சொந்த ஊரில் பிழைக்க வக்கில்லாமல் சென்னையில் குடியேறி வாழ்க்கையைத் தொடங்கி சம்பாதித்து ஒரு நிலையை எட்டியபின் தங்களின் சொந்த ஊர் பாசத்தைக் காட்டுவதும், தன்னை வாழவைத்த சென்னையை ஏளனமாக ஏசுவதும் சென்னையைத் தவிர்த்த தமிழர்களிடம் மண்டிக்கிடக்கும் இன்றியமையாத மோசமான பழக்கங்களில் ஒன்று...
குறிப்பாக திரைத்துறையைச் சார்ந்தவர்களின் சொந்த ஊர் பாசம் மிகவும் அருவருப்பானது.... அதாவது அவர்களது சொந்த ஊர் மக்கள் மட்டுமே நல்ல மனசு கொண்ட பாசக்காரர்களாக காட்டுவதும், மற்றவர்களை மோசமானவர்களாக சித்தரிப்பதும் (குறிப்பாக சென்னை வாழ் மக்களை) பல படங்களில் காட்டிவருகிறார்....
சென்னையில் சினிமா பொழப்பு நடத்தி உயர்ந்த எவனும் தன் நன்றிக் கடனை இந்த சென்னை மக்களுக்கு செய்தானில்லை...
இந்த ஆதங்கம் எனக்கு நிறையவே இருந்தது... ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் அந்த ஆதங்கத்திற்கு ஒரு ஆறுதலைத் தந்திருக்கிறார்கள் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட படக்குழுவினர்கள்...
இந்த ஆதங்கம் எனக்கு நிறையவே இருந்தது... ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் அந்த ஆதங்கத்திற்கு ஒரு ஆறுதலைத் தந்திருக்கிறார்கள் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட படக்குழுவினர்கள்...
என் நண்பர்களிடம் உரையாடும் போது எப்பொழுதும் சொல்வேன், சென்னையில் வாழ்வதை பெருமையாக எண்ணுகிறேன் என்று...
மெட்ராஸ் படத்தைப் பார்த்த பிறகு நானும் ‘மெட்ராஸ்’காரன்தான் என்று உரக்கக்கூவத் தோன்றுகிறது......