் கணக்கிட முடியாது.
அண்மையில் அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குநர் காஞ்சி காமாட்சி கோயிலுக்கு ரூ.40 இலட்சம் செலவில் தங்கத்தில் கிரீடம் சூட்டியுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
தொடக்கவிழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, கோபாலபுரத்தில் இருக்கும் அவரின் வீடு, அவரின் மரணத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் எதிர்ப்பே இன்றி நடைமுறைப்படுத்தப்படுமானால், அவருக்குப் பின், சென்னையில் கருணாநிதி வீடு ஒன்றில் மட்டும்தான் இலவச மருத்துவம் கிடைக்கும்.
‘உயிர் காக்கும் உயர் சிகிச்சை’க்கான ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ முதல்வர் கருணாநிதி அரசின் மாபெரும் சாதனையாகக் கடந்த ஓராண்டாக பெரியளவில் விளம்பரப் படுத்தப்பட்டு மக்களிடையேயும் அந்தக் கருத்து புகுத்தப்பட்டுள்ள நிலையில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியை சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அதுவும் மருத்துவராக உள்ள ஒருவரின் சட்டமன்ற பேச்சு சற்றே கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
இந்த நேரத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றிய நமது அய்யத்தையும், கருத்தையும் நம்மால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. இந்தியாவின் மூத்த அரசியல் ஞானியாக அவரது உடன்பிறப்புகளால் புகழப்படும் தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக ஆட்சியில் அமர்ந்த பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அத்தகைய மக்கள் நலத் திட்டங்களில் மாகத்தானதாக அரசு எந்திரங்களாலும், கூட்டணிக் கட்சியனராலும் வியந்து போற்றப்படுகிற கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரித் திட்டமாக சொல்லப்படுகிறது.
ஆனால், ஒரு நாட்டின் குடிமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டும் இந்தியாவைப் பொறுத்தவரை முழுக்க தனியார்மயம் ஆகிவிட்டது என்பதற்கான எடுத்துக்காட்டுதான் இந்த கலைஞர் காப்பீட்டு திட்டம் என்றால் அது மிகையாகது என்றே நினைக்கத் தூண்டுகிறது. ஏனென்றால், இத்திட்டத்தை செயல் படுத்துவதற்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம்தான் நமது அய்யத்திற்கு மூல காரணமாக அமைகிறது.
“ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு” என்ற பன்னாட்டு காப்பீடு நிறுவனத்திடம்தான் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு நான்காண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரசே ஆண்டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீடு தொகையாக ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி வரும். நான்காண்டுகளுக்கு அரசு செலுத்த வேண்டியத் தொகை 2070 கோடி. கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடந்த இதற்கான தொடக்கவிழாவில் முதல் காலாண்டு பிரீமியமாக ரூ.130 கோடியை ஸ்டார் ஹெல்த் நிறுவன அதிகாரிகளிடம் கலைஞர் வழங்கியுள்ளார்.
அத்தோடு இத்திட்டத்தின் மூலம் உயர் சிகிச்சையை தனியார் மருத்துவனைகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. சாதாரண வியாதிகளுக்கும் தீவிர சிகிச்சை என்று மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள் புத்துலகு புத்தர்கள் போல் சேவை என்ற அடிப்படையில் திடீரெனக் கருணை பொங்க ‘இலவசமாக’ சிகிச்சை செய்வதன் பின்னணி இதுதான்.
காப்பீட்டு திட்டம் என்பதே லாபமீட்டும் தொழிலாக நடத்தப்படுகிறது. ஒவ்வொருவரும் செலுத்தும் பிரீமியத்தைக் கூட்டினால் கிடைக்கும் மொத்தத் தொகையில், ஒரு சில பயனாளிகள் நோய்வாய்ப்பட்டால், அவர்களுக்கு மட்டும், அதிகபட்சமாக காப்பீடு செய்யப்பட்ட தொகை வழங்கப்படும். இதில் காப்பீட்டு நிறுவனத்தின் லாபமும், இயங்கு செலவும் கழித்தது போக மீதியுள்ளவையே பயனாளிக்கு கொடுக்க முடியும். ஒரு கட்டத்தில் பயனாளிகளின் விண்ணப்பங்கள் அதிகரித்தால் பிரீமியம் தொகையை உயர்த்த வேண்டும். நமக்கு கூட கடந்த சில ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களுக்கு 150 ரூபாய் பிரீமியம் செலுத்திய நிலையில் விண்ணப்பங்கள் அதிகரித்ததன் விளைவாக தற்போது 600 ரூபாக்கு மேல் பிரீமியம் செலுத்துவதை நினைவிற் கொள்ள வேண்டும். இதுதான் காப்பீட்டுத் தொழிலின் அடிப்படை.
இந்த அடிப்படையிலேயே ஸ்டார் காப்பீட்டு நிறுவனமானது 35 சதவீதத்தை லாபமாகவும் இயங்கு செலவாகவும் தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள 65 சதவீதத்தையே மக்களுக்கு வழங்குகிறது. இந்த 65 சதவீதத் தொகையானது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அவர்களின் லாபம், விளம்பரச் செலவு, ஆடம்பரங்கள் வல்லுனர்களுக்கு கொடுக்கும் அதீதமான ஆலோசனைத் தொகை போக மக்களுக்கு உண்மையாகப் போய்ச் சேரவேண்டிய தொகை எவ்வளவு என்று நம்மால் ஊகிக்க முடியும். ஒரு ஆண்டுக்கு 517 கோடி என்ற கணக்கில், நான்கு ஆண்டுகள் ஒப்பந்தப்படி அரசு செலவிடும் 2069 கோடியில் பத்து விழுக்காடு மக்களுக்கு பயனுள்ளதாக மாறினாலேயே ஆச்சரியம்தான். மீதமுள்ள 1800 கோடி தனியாருக்கு கைமாறுவது தவிர்க்க முடியாதது.
இப்படி கொள்ளை லாபத்திற்கு காப்பீட்டுக் கடையை தொடங்கியுள்ள ஸ்டார் நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளை அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மட்டுமே பயனாளி சிகிச்சை பெறமுடியும். அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டண வார்டுகளையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதுதான் மிகப்பெரிய கொடுமை. எனினும் இதில் பெருந்தொகை தனியார் நிறுவனங்களுக்கே செல்லும். இதே தொகையை அரசு தன்னுடைய நல்வாழ்வு கட்டமைப்பின் மூலம் நேரடியாக செலவழித்தால் பலன் பன்மடங்கு இருக்கும் என்பது கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறாத உயர்நிலைப் பள்ளி மாணவன் கூட கூறமுடியும்.
இதுவரை இத்திட்டத்தின் மூலம் 71,942 பேருக்கு ரூ.205 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 1.44 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்காக கொடுத்த பிரீமியத் தொகை எவ்வளவு என்பதை மட்டும் ஏன் சொல்லவில்லை? என்பது புரியாத புதிராக இருக்கிறது. காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 4 நபர்களுக்கு 4 வருடங்களுக்கு ஒரு முறை காப்பீடு செய்யப்படுகிறது. இதில் 4 வருடங்களில் ஒரு நபர் ரூ.1 லட்சத்துக்கு சிகிச்சை மேற்கொண்டுவிட்டால் மற்ற 3 பேருக்கு திட்ட பலன் கிடைக்காது என்பது ஒரு அதிர்ச்சியான செய்தி.
அதேபோல அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனை, தங்கியிருக்கும் செலவு, தொடர் சிகிச்சை ஆகியவைகளுக்கு பணம் செலுத்த முடியாமல் பலரும் அவதிப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆபரேஷன்களுக்கும் இந்த காப்பீட்டுப் பணம் வழங்கப்படுகிறது. அரசு பணத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்க இடையில் ஏன் ஒரு புரோக்கர்?
உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளிடம் அதனை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விக்கு, “முதலமைச்சரின் மருத்துவ நிதி உதவி பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும். எனவேதான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று அரசு காரணம் சொல்கிறது.
ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு அரசு வழங்கப்போகும் தவணைத் தொகை ரூ.517 கோடிகளாகும். அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை, டில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகத் (AIIMS) தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், காப்பீடுக்குத் தனியாரிடம் ஒவ்வோராண்டும் போய்ச்சேரும் பணத்தைக் கொண்டு கிட்டத்தட்ட 13க்கும் மேற்பட்ட நவீன உயர்தர மருத்துவமனைகளை தமிழ்நாட்டில் கட்டி விடமுடியும்.
இந்த இடத்தில் சென்னை அரசுப் பொது மருத்துவமனையின் அவலத்தை நம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. இம்மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 12ஆயிரம் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் அங்குள்ள 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்குகின்றன. 5 சிகிச்சை மையங்கள் மட்டுமே 24 மணி நேரம் இயங்குபவையாக இருக்கின்றன. இவற்றை முறைப்படுத்தி 30 மையங்களையும் 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை என்பது வேதனையான ஒன்று.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருக்கிறது. குறிப்பாக 62,000 செவிலியர்கள் தேவை. ஆனால் 20,000 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், செவிலியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சையினை அரசே தரமுடியும் என்பது அரசே மறுக்க முடியாத உண்மை.
ஆனால், இதனைச் சேய்யாத அரசோ, கலைஞரின் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இதயநோய்க்கான பலூன் வால்வு சீரமைப்பிலும் இதய வால்வு சீரமைப்பிலும் நிபுணத்துவம் மிக்க சென்னை ரயில்வே மருத்துவமனையை தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக, ரயில்வே மருத்துவமனையையும் தனியாரையும் சேர்த்து மருத்துவக்கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளது.
மருத்துவ சேவையை தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்கா சரியான முன்னுதாரணமாகும். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீடு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீடுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவையே முற்றிலும் மறுக்கப்படுகின்றது. காப்பீடு நிறுவனங்களின் கொள்ளையால் அங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்தியாவும் அதே பாதையில் உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் “அனைவருக்கும் ஆரோக்கியம்” எனும் சுகாதாரக் கொள்கையை 2002-ஆம் ஆண்டு அறிவித்து, அதன்படி மருத்துவ நலத்திட்டங்களில் அரசின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. தனியாரின் காப்பீடுத் திட்டத்திற்குள் பொது மருத்துவத்தைத் தள்ளிவிட உத்தரவு போட்டிருப்பது, உலகவங்கி. அதற்கு தனது பெயரைச் சூட்டியிருப்பதுதான், முதல்வர் கருணாநிதியின் மூளை.
இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீடுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீடு நிறுவனம் வீழ்த்தத் தொடங்கும். அதன் பிறகு மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் மட்டுமே நோக்குச் சிகிச்சை பெற முடியும் ஆபத்தான நிலை உருவாகும்.
சேமநல அரசினை இலாபகரமாக இயங்கும் அரசாக மாற்றுதல் எனும் போக்கைத் தாராளமயமும் தனியார்மயமும் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த அயோக்கியத்தனம் மக்களிடம் அப்பட்டமாகத் தெரிந்துவிடாதிருக்க அதற்குச் சில பூச்சுவேலைகளும் கவர்ச்சியான பெயர்களும் தேவைப்படுகின்றன. இப்போதைய எதிர்க்கட்சி அடுத்தமுறை ஆளும்கட்சியாகும்போது, இதே திட்டத்தை மாற்றமின்றி செயல்படுத்தும் என்பதால் எந்த எதிர்க்கட்சியுமே இத்திட்டத்தை தீவிரமாக எதிர்ப்பதில்லை.
இத்திட்டத்திற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ள “ஸ்டார் ஹெல்த்” நிறுவனம்தான் “ஆரோக்கியஸ்ரீ ” எனும் பெயரில் ஆந்திர அரசோடு கைகோர்த்துக் கொண்டு, வாரங்கல் மாவட்டத்தில் சில பினாமி மருத்துவமனைகளை உருவாக்கி, அறுவை சிகிச்சையே தேவைப்படாத பெண்களுக்கும்கூடக் கருப்பைகளை அகற்றிப் பல கோடிகளைச் சுருட்டியிருக்கின்றது.
கருணாநிதியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மட்டுமே செலவிடப்படும். ஆனால், இன்றைக்கு இதய அறுவை சிகிச்சை மட்டும் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இத்திட்டம் பட்டியலிட்டிருக்கும் 150 தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் மட்டும் 65க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் சிகிச்சை என்ற பெயரில் கொள்ளையடிக்கின்றன.
காச்சல், இருமல் என்று போனாலே எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக்கூடிய லைஃப் லைன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி, அப்பல்லோ, பில்ரோத், ராமச்சந்திரா, ஓசூரின் அகர்வால், அசோகா, விஜய் போன்ற மருத்துவமனைகள் குறைந்த பட்சம் தலா 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளன.
ஒரு இருதய நோயாளிக்கு அனுமதிக்கும் தொகை 1 இலட்ச ரூபாய் என்கிற போது ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் இதுவரை சம்பாதித்துள்ள தொகை எத்தனை கோடிகள் என்பதை நம்மால் கணக்கிட முடியாது.
அண்மையில் அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குநர் காஞ்சி காமாட்சி கோயிலுக்கு ரூ.40 இலட்சம் செலவில் தங்கத்தில் கிரீடம் சூட்டியுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
தொடக்கவிழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, கோபாலபுரத்தில் இருக்கும் அவரின் வீடு, அவரின் மரணத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் எதிர்ப்பே இன்றி நடைமுறைப்படுத்தப்படுமானால், அவருக்குப் பின், சென்னையில் கருணாநிதி வீடு ஒன்றில் மட்டும்தான் இலவச மருத்துவம் கிடைக்கும்.