வியாழன், 23 அக்டோபர், 2014

சொந்த ஊரில் பிழைக்க வக்கில்லாமல் சென்னையில் குடியேறி வாழ்க்கையைத் தொடங்கி சம்பாதித்து ஒரு நிலையை எட்டியபின் தங்களின் சொந்த ஊர் பாசத்தைக் காட்டுவதும், தன்னை வாழவைத்த சென்னையை ஏளனமாக ஏசுவதும் சென்னையைத் தவிர்த்த தமிழர்களிடம் மண்டிக்கிடக்கும் இன்றியமையாத மோசமான பழக்கங்களில் ஒன்று...
குறிப்பாக திரைத்துறையைச் சார்ந்தவர்களின் சொந்த ஊர் பாசம் மிகவும் அருவருப்பானது.... அதாவது அவர்களது சொந்த ஊர் மக்கள் மட்டுமே நல்ல மனசு கொண்ட பாசக்காரர்களாக காட்டுவதும், மற்றவர்களை மோசமானவர்களாக சித்தரிப்பதும் (குறிப்பாக சென்னை வாழ் மக்களை) பல படங்களில் காட்டிவருகிறார்....
சென்னையில் சினிமா பொழப்பு நடத்தி உயர்ந்த எவனும் தன் நன்றிக் கடனை இந்த சென்னை மக்களுக்கு செய்தானில்லை...
இந்த ஆதங்கம் எனக்கு நிறையவே இருந்தது... ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் அந்த ஆதங்கத்திற்கு ஒரு ஆறுதலைத் தந்திருக்கிறார்கள் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட படக்குழுவினர்கள்...

என் நண்பர்களிடம் உரையாடும் போது எப்பொழுதும் சொல்வேன், சென்னையில் வாழ்வதை பெருமையாக எண்ணுகிறேன் என்று... 
மெட்ராஸ் படத்தைப் பார்த்த பிறகு நானும் ‘மெட்ராஸ்’காரன்தான் என்று உரக்கக்கூவத் தோன்றுகிறது......

நேர்பட கூட்டு...

சிக்கலான கணக்கு...
நெடுங்காலமாய்
தவிக்கிறோம்
விடைதான்
என்னவென்று
புரியவில்லை....
ஆபத்பாந்தவன் போல்
அதிரடியாய்
நீயும்
உனது பரிவாரும்
குதித்தப் பின்தான்
தூசு கிளப்புகிறது
கணக்குக் களம்...
உன் கைகள்
துரிகை தொட்டபின்தான்
ஆம்...
பொற்றாமரைக்
கரங்கள் தொட்டால்
துடைப்பம் கூட
தூரிகையாய் மாறிய
அதிசயம்
இங்குதான் நடக்கும்...

அருமை
நீ தரையில் போட்ட
கணக்கில்
மிக எளிமையாக
விடை கிடைப்பதாக
உன்னால்
வளர்க்கப்படும்
‘காவி’க் குயில்கள்
கூவுகின்றன..
அடேய்...
என்னங்கடா...?
வெற்றிடத்தில்
கூட்டல்
பெருக்கல்னு
போஸ்காட்டி
நக்கலாய்
சொல்கிறீர்கள்
கணக்கு
எளிமையென்று...
இப்படித்தான்
குதர்க்கவாதிகளின்
குரல்கள் ஆங்காங்கே
ஒலிக்கும்
நீயும் அதைக்
கேட்டிருப்பாய்...
என்றாலும்
அதைப்பற்றி
கவலைப்படாதே...
நீ போடும்கணக்கு
சரியானதுதான்
என்பதை
உலகிற்கு
புரியவை...
அதனால்
கண்ட இடத்தில்
தூசி தட்டி
போக்குக் காட்டாதே...
நீ பிடித்த
தூரிகையோடு
கூடையொன்றும்
கொண்டுவா....

கழித்தல்
இடத்திலிருந்து
தொடங்கு...
அப்பொழுது பார்
கணக்கு நேர்படும்...
-கோவை சகா