வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ஜனநாயக சக்திகள் ஒன்றிணையாமல் சாதி ஒழியாது

- இயக்குநர் கோபி நயினார்
நேர்முகம் - சகா. சசிக்குமார்
 சமூக செயற்பாட்டாளர், சிறந்த புத்தக வாசிப்பாளர் என்கிற அடையாளங்களைத் தாங்கி நிற்கும் அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினாருடன் நமது இதழுக்காக நீண்டதொரு நேர்காணலை மேற்கொண்டோம். அடுத்தடுத்த பட வேளைகளிலும், களப்பணியிலும் ஓய்வின்றி செயலாற்றி வரும் அவர் நமக்காக நேரம் ஒதுக்கி நம்முடன் உரையாற்றினார். பேட்டியின் துவக்கத்திலேயே திரைத்துறை தொடர்பாக வேண்டாம் சமூகம் குறித்தும் அரசியல் குறித்தும் பேசுவோம் என்கிற நிபந்தனையோடே பேசத் தொடங்கினார் கோபி. மடைதிறந்த வெள்ளம் போல் சமூக கருத்துகளை வெளியிட்ட வேகமும், தெளிந்த நீரோடை போன்ற ஆழ்ந்த அரசியல் பார்வையும் நம்மிடையே பல சிந்தனைகளை விதைப்பதாக இருந்தது. அவருடனான உரையாடலின் தொகுப்பை இங்கே தருகிறோம்.

படைப்பாளி அல்லது களப்போராளி இதில் கோபி நயினார் என்பவர் யார்? 
களப்பணிதான் எனக்கான அடையாளம்
களப்பணி என்றால் எந்த மாதிரியானது?
இந்தியாவில் ஒரே ஒரு களப்பணிதான் இருக்கிறது. ஜாதியை ஒழிப்பதுதான் முதல் பணி. ஜாதியை ஒழித்த பிறகுதான் மற்ற எல்லா வேலைகளையும் நீங்கள் செய்ய முடியும். ஒரு அரங்கிற்குள் போகவேண்டுமானால் முதலில் கதவு திறக்க வேண்டும். அந்த கதவு திறக்காமல் நீங்கள் அரங்கிற்குள் போக முடியாது அல்லவா?. இந்தியாவில் புரட்சி உள்பட எதுவானாலும் ஜாதி ஒழிப்பை முன்னெடுக்காமல் எதுவுமுமே செய்யமுடியாது.
ஜாதி ஒழிப்பு சாத்தியப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன இருக்கின்றன? 
சாத்தியப்படுவதற்கான கூறுகள் இருக்கிறதா என்ற கேள்வியே தப்புதானே? அதாவது பாதிக்கவைக்கிறவன் ஒருத்தன் பாதிக்கறவன் ஒருத்தன். பாதிக்கப்படுபவர்களின் உரிமையயை நாம் பேசவேண்டும். அவர்கள் வாழனுமா வாழக்கூடாதா என்பதைத்தான் நாம் பேசவேண்டும். ஜாதியால் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. படிக்க முடியவில்லை இதுமாதிரியான விசயங்கள் இருக்கிறதுதானே. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மற்ற எல்லாத் தளங்களிலும் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்தானே. அப்படியானால் இந்தப் பிரச்சனைகள் இருக்கின்றவரை சாத்தியக்கூறுகள் இருந்தேதீரும்.

ஜாதிஒழிப்பைச் செய்வதற்கான முன்னெடுப்புகள் என்ன எடுக்கவேண்டும்?
ஜாதி ஒரு சிஸ்டத்தோடு சம்பந்தப்பட்டது, அதற்க்கு எதிராக ஒரு முடிவ நீங்க எடுக்கவேண்டும் என்றால் இன்னொரு சிஸ்டத்த கிரியேட் பண்ணவேண்டிய தேவையிருக்கு. மக்களை அணித்திரட்ட, அவர்களை எல்லாம் இணைக்க ஒரு கோட்பாடு தேவைப்படுகிறது. தமிழ் தேசியராவதற்கோ, மிகப்பெரிய பாட்டாளிவர்க்க சர்வதிகாரத்தை முன்னெடுப்பதற்கோ என்று எது பேசினாலும் சரி ‘சாதி’ இங்கே ஒரு பெரிய தடையாக இருக்கிறது. அப்போ சாதி ஒழிக்காமல் நாம இங்கே எந்த வேலையும் செய்யமுடியாது. அப்போ சாதி ஒழிப்பையும் - தமிழ் தேசியத்தையும் ஒன்னா நிகழத்த முடியுமா? இல்ல, சாதி ஒழிப்பையும் - பாட்டாளிவர்க்க போராட்டத்தையும் ஒன்னா நிகழ்த்த முடியுமா? கண்டிப்பா நிகழ்த்த முடியும். ஆனால், இதில் எது முன் நிபந்தனையாக இருக்கு என்பதிலிருந்து தொடங்க வேண்டும்.
ஜாதி ஒழிப்பை பற்றி பேசும் பொழுது இடைச்சாதியும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்து செயல்படவேண்டிய காலகட்டத்தில் அவர்களை ஒருங்கிணைக்கிறதுக்கான வழிமுறைகள் என்ன?
ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றால் அதை ஆணிடமிருந்துதானே மாற்றத்தை ஏற்படுத்தனும். அதுபோலத்தான் சாதியை யார் கட்டிக் காப்பாற்றுகிறார்களோ? அவர்களிடமிருந்ததுதான் தொடங்கனும். அவர்களிடமிருந்து சாதியை கைவிடுவதற்கான நெருக்கடியை நாம் இன்றை வரைக்கும் தரவேயில்லை. அதாவது இடைச்சாதிக்கும், தலித்துகளுக்குமான சண்டையாத்தான் அதைப் பார்க்கிறோம். இந்தியா சாதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. இந்த நாட்டை ஒரு குறிப்பிட்ட சாதி மற்ற சாதிகளை சூதாடுது. இந்த சூதாட்டம்தான் சாதிய வன்கொடுமைகளா மாறியிருக்கு. அப்போ இடைச்சாதிகளோடு சண்டை போடுவதல்ல நம் வேலை. காலம் புள்ள அது யாருக்கு லாபம்னா, இந்த சாதி கட்டமைப்பை உருவாக்குகின்ற ஜாதியாளர்(நீணீstமீவீst)க்குத்தான். இடைச்சாதிக்காரனும் தாழ்த்தப்பட்டவனும் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் சாதி அமைப்பின் திட்டம். சாதி ஒழிப்பு என்பது வேறு, இடைச்சாதிகளோடு சண்டையிடுவது வேறு, ஆக, பொதுசமூகத்தில் இருக்கிற ஜனநாயக சக்திகள் ஒன்றிணையாமல் சாதி ஒழியாது. 

அப்படி ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவதற்கு ஒரு பொது தன்மையை கண்டறிய வேண்டும். அந்த பொது தன்மைகள் தான் தமிழ்தேசியம் பேசுவதும், பாட்டாளிவர்க்க பிரச்சனைகளை கையிலெடுப்பதும். ஏனென்றால், இடைச்சாதியிடமும் தொழிலாளி இருக்கிறான், தாழ்த்தப்பட்டவர்களிடமும் தொழிலாளி இருக்கிறான். அவனும் தமிழ் பேசுகிறான், இவனும் தமிழ் பேசுகிறான். அப்ப நாம் எல்லாம் தமிழரா ஒருங்கிணையலாம். ஆனால், ஒருங்கிணையும் போது சாதி பிரிப்பு பிரச்சனையாகிறது. ஊர் தெருவில் இருந்தும், காலனி தெருவில் இருந்தும் ஒன்றாக ஒரு போராட்டத்திற்கு போறாங்கன்னு வைச்சுக்குவோம். போராட்டம் முடிஞ்சு திரும்ப இவங்க காலனிக்கும், அவங்க ஊர் தெருவுக்கும் போயிடுறாங்க. அப்ப வாழ்விடம், இருப்பிடம், வசிப்பிடம் என்னவா இருக்குதுன்னா தனியாகவும் உழைப்பு ஒரு இடத்திலும் இருக்கிறது. ஏன்னா இந்த சாதி அமைப்புதான் ரொம்ப ஆழமா ஊடுருவியிருக்குது. 
ஜாதியை பாதுகாப்பவர்களா யார் இருக்கிறார்கள்?
இந்தியாவில் யாரும் தலித்துகள் இல்ல, அத சொன்னா நீங்க நம்புவீங்களா? இந்தியாவில் தலித்துகள் இருப்பதாக சொல்பவர்கள் ஜாதியாளர்கள்(சிணீstமீவீst). நான் இந்த ஜாதி என்ற அடையாளத்தோடு யார் இருக்கிறது? ஜாதியை பாதுகாப்பவர்களா ஜாதி இந்துக்கள்தான் இருக்கிறார்கள். அதனால் தான் சொன்னேன், இந்தியாவில் தலித்துகள் கிடையாது என்று. இந்தியாவில் தலித்துகள் இருப்பதாக யார் சொல்றாங்கன்னா ஜாதி இந்துக்கள்தான் சொல்றாங்க. ஏன்னா? அவர்கள் ஜாதிய  வளர்த்தெடுக்கனும்னா நான் தலித்தா இருக்கனும், அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். சமதளமா இருந்த நிலப்பரப்பை பள்ளமாகவும், கற்பிதமாக உருவாக்கப்பட்ட மேட்டை மேடாகவும் உருவாக்கப்பட்டதுதான் ஜாதி. இதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும் சொல்கிறார்.

அப்படியென்றால் ஜாதி என்ற மேட்டை கரைப்பது எப்படி?
சமதளத்தில் இருந்து ஒரு பள்ளம் தோண்டப்பட்டா, அந்த பள்ளத்தை நாம கண்டறிந்து  நிரப்பி சமன் படுத்த முடியும். ஆனால், ஜாதி இந்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பள்ளத்தை நிரப்ப முடியாது. அப்ப என்ன பண்ணனும்னா இந்த மேட்டை எடுத்து தூரப் போட்டுடனும். சமதளமா இருக்கிற ஒரு நிலப்பரப்பில் ஜாதிங்கிற மேட்டை உருவாக்கிய ஜாதியாளர்கள்(சிணீstமீவீst) தான் ஜாதியத்தை பின்பற்றுகிறார்கள். அதனால்தான் அவன் சொல்றான் இந்தியாவில் ஜாதி இருக்குன்னு. நாம ஜாதியை பின்பற்றல. தலித்துகள் எப்போதும் ஜாதி இருந்ததா சொல்லல. தலித்துகள் தங்கள் குழந்தைகளை யாருக்கும் திருமணம் செய்ய தயாரா இருக்கிறாங்க. ஆனால், ஜாதி இந்துக்களால் இப்படி ஒரு அறிவிப்ப கொடுக்க முடியுமா? 
ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் கோட்பாடுகள் சமதளத்தில் இருக்கும் போது தலித் அமைப்பினர் பெரியாரை ஏற்றுக்கொள்ளாத சூழலைப்பார்க்க முடிகிறதே?
நீங்க அப்படி பார்க்க முடியாது. தலித்துகள் எல்லா தலைவர்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள்தான். காமராசர், அண்ணாதுரை, மார்க்ஸ் போன்ற பெயர்களை தலித் குடும்பங்களில் பார்க்க முடியும். ஆனால், திராவிட இயக்கங்களில், இடதுசாரிகளில் உள்ள ஒரு சிலரைத் தவிர சாதாரண ஜாதி இந்துக்கள் குடும்பங்களில் அம்பேத்கர்னு பெயர் வைப்பதை பார்க்க முடியாதே? பெரியாரிய சிந்தனையாளர்கள் நிறைய பேர் அம்பேத்கரை கொண்டாடுவதில்லை என்ற இடத்தில்தான் இந்த வேறுபாடு உண்டாகிறது. அது பெரியார் என்ற சித்தாந்தத்தின் தவறு இல்லை. அவரின் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் இன்னும் புரிந்து கொள்ளாதவர்களின் பிழைதான் அது. பெரியார் எங்கேயும் சாதியத்தை பேணி பாதுகாத்தவர் கிடையாது. சாதியம் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று பெரியாரியமும், இடதுசாரியமும் விரும்பியது இல்லை.

சிலர் திட்டமிட்டே பெரியாரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவர் என்று கட்டமைக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்களே?
பெரியார் தலித்துகளுக்கு எதிரானவர்ன்னு எப்பொழுதும் நான் நம்பமாட்டேன். ஒரு தலைவரை மறுதலிப்பதில் வந்து முக்கியமான கவனம் தேவை, எச்சரிக்கை தேவை என்று நினைக்கிறேன். பெரியார் எதுவும் செய்யல என்பது வீண் பழி. அவர் வாழ்ந்த காலங்களில் இந்த சமூகத்திற்கு இடர்களை உருவாக்கியவர்களை எந்த சமரசமும் இன்றி எதிர்த்ததில் பெரியாரை போல் ஒருவரை பார்க்க முடியாது. பெண்கள் சம்பந்தமான பெரியாருடைய கருத்துகள் இன்றும் அவசியமானது. கடவுள் மறுப்பைப் பற்றி அவர் பேசிய கருத்துகள் மிக முக்கியமானது. மொழி குறித்து பெரியாருக்கு இருந்த அறிவு வேறுயாருக்கும் இருந்ததில்லைன்னு நான் நினைக்கிறேன். சாதி ஒழிப்பில் பெரியார்  அவர் வாழ்ந்த காலத்தில் திடகாத்திரமாக எவ்வளவு வேலை செய்ய முடியுமோ அவ்வளவு வேலை செய்தார், அந்த வேலையில் உங்களுக்கு எந்த சந்தேகம் இருக்கா? அதுதான் நமக்கு ரொம்ப முக்கியம். 
தந்தை பெரியாரையும் டாக்டர் அம்பேத்கரையும் நாம் எப்படி ஒப்பிட்டு புரிந்துகொள்வது?
புரட்சியளார் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் சமகாலத்தில் ஒரே மாதிரியான பிரச்சனைகளை வெவ்வேறு நிலைகளில் எதிர்கொண்டவர்கள். சனாதன தருமத்தை கடுமையாக விமர்சனங்கள் உருவாக்குவதின் மூலமாக, கிண்டல் செய்வதின் வழியாக, கேள்வி கேட்பதின் வழியாக தோலுரித்துக் காட்டியவர் தந்தை பெரியார். ஒரு ஆதிக்கம் இரண்டு தளங்களாக நிற்கும். 1. பொய்கதைகளை பேசுவதின் மூலமாக தன்னை நிரூபிக்க முயற்சி செய்யும். 2. அந்த பொய் கதைகளை மிகப்பெரும் வரலாற்று ஆய்வாக மாற்றுவதற்கு மிகப்பெரிய வேலை செய்யும். ஒரு ஆதிக்க சமூகம் பொய்க் கதைகளை உருவாக்கிய புராணக் கதைகளை எல்லாம் தந்தை பெரியார் கிழித்தெறிகிறார். 
அதேநேரத்தில் ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக, அதாவது தான் தான் ஒரு பூர்வகுடி சமூகம், பெரிய அறிவார்ந்த சமூகம் என்று நிரூபிக்க முயற்சிகள், திட்டமிடுதல் நடக்கும் போது, மிகப்பெரிய ஆய்வுகளோடு, அவர்கள் வரலாறு முழுவதும் மனித குலத்துக்கே எப்படி எதிரானவர்கள் என்பதை புரட்சியாளர் அம்பேத்கரை போல வேறுயாரும் ஆய்வுகள் செய்யவில்லை. அவருடைய புத்தகங்கள் மிக முக்கியமானது. ஆக, இரண்டு பேருமே நமக்கு இரண்டு விதமான பலம். 
தந்தை பெரியாரை அல்லது டாக்டர் அம்பேத்கரை மறுதலிப்பது யாருக்கு லாபம்? எதற்காக மறுதலிக்கிறார்கள்?
பெரியாரை மறுப்பவர்கள் யார் தெரியுமா? அம்பேத்கரை மறுப்பவர்கள். அதன் உண்மை! தந்தை பெரியாரை மறுப்பது யாருக்கு பலமா போய் சேரும் என்றால், ஜாதி இந்துக்களுக்கு பலமா போய் சேரும். ஏன்னா? தாழ்த்தப்பட்டவர்கள், ஜாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரை தலைமையாக வைத்திருக்கிறோம். பொது சமூகத்தில் இருக்கிறவர்கள் ஜாதி ஒழிப்பு அரசியலுக்கு வரணும்னா பெரியாருடைய சிந்தனைதான் அடிப்படை. அவர்கள் பெரியாரை படிச்ச பிறகு அதை சரியாக உள்வாங்கிட்டாங்கன்னா அம்பேத்கரிடம் வந்து சேர்ந்துவிடுவார்கள். பொது சமூகம் புரட்சியாளர் அம்பேத்கரை வந்து சேரணும்னா பெரியார்தான் நுழைவாயில்.  அம்பேத்கரை எதிர்காலத்தில் மறுத்தா மட்டும்தான் இங்கே மிகப்பெரிய சாதி கலவரங்களை ஏற்படுத்த முடியும். இது ஆதிக்க சாதி இந்துக்களின் மிகப்பெரிய வேலைத்திட்டம். 

தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலும் RSS, இந்து முன்னணி போன்ற சக்திகளுக்கு செல்லக்கூடிய காரணங்கள் என்ன? 
வறுமை - அதிகாரமற்ற நிலையில் இருக்கும் ஒரு சமூகம், தன்னை விடுவித்துக் கொள்ள இரண்டு வேலைதான் செய்யும். ஒன்று தன்னை யார் எதிர்க்கிறார்களோ அவர்களை நெஞ்சுறுக்கி எதிர்க்கும். இரண்டு பணிந்துவிடும். பணிவது என்பது ரொம்பவும் குறைவுதான். இங்கே இரண்டு தலித்துகள் இருக்கிறார்கள். ஒன்று கார்ப்பரேட் தலித்துகள் இரண்டாவது காலனி தலித்துகள். கார்ப்பரேட் தலித்துகள் நிறைய கருத்துரிமை பேச துவங்கி இருக்கிறார்கள். தலித் விடுதலைக்கு அவர்களால்தான் ஆபத்து இருக்குது. அவர்கள் மக்கள்கிட்ட போய் வேலை செய்யமாட்டார்கள். மாறாக, கல்லூரியில் படித்த தலித்துகிட்ட போய் அமைப்பை தொடங்குவார்கள். வடமாநிலங்களில் இந்துத்துவா இளைஞர்கள் எப்படி வேலை செய்தார்களோ? அதுபோல. இப்ப அதற்கான வேலை இங்க நடந்துகிட்டு இருக்கு. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளை ஒழிப்பதற்கும், மாயாவதி போன்ற தலைவர்களின் கட்சிகளை ஒழிப்பதற்கும் மிகப்பெரிய வேலை நடந்திகிட்டு இருக்கு. அதற்கு அவர்கள் யாரைப் பயன்படுத்துறங்கனா, தலித்துகளைதான். புதுசா வருகின்ற அமைப்புகள் மீதுதான் நீங்கள் சந்தேகப்பட்டாகனும். அவர்களுக்கு பணம் ஏது? பின்னால் இருப்பவர்கள் யார்? என்பதை கண்காணிக்க வேண்டும். அந்த கார்ப்பரேட் தலித்துகள் மீது ரொம்ப கவனமா இருக்க வேண்டும். ஏன்னா? அவன்தான் நம் தத்துவத்தை காலிபன்னுவான். 
புத்த நெறியை பற்றி அதிகமான உரையாடல்கள் தலித் இளைஞர்கள்கிட்ட தொடங்கியிருக்கிறதே. அதற்கும், நீங்கள் குறிப்பிடுகிற கார்ப்பரேட்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
அதைத்தான் சொல்றேன். இங்கு இரண்டு புத்திஸ்டு இருக்கிறான். புத்திஸ்டா இருக்கிறவன் கண்டிப்பா பார்ப்பனியத்தை எதிர்க்கனும். இதை எதிர்க்காத புத்திஸ்டுகளிடம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். அவன்தான் ரொம்ப ஆபத்தானவன். புரட்சியாளர் அம்பேத்கர் இந்தியாவில் இரண்டே இரண்டு சண்டைதான் இருக்குது என்கிறார். இது என்னனா? பவுத்தர்களுக்கும், ஆரியர்களுக்கும் நடந்த சண்டை. கார்ப்பரேட் தலித்துகளால் உருவாக்கப்பட்ட புத்திஸ்டுகள் எப்பொழுதும் பார்ப்பனியத்தை எதிர்ப்பது இல்லை... சாதி இந்துக்களை எதிர்ப்பது இல்லை... இந்து மதத்தை எதிர்ப்பது இல்லை. ஆனால், தன்னை புத்திஸ்டுன்னு சொல்லிக்கிறாங்க. இது எப்படி சரி? இவர்களிடம் தான் நாம எச்சரிக்கையா இருக்கனும்.
ஒருபக்கம் ராஜலட்சுமி - சவுமியா, போன்ற சிறுமிகள் மீதான பாலியல் வன்கொலைகள், மறுபுறம் நந்தீஸ் - சுவாதி போன்றவர்களின் மீதான ஆணவப் படுகொலைகள் எப்படி பார்க்குறீர்கள்?
இது எல்லாமே தலித்துகள் மீது நடத்தப்படுகிற படுகொலைகள்தான்.    ஆதிக்க சாதிகளால் தலித்துகளுக்கு பேராபத்து நிகழ்ந்தா சட்டம் அவர்களை பாதுகாக்கும், துன்புறுத்தினால் தண்டிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய வேலை இங்கே நடக்கல. ஏன்னா? ஆதிக்க சாதிகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் இந்த அரசுதான் துணையா இருக்குது. ஆதிக்க சாதிகள் என்று சொல்லிக்கொள்கிற சமூகத்தில் இருந்து ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டாள், உடன்படலன்னு கழுத்து அறுத்து கொல்லப்பட்டாள் அப்படின்னு எங்கயாவது உங்களால் காட்டமுடியுமா? 
ஒரு தலித் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆதிக்க சாதிகள் முடிவு செய்கிறார்கள். தலைமுறை தலைமுறை அந்த எண்ணம் வளர்த்தெடுக்கப்படுகிறது. அதனால்தான் நான் கூப்பிட்டா நீ படுக்கமாட்டியா..? உன் கழுத்தறுத்துப் போட்டுறேன் நீ என்ன பண்ணுவ? என்று கூறிட்டே 13 வயசான அந்த சின்னப்புள்ளைய கழுத்தறுத்துட்டு போயிட்டே இருக்கிறான். உலகத்துல வேறுயாருக்கு எந்த சமூகத்துக்கு இதுபோல நடக்கும்? அந்த மனதைரியமும், அந்த பக்குவமும் எங்கிருந்து உருவாச்சுன்னு நினைக்கிறீங்க? சாதி அவனுக்கு உருவாக்கி வைச்சிருக்கு. அப்போ சாதிய ஒழிக்கலைன்னா ராஜலட்சுமிக்கு நடந்த கொடுமை எல்லோருக்கும் நடந்துகிட்டே இருக்கும். ஆணவ கொலைகள் நடந்துகிட்டே இருக்கும். ஆசையா வளர்த்த தன்னுடைய மகள் வேறு சாதிக்காரனோடு போயிட்டான்னா அந்த பெண்ணின் பெற்றோருக்கு என்ன நெருக்கடினு நெனைக்கிறீங்க? அவர்கள் சார்ந்திருக்கும் சாதிய சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கமுடியாத அளவுக்கு அந்த சாதிக்காரர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். அதனால தன்னை தூய்மையானவனாகவும் தான் சார்ந்த சாதிக்காக கடமைப்பட்டவர்களாகவும் காட்டிக்கொள்ள தான் பெற்ற பிள்ளையை கொல்லும் மனநிலைக்கு  ஆளாகிறார்.  அதனால் எல்லா வேலையையும் நிறுத்திட்டு, சாதியை ஒழிப்பதை தவிர நமக்கு வேறு வேலையில்லை என்பதை உணர்ந்து செயல்படாத வரை இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வராது.

நிருபயா-ஸ்வாதி கொலைகளுக்கு கேள்விகேட்டு போராடிய பொதுசமூகம், அஷிஃபா - நந்தினி கொலைகளின் போது மவுனம் காத்ததே?
ஆதிக்க சாதியில் இருக்கற பெண்ணுக்கு ஒரு பிரச்சனைனா அணிதிரள்வதற்கும், தலித் பெண்களுக்கோ, இஸ்லாமிய பெண்களுக்கோ ஆபத்து என்றால் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் சாதிதான் காரணம். வேறு என்ன? பொது சமூகத்தில் இருக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தப்பட்டா நம்ம சமூகத்தில் இருக்கற பெண் பாதிக்கப்பட்டுட்டா இந்தியா முழுவதும் அணிதிரளனும்னு நினைக்கிறாங்க. அன்றைக்கு டெல்லியில் ஒருங்கிணைந்து சோனியாகாந்தி வீட்டு முன்பு நின்னு போராடியவர்களெல்லாம் யாருன்னு நினைக்கிறீங்க..? அவர்களுக்கு தெரியாதா டெல்லியில் வேறு யாரும் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படலையான்னு..? அதைப்பற்றி தெரியாதுன்னு சொன்னாங்கனா அதைவிட வேதனைக்குரியது வேறு என்ன இருக்க முடியும். 
ஓட்டரசியல் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
ஓட்டரசியலில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இந்த நாட்டின் மீது மூலதனம் செலுத்தப்பட்ட முதலாளிகளுக்கு பிரதிநிதிகளாக இந்த அரசியல்வாதிகள் இருப்பார்களே ஒழிய மக்களின் அடிப்படை தேவைகளுக்குக்கூட, சின்னச் சின்ன சீர்திருத்தங்கள், மாற்றங்கள் செய்வதற்குக்கூட இது பயன்படாது.   இந்த தேர்தலே கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படுகிறது. அப்ப நீங்க வாக்களிப்பீங்களா...? எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைச்சா தேர்தலில் நிப்பிங்களான்னு கேட்டா, கண்டிப்பா வாக்களிப்பேன் தேர்தலிலும்கூட நிப்பேன். ஏன்னா இதுக்குள்ள போய் நாம் ஏதாவது செய்திட முடியுமானு பார்ப்பேன். அது ஒரு நம்பிக்கைதான். புரட்சியின் மீது எனக்கிருக்கிற முழுமையான நம்பிக்கை, எப்போதும் ஓட்டரசியல் மீது கிடையாது. தற்போதைய பாரளுமன்ற - சட்டமன்ற தேர்தலின் வழியாக அதிகாரத்தை பெறுவதற்கான பயிற்சியை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இது ரொம்ப சமரசமான பிற்போக்குத்தனமான உண்மையாக இருந்தாலும், ஆனால், இதுமட்டும்தான் நிகழும் என்கிற மோசமான விளைவு இதற்குள் இருக்கிறது. பாரளுமன்ற - சட்டமன்ற ஏதாவது செய்துவிடும் என்கிற நம்பிக்கையை வெறும் பிரச்சாரத்தின் மூலம் மாற்றிவிட முடியாது. என்ன பண்ணலாம்னா திரும்ப திரும்ப வாக்களித்து வாக்களித்து ஒரு கட்டத்தில் மக்களுக்கு சலிப்பு ஏற்படும் போது நம்முடைய எல்லா திட்டங்களும் நிறைவேறும். 

அடுத்து ஒரு முக்கியமான கேள்வி சுயஜாதி பெருமை அனைத்து மட்டங்களிலும் வந்துவிட்டதே அதை எப்படி பார்க்கிறீர்கள்?
சுயஜாதி பெருமை எப்போதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. புரட்சியாளர் அம்பேத்கர் மட்டும்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிகச் சரியாக பட்டியலின ஜாதிகள் (ஷிமீபீuறீtமீபீ சிணீstமீ) என்று பெயர் வைத்தார். ஏன் வைத்தார்னா நீ எந்த ஜாதி அடையாளத்துக்குள்ளும் உன்னை அடையாளப்படுத்திக்கக்கூடாது. அட்டவனைப்படுத்தப்பட்ட இந்த ஜாதிகள் எல்லாமே ஆதிக்க ஜாதிகளால் ஒடுக்கப்படுது. இந்த அட்டவனைப்படி ஒருங்கிணைந்து பிரச்சனைகளை எதிர்கொள்ளாதவரை உங்களால் விடுதலை பெற முடியாது என்பதை புரிந்து கொள்வதற்குத்தான் பட்டியலின ஜாதிகள் (ஷிமீபீuறீtமீபீ சிணீstமீ) என்று பெயர் வைத்தார். சுயஜாதி பெருமை பற்றி பேசுவதற்கான எந்த வாய்ப்பையும் அவர் தரவேயில்லை. 
படித்த தலித் இளைஞர்களிடம் சுயஜாதி பெருமை பேசுவது அதிகமாகி உள்ளதே?
அப்படினா புரட்சியாளர் அம்பேத்கரை அவன் படிக்கலைன்னுதான் அர்த்தம். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒருபக்கம் ஜாதியால் ஏற்படும் இழுக்கிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதேநேரத்தில் ஆதிக்க ஜாதிகளைப் போலவே சுயஜாதி சாயல்கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களால் ஜாதி ஒழியாது, இவர்கள் ஜாதியை ஒழிப்பார்கள் என்ற நம்பிக்கை எப்பொழுதும் கிடையாது.

நீங்கள் படைப்பாளியாகவும் ஒரு அமைப்பில் பொறுப்பாளராகவும் சமதளத்தில் இயங்குகிறீர்கள், இதில் ஏதும் இடர்ப்பாடு வருவதில்லையா?
படைப்பாளியா இருக்கற நான் சோறு சாப்பிடனுமில்ல, படைப்பாளிய இருக்கற நான் கவிதைகளையும், கதைகளையும் எழுதி எழுதி சாப்பிடறனா? சோறு தானே சாப்பிடறேன். அந்த சோறு நூறு விவசாயிகளால், தொழிலாளிகளால் உருவாக்கப்பட்டது. அவர்களைப் பற்றிய விடுதலையைப் பற்றி பேசுவதுதானே என்னுடைய படைப்பா இருக்கனும். நான் ஒரு விவசாயி குடும்பத்த சேர்ந்தவன் தான் சோறு எங்கிருந்து வந்ததுன்னு எனக்கு தெரியுமில்ல. அப்ப என் படைப்பு அவர்களுக்கானதாகத்தானே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தொழிலாளிகளுக்கு.
படங்கள் - வழக்கறிஞர் குணா & அபு 

கிளிகளின் காதலன் கேமிரா சேகரோடு ஒரு உரையாடல்

சென்னை, ராயப்பேட்டை, பாரதி சாலையில் அமைந்துள்ளது அந்த கிளிகளின் காங்கிரீட் சரணாலயம். அந்த பழங்கல கட்டடத்தை அப்படித்தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு காலையும் மாலையும் கிளிகளால் சூழப்பட்டிருக்கும். கேமரா ஹவுஸ் என்ற பெயரில் கேமரா பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வரும் கேமரா சேகர், தனது கேமரா காதலைக் கடந்து, கிளிகளின் காதலனாக கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் அறியப்படுகிறார். அவருடன் நாம் மேற்கொண்ட ஒரு சிறப்பு நேர்காணல். 

எங்களுடைய வாசகர்களுக்கு உங்களைப்பத்தி சொல்லுங்களேன்.
நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். சொந்த ஊர் தர்மபுரி. அப்ப நான் 6வது படிச்சுட்டு இருந்தேன். அப்பா  என்னை தொழில்ல சேர்த்து விட்டதால மேற்கொண்டு படிக்க முடியலை. இதை போக்க நிறைய படிக்க ஆரம்பிச்சேன். குறிப்பா மெக்கானிசம் சார்ந்த நூல்கள். இதனால எங்க ரைஸ் மில்லுல என்ன பிரச்னை வந்தாலும்  நானே சீர் செய்யத் தொடங்கினேன். இப்படி ஆரம்பிச்சது டிவி, ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்னு வளர்ந்தது. அதேசமயத்துல  தொழிலை நிர்வகிக்கவும் கத்துக்கிட்டேன். அப்பாவோட சின்ன ஒரு மனவருத்ததுல நான் சென்னைக்கு வந்து 35 வருசம் ஆகுது. அப்போ சென்னைல கேமரா ரிப்பேர் பண்றவங்க மூன்று பேர் தான் இருந்தாங்க. ஏன் நாம இந்த தொழில எடுத்து செய்ய கூடாது என்ற ஒரு அர்வம் வந்துருச்சு.  என்னால இந்த கேமரா சர்வீஸ் பண்ற வேலையில் வெற்றிபெற முடியாதுன்னு கிண்டல் செய்தவர்கள் நடுவே ஒரு பேசப்படற ஆளா வரனும்னு விடியறதே தெரியாம உழைச்சேன். ஒரே வருசத்துல என்னுடைய என்னுடைய பேரு பிரபலம் ஆகிடுச்சு. நானும் பெரிய ஒரு மெக்கானிக்குன்னு ஒரு அந்தஸ்த்துக்கு வந்துட்டேன். அப்புறம் இந்த சமுதாயத்துக்கு அந்த தொழில்ல எவ்ளோ வருவாய் ஈட்டறோம். சமுதாயத்துக்கு நம்மாளால என்ன செய்ய முடியும் அப்படியென்ற ஒரு குறிக்கோளோட அது இன்னொர் ஒரு சேவையா செஞ்சேன்.
உங்களுக்கு இந்த பறவைகள் மீதான காதல் எப்போது வந்தது?
       எனக்கு சினன வயசுல இருந்தே உயிரினங்கள் மேல அன்பு இருந்தது. இந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் சுவரச்   சுத்தி அரிசி, தண்ணி வச்சிருவோம். நாள் முழுவதும் சிட்டுகுருவி, அனில், புறா சாப்ட்டுட்டு இருந்தது. ஆரம்பத்துல ஒரு கிலோ வரைக்கும் அரிசி வச்சிட்டு இருந்தோம். 2004 ஆம் ஆண்டு சுனாமி வந்தபொழுது நாலோ அஞ்சோ கிளிகள் வந்தாங்க. ஒரே வருசதுல ஆயிரகணக்கான கிளிகள் வர அரம்பிச்சிடுச்சி. அப்படி வருகிற கிளிகள் வீட்டு சுவத்துல மட்டும்தான் ஒக்காந்து சாப்பிடும். எடம் பத்தாதுனால குறுக்க ஒரு 15 கட்டைய வாங்கி போட்டோம்.  அதுக்கு பிறகு 2000 கிளி உக்காந்து சாப்பிடுவாங்க. அவிங்க போனதும் அடுத்த  இரண்டாயிரம் கிளிகள் வரும். இப்படி ஒரு நாளைக்கு ஏறக்குறைய சீசனுக்கு தகுந்தமாதிரி 3000 கிளி வரும். வெய்யில்னா அவுங்களுக்கு ஆகாது. மழைன்னா அவுங்களுக்கு ரொம்ப புடிக்கும். மழைகாலத்துல 4000, 5000 கிளிகள் வர ஆரம்பிச்சிடும்.  காலைல 5 மணிக்கு எழுந்து உணவை தயார் பண்ணி 6 மணிக்குள்ள வச்சிடனும். 6 லிருந்து ஒரு 7 மணிக்குள்ள சூரியன் உதயம் ஆகுறதுக்குள்ள சாப்ட்டுட்டு போய்டுவாங்க. புயல் நேரங்களில் காலைல 6 மணிக்கு  வரவங்க மாலை 6 மணி வரைக்கும் இங்கேயே இருப்பாங்க. அந்த மாதிரியான நேரங்களில் நாள் முழுதும் அவங்களுக்கு வேலை செய்யனும்.

பரபரப்பான சூழல்ல இந்த பறவைகளுக்கு எப்படி உங்களால  நேரம் ஒதுக்க முடிகிறது?
அன்பு தான் வாழ்க்கை லிஷீஸ்மீ வீs றீவீயீமீ. பணம் வாழ்க்கை கிடையாது. பணம் தேவை. ஆனா பணமே வாழ்க்கை இல்லை. அதனால நம்ம சம்பாதிக்கற பணத்துல எதோ ஒரு உயிரினங்களுக்கோ நம்ம ஒரு சேவை செய்யனும். இப்ப வந்து நான் அப்படிதான் பண்ணிட்டு இருக்குறேன். என்னுடைய வருமானத்துல 40 விழுக்காடு ஒதுக்கி சேவையா செய்யறேன். அதே நேரத்துல ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான  உதவிகளை செய்துட்டு வரேன். கிளிகளின் உணவுப் பொறுத்தவரை   இன்றைக்கு 60 கிலோ வரைக்கும் செலவாகுது. அதுவே மழை மற்றும் புயல் காலங்களில் ஒரு நாளைக்கு 75 கிலோ வரைக்கு செலவாகும். குறிப்பா சொல்லனும்னா ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய ஒதுக்கனும். அப்படி கஷ்டமான நேரத்துல பொதுமக்கள் உதவி பண்ணுவாங்க. நான் ஒரு கேமரா ரிப்பேர் அதனால அதுல வர்ற வருமானத்த வச்சிதான் இவங்களுக்கு செலவு பண்ணிட்டு வரேன். அன்பு தான் வாழ்க்கைங்கறதால மகிழ்ச்சியா செஞ்சிட்டு வருகிறேன்.
இந்த மாணவர்களுக்கு உதவற நீங்க அவர்களிடம் பறவைகளின் நேசிப்பைபற்றி ஏதாவது சொல்லி இருக்கீங்களா?
கண்டிப்பா ஏன்னா அன்பை விதைச்சாதான் வருங்கால மாணவர்களுக்கு அன்புன்னா என்னான்னு தெரியும். சில தாய் தந்தையர் குழந்தைகளுக்கு அன்பை சரியா போதிக்காததுனால தான் சில ஜெனரேசனுக்கு அன்புன்னா என்னான்னு  தெரியாம போயடுது. அதனால தான் வறவங்களுக்கு அந்த அன்பை நேசிக்கறது எப்படின்னும், கிளிகளுக்கு சேவை செய்வது போன்ற எண்ணத்தையும் மாணவர்களுக்கு எடுத்து சொல்லுவேன். இந்த சமுதாயத்துக்கும் இயற்கைக்கும் உங்களால என்ன சேவை செய்ய முடியுமோ அது செய்யுங்கள் அப்டின்னு சொல்லும் போது சில மாணவர்கள் பின்பற்றுகிறார்கள்.  

இங்கு வர கிளிகளை இனம் காண முடியுதா. கிளிகள்லேயே பல வகைகள் இருக்கு அந்த வகைகளை பார்க்க முடியாது?
பொதுவா எடுத்தீங்கண்ணா ஆண் பெண் இருபாலர் இருக்காங்களே கிளிகள்ல. ஆணுக்கு கழுத்துல ஒரு வளையம் இருக்கும். இந்த கருப்பு சிவப்பு வளையம் ஓராண்டுக்கு அப்பறம் தான் வரும். ஓராண்டுக்கு முன்னால அது என்ன இனமுன்ன கண்டு பிடிக்க முடியாது. பெண் கிளிக்கு அந்த இது இருக்காது. மத்தபடி கிளிகளில் மூனு, நாலு  வகையான கிளிகள் இருக்கு. அலெக்சாண்டிரியான்னு ஒன்னு இருக்கு. அலெக்சாண்டிரியா அரிதான இனம். அதனால தான் இந்த அலெக்சாண்டர் இனத்தை புடிச்சு வெளிநாடுகளுக்கு எடுத்துட்டு போறாங்க. அதனால்தான் அரசு இந்த வகை கிளிகளை பிடிப்பதற்கு தடைவிதித்திருக்கிறது. கிளிகளை வளக்ககூடாது வீட்டுல இறக்கையை வெட்டி அடிமை மாதிரி வச்சிக்க கூடாதுன்னு பொது மக்களுக்கு சொல்லனும். 
கிளிகள் பத்தி பேச ஆரம்பிச்சாலே, அவர்கள், இவர்கள்னு மரியாதையா குறிப்பிடுறீங்க எப்படி இந்த உணர்வு வந்தது?
எல்லாரும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க.  அது என்ன உயிரினமா இருந்தாலும் மரியாதை தரனும்னு சின்ன வயசிலே இருந்தே பழகிருச்சு. ஒரு சின்ன பையனா இருந்த கூட வா ராஜா என்ன ராஜா சௌக்கியமா? நல்லா படிக்கிறியா? அப்படின்னு பேசியே பழகிட்டோம். அதனுடைய தொடர்ச்சிதான் கிளிகளை குறிப்பிட்டு சொல்லும் போதும் அப்படி பேசத் தோன்றுகிறது.
கிளிகள் சுதந்திரமா இருக்கறத தான் நீங்கள் விரும்புவீர்கள். இங்க பார்தத சில கிளிகள் கூண்டுக்குள்ள இருக்குது. அதுக்கு என்ன காரணம்?
கிளிகள் வந்து சுதந்திர பறவைகள். அதை வாங்காதீங்க. கூண்டுல வெக்காதீங்க உங்கள ஒரு 4 அடி கூண்டுல ஒரு 4 அடி கூண்டுலஒரு நாள் திuறீறீ-ஆ உங்கள நிக்க வெச்சா உங்களுக்கு என்ன மாரி தண்டணையோ எவ்ளோ சிரமம் இருக்குமோ அதே போல தான் கிளிகளுக்கும். அது அழகா இருக்குன்றதுக்காக நீங்க விலை குடுத்து வாங்கி அதோட இறக்கைய கட் பண்ணி உங்களுக்கு அடிமை மாதிரி வச்சிக்கிட்டு அதை நடக்க சொல்றதும், பேச சொல்றதும், மேல ஏறிக்கச் சொல்றதும் அதெல்லாம் தவறு. அதை வந்து செய்யாதீங்க்ன்னு ஒவ்வொரு பத்திரிகை பேட்டிலையும் சொல்றதுனால சிலர் மனம் திருத்தி கூண்டோட இங்க வந்து வச்சிட்டு போய்டுவாங்க. இவை எல்லாமே பறக்க கூடாது என்பதற்காக இறக்கையை வெட்டி இருப்பாங்க. இப்போ அந்த இறக்கை வளராது. அதனால அவங்கள குளிக்க வெச்சிட்டு அந்த வெட்டுன இறக்கையெல்லாம் புடுங்கி போட்டுட்டா ஒரு நாலு மாசத்துல வளர்ந்திடும். அப்புறம் திறந்துவிட்டா சுதந்திரமா பறந்து போய்டுவாங்க. இறக்கை வளருகிற வரைக்கும் அவங்க கூண்டுக்குள்ளதான் இருக்கனும். ஏன்னா பூனை உள்பட சிலவற்றில் அவர்களை பாதுகாக்க வேண்டியிருப்பதால் பாதுகாப்புக்கா அப்படி வைத்திருக்கிறோம்.  இறக்கை வளர்ந்ததும் அவங்களோட பிறப்புரிமையை தேடி பறந்திடுவாங்க.


இந்த கிளி வளர்ப்புல உங்க குடும்பத்துல இருக்கறவங்களோட பங்களிப்பு எப்படிங்க?
இது கிளி வளர்ப்பு இல்லை, அவங்களுக்கு சேவை செய்யறது. இப்போ நான் எங்கேயும் போக முடியாது. எப்படி கிளிகள கூண்டுல வச்சி வளர்க்கறாங்களோ அதேமாதிரி இங்க வருகிற எல்லா கிளியும் என்னை இந்த வீட்டு கூண்டுல வச்சிட்டாங்க. காலை 5 மணியில் இருந்து 6 மணிவரை  இங்க இருக்கனும். அதேமாதிரி சாயங்காலம் 3.30-ல இருந்து 7.00 மணி வரை இங்க இருக்கனும் அதனால எங்கேயும் போக முடியாது. நான் ஒரு பிஷீusமீ அரஸ்ட் மாதிரி தான் இப்போ இருக்கேன். நான் எங்கியாவது நல்லது கெட்டதுக்கு ஊருக்கோ ஒரு நாள் தான் போவேன். அப்போ வந்து வீட்டுல இருக்கவங்க பாத்துக்குவாங்க. வீட்டு உதவி இல்லன்னா எதுவும் செய்ய முடியாது. இப்பவே என்னோட சின்ன பேத்திகளுக்கு அன்பை விதைக்கிறேன். நாளைக்கு நான் இல்லனா கூட அவங்க செய்யனும்ன்ற ஆர்வத்தை தூண்டி அன்பை விதைச்சிருக்கேன். 
உங்களுக்கு பிறகு இந்த கிளிகளை நேசிக்கறதுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?
நான் இப்ப இருக்குறது வாடகை வீடுதான். 25 வருசமா நான் இங்க இருக்கேன்னா முதல்ல இந்த உரிமையாளருக்குத்தான் நன்றி சொல்லனும். ஏன்னா ஒரு எடத்துல 25 வருசம் வெக்கறதே பெரிய அபூர்வம். இப்ப இந்த இடத்த அவங்களுக்குள்ள பிரச்சனைகள் விக்கனுன்னு முடிவெடுத்திருக்கிறார்கள். அதனால இந்தப் பணி வந்து தடைபடக்கூடாதுன்னு ரொம்ப ஆதங்கத்தோட இருக்கேன். எப்படியாவது நாம தொடங்கிய இந்த பணியை தொடர்ந்து செய்யனும், இந்த பறவைகள் வந்து ஏமார்ந்து போய்ட கூடாதுன்னு. என்னிடம் இப்போ ஒரு நாலாயிரம் கேமராக்கம் சேகரிச்சு வெச்சிருக்கேன். அது விலைமதிக்க முடியாத பொக்கிஷம் 200 வருசத்துக்கு முன்னாடி வந்த கேமரா உள்ளிட்ட பல அறிய பொருள்கள் இருக்கு. அதை அரசு வாங்கிட்டு, இந்த இடத்தை வாங்கி சேவையை தொடர்வதற்கு உதவி பண்ணாங்கன்னா நல்லா இருக்கும். அரசோ  இல்ல தன்னார்வ தொண்டு நிறுவனமோ£, பெரிய பணம் படைத்தவர்களோ யாரா இருந்தாலும் எனக்கு உதவி பண்ணலாம்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

என் இனத்திற்கு எதிராக எது வந்தாலும் எதிர்த்து போராடுவேன் -

                                      செந்தமிழன் சீமான் 
                           
                                                                                                 
 நேர்முகம் - சகா.சசிக்குமார்

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இன அழித்தொழிப்பை செய்துவரும் சிங்கள, இந்திய அரசுகளைக் கண்டித்து மேடைகளில் முழங்கியமைக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் இரண்டுமுறை கைது செய்யப்பட்டவர் இயக்குனர் சீமான். சமீபகாலமாக இளைஞர்களிடமும்,  த மி ழி ன உணர்வாளர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். எப்பொழுதும், யாரிடமும் பகுத்தறிவு, இன உணர்வு, புரட்சிகர சிந்தனைகள் என பேசி வருவதோடு, கொண்ட கொள்கைக்காக வாழ்ந்து வருகிறார். கடந்த நாடளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கூட்டணியை எதிர்த்து மேற்கொண்ட பரப்புரை தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைத்து “நாம் தமிழர்” என்ற இயக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் பணியில் இருந்த அவரிடம் நாம் கண்ட சிறப்பு நேர்முகம்.

கேள்வி : “நாம் தமிழர்” என்கிற புதிய இயக்கம் எதற்காக?
நடந்து முடிந்த ஈழத்தமிழர் படுகொலையில் ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் அழித்தொழிப்பது என்று ஒன்னரைக் கோடி சிங்களனும் ஒற்றுமையா செயல்பட்டான். ஆனால், தாயகத் தமிழனோ ஜாதி, மத, கட்சி என பிளவு பட்டிருந்தான் ஒரு நாளும் தமிழனாக இல்லை. அதனால்தான் ஈழத்தில் மொத்த இனமும் செத்து விழுவதை பார்த்து உணர்வுள்ளவன் கதறினான், துடிச்சான் அவனால் இயலாமல் போனது. மிச்சமிருக்கிற தமிழன்  எனக்கென்ன என்று தான் தோன்றித்தானமா போளிணி விட்டான். ஆறரைக் கோடித் தமிழர்களில், அரைக் கோடித் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராடி இருந்தால் கூட அங்கு ஒவ்வொரு உயிரையும் சாகாமல் தடுத்திருக்கலாம். ஒரு தேசிய இனம் தன் விடுதலைக்கான போராட்டத் தில் அந்த இனத்து மக்களே பங்கெடுக்காத அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றனும் என்கிற எண்ணத்தோடு, நானும் தமிழன், நீயும் தமிழன் அதனால் நாம் ஒன்றினைந்து நமக்கான தேவை களை வென்றெடுப்போம் வாருங்கள் உறவுகளே என்று தொடங்கியது தான் இந்த “நாம் தமிழர்” இயக்கம். 

கேள்வி : முற்போக்கு இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள் இதைத்தானே சொல்லி செயல்படுகிறார்கள். இதில் புதிய இயக்கம் தேவைப்படுகிறதா?
முற்போக்கு இயக்கங்கள் தமிழ் தேசிய இயக்கங்கள் என்பவையெல்லாம், பேரியக்கமாக இல்லை. பொதுத்தலைமையில் அரசியலை நிராகரிச்சு, தேர்தலை புறக்கணிக்கற இயக்கங்களாக இருக்கு. அவையெல்லாம் சிறு சிறு குழுக்களா இருப்பதாகத்தான் எனக்கு தெரிகிறது. தமிழர்களை ஒன்றிணைப்பதை விட்டுவிட்டு தமிழ் தேசிய சக்திகள் பிளந்துக் கிடப்பதை பார்க்கிற போது அது நம் இனத்துக்கு பெரும் பின்னடைவைத் தருகிறது. அதனால் தான் நாம் தமிழர்களாக இணைந்து பேரியக்கமாக உருவாக்கிக் கொள்வது என்கிற தேவை ஏற்படுகிறது. 

கேள்வி : ஏற்கனவே பல்வேறு ஜாதியாவும், மதமாகவும் பிரிந்து கிடப்பதோடு பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கும் மக்கள் புதிய இயக்கத்தில் இணைவார்கள் என்பது எப்படி சாத்தியம்?
எனக்கென்று ஜாதி, மதம், நான் சார்ந்த கட்சி என்றிருந்ததையெல்லாம் தாண்டி என் இனம் என்று நான் வந்து நிற்கிற மாதிரி லட்சோப லட்ச தம்பிமார்கள், என் உறவுகள் இருக்கிறார்கள். எங்களுக்கு அப்பழுகற்ற தியாகமும், அர்ப்பணிப்பும், சுயநலமற்ற மண்ணின், மக்களின் நலமும் முதன்மையா இருப்பதனால் இந்த மக்கள் எங்களை நம்பி வருவார்கள் என்கிற அசாத்திய நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அதனால் இது வழக்கமான அரசியல் இயக்கமாக இல்லாமல் என் இனத்திற்கான அரசியலை செய்கிற ராணுவ கட்டமைப்பு கொண்ட இயக்கமாக மாறப்போகிறது. அவ்வளவு உறுதியோடும், நேர்மையான நிலைப் பாட்டோடும் இந்த மண்ணில் நிற்போம்.

கேள்வி : “இலவசம்” என்கிற அரசியல் நடந்து கொண்டிருக்கிற சூழலில் அர்ப்பணிப்பு, தியாகம், நேர்மை இதெல்லாம் மக்களிடம் எடுபடுமா?
பணமும், இலவசமும் கொடுத்து ஓட்டு வாங்கி விடுகிறார்கள் என்கிற விமர்சனம் பெருவாரியாக எம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த விமர்சனம் இழிவான இந்த அரசியலை ஒரு நாள் வீழ்த்தும். வீழ்த்துகிற மனநிலையில் தான் இப்பொழுது மக்கள் இருக்கிறார்கள். அந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனால் “இலவச” அரசியலை வீழ்த்துவது எளிது.

கேள்வி : ஒரு பெரிய அரசியல் கட்சியின் து£ண்டுதலின் காரணமாகத்தான் நீங்கள் இயக்கம் ஆரம்பித்தாகவும் அதன் மூலம் உங்களை முடக்கி விடலாம் என்கிறார்களே?
உலகத்தில் எந்த அரசியல் கட்சியாவது இன்னொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க து£ண்டும் என்று யாராவது சொன்னால் அது. வேடிக்கை யாகத்தான் இருக்கும். உலகத்தில் யாராலும் என்னை அடக்கமுடியாது. நான் என் தலைவன் பிரபாகரன் பேச்சை மட்டும்தான் கேட்டேன். இனியும் அவர் சொல்படி தான் செயல் படுவேன். தமிழ்நாட்டில் என் அண்ணன் “கொளத்து£ர் மணி” சொல்வதைத்தான் கேட்பேன். மற்றபடி எனக்கும் சுய சிந்தனை உண்டு நானாக சிந்தித்து முடிவெடுப்பேன். பிரபாகரன் வழியில் இந்த மண்ணுக்காவும், மக்களுக்காவும் சாவதற்கு அவர் தம்பி நான் நிற்கிறேன். இதில் யாரும் என்னை விலை கொடுத்து வாங்குவதோ, அவர்கள் சொல்வதை செய்வதற்கோ நானில்லை.

கேள்வி : பாரதிராஜா, சீமான் போன்றவர்கள் ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக் கொண்டு தேர்தல் பரப்புரை செளிணிததாக கருத்து பரப்பப்பட்டதே?
அந்தப்பக்கம் பெட்டி வாங்கிக் கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், நாங்களும் பெட்டி வாங்கியிருப்பமோ என்று நினைத்துக் கொண்டு சொல்லியதுதான் அது. பெரியாரின் பேரன் பிரபாகரனின் தம்பி கொள்கைக்காக சாவானே தவிர இந்த நத்தித்தானப் பிழைப்பு கிடையாது. நான் திரைப்படம் எடுத்தால், நடித்தால் பணம் வரும். இது சும்மா கிளப்பிவிடுகிற வதந்திதான். 

கேள்வி : பின் எதற்காக அ.தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் செளிணிதீர்கள்?
சிங்கள ராணுவத்திற்கு துணையாக என் இன அழிப்புப் போரை பின்னின்று நடத்தியதே இந்திய அரசு. இந்திய அரசுன்னா அன்றைக்கு ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசு, அதன் தலைமை. இந்த கொடுமையை நிகழ்த்தியது சோனியா காந்தியும் அவரது பிள்ளைகளான பிரியங்கா, ராகுல் காந்திதான். அதற்கு துணை போன மலையாள அதிகாரிகளான சிவசங்கர் மேனன், எம்.கே. நாராயணன், விஜய் நம்பியார், சதீஸ் நம்பியார், கோபிநாத் தச்சன்குளங்கரை மற்றும் ஏ.கே. அந்தோணி போன்றோர்கள் பின் நின்று நடத்திதான் இந்த அழிப்பை செளிணிதார்கள். அதனால் நாங்கள் குறைந்தபட்சம் தேர்தலிலாவது காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் கடைசி வரை இன நலனைப் பற்றி கவலைப்படாமல் காங்கரஸோடு கரம் குலுக்கி நின்றது. அப்பொழுது அ.தி.மு.க. காங்கிரஸை எதிர்த்து பதினோரு தொகுதியில் நின்றது. அதனால், இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டாத்தான் காங்கிரஸை வீழ்த்த முடியும். யாருக்கு வேணா போடுங்கன்னு குடுகுடுப் குப்பைக்காரன் மாதிரி உளறிவிட்டு போக முடியாது. இதனால், அடுத்த தேர்தலிலும் அ.தி.மு.கவை ஆதாரித்து பேசிட்டு இருப்போம் என்று நினைக்கக் கூடாது. இது வெட்டிப் பயல்களின் வெறும் பேச்சு. 

கேள்வி : நீ ங் க ள் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் மூலம் கி ¬ ட த் த பயன் என்ன?
மத்தியிலும், மாநிலத்திலும் இரண்டு கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்படியிருந்தும் காங்கிரஸ் ஏழுத் தொகுதியில் வீழ்ந்தது. தங்கபாலு, இளங்கோவன், மணி சங்கர் (அய்யர்), சாருபலா தொண்டைமான் வீழ்ந்தத்தற்கு எங்களுடைய உழைப்பு பெரும் பங்கு அளித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கேள்வி : ஈழத்தமிழர்களுக்காக தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா உண்ணா நிலைப் போராட்டம் நடத்தி “தமிழீழம்” தான் தீர்வு என்றெதெல்லாம் உணர்வாளர்களை ஏமாற்ற நடந்த நாடகம் என்கிறார்களே?
ஜெயலலிதா தமிழீழத்தை வென்று கொடுப்பார் என்று தமிழின உணர்வாளர்கள் யாரும் அவருக்கு பின்னால் போய் நிற்கவில்லை. நாங்கள் ஏற்கனவே காங்கிரஸை எதிர்ப்பது என்று முடிவு செய்துவிட்டோம். அந்த நேரத்தில் அவரும் தமிழீழத்தை தவிர வேறு தீர்வில்லை என்று சொன்னார். தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெரிய கட்சி இப்படி சொன்னது, எங்களுக்கு பிடிச்சிருந்தது. ஏனென்றால், தி.மு.க அந்த நிலைப்பாட்டில்  இல்லை. ஆனால், தமிழீழத்தை ஆதரிக்கிற பா.ம.க. ம.தி.மு.க மற்றும் ஓரளவு ஆதரவு நிலையில் இருக்கிற இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை அ.தி.மு.க அணியில் இருந்தன. அதனால் அந்த தலைமையை வரவேற்கிறோம் என்று பேச வேண்டியிருந்தது. 

கேள்வி : சினிமாவில் சீமானுக்கு வாய்ப்பில்லை, இடம் காலியாகி விட்டது. அதனால் தான் இயக்கம், அரசியல் என்று போய்விட்டார் என்கிற பேச்சு அடிபடுகிறதே?
இடம் காலியாகிவிட்டது அதனால் போய்விட்டார் என்பதை அக்கறையில் சொல்கிறீர்களா? அல்லது விமர்சனமா சொல்கிறீர்களா? இதென்ன கணக்கு. வாழ்த்துகள் படத்தை வெளியிட்டு விட்டுதான் என்  தலைவனை சந்தித்தேன். அப்படி சந்தித்த நாளில் இருந்து அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு நம் விடுதலை உணர்வை கொண்டு போக வேண்டும் என்று எனக்கு கட்டளையிட்டார். அந்த பணியை செய்து கொண்டிருந்தேன். “மாயாண்டி குடும்பத்தார்” படம் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் கைது பண்ணிட்டு போனீங்க. திருப்பி நடிச்சுக் கொடுத்தேன் படம் ஒடுது. மறுபடியும் நடிப்பேன், இயக்குவேன். இது என்னுடைய தனிப்பட்ட வருமானம் பாதிக்கக் கூடிய விசயம். ஆனால், என் இனமானத்தை காப்பாற்ற திரையுலகில் இருந்து எவனும் வரவில்லை என்று பேசுவீங்களா, அதை விட்டு இடம் காலியாகி விட்டது என்றால் அதென்ன உங்க அப்பன் வீட்டு இடமா காலி பண்ணிட்டு போறதுக்கு? இதுமாதிரி விமர்சனம் செளிணிகிற நாளிணிகளால்தான் என் இனம் வீழுது. நான் மறுபடியும் படம் எடுக்கிறேன் பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்வி : ஈழம் வீழ்ந்ததற்கு சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தான் காரணம் இந்தியா இல்லை என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்களே?
சீனா தான் செய்தது, பாகிஸ்தான் தான் செய்தது என்று எவனாவது பைத்தியகாரன் இருப்பான் அவனிடம் சொல்லுங்க. “சோனியாவும், மன்மோகன் சிங்கும் என்ன நினைத்தார்களோ அதை செய்து முடித்தேன்” என்று ராஜபக்சே சொன்னானே இதற்கு இவர்கள் பதில் சொன்னார்களா? பிரபாகரன் இறந்த சான்றிதழ் கேட்டு சீனா, பாகிஸ்தானில் இருந்தா போனார்கள். பிரணாப் முகர்ஜிக்கு தான் வரைபடத்தில் குச்சிய வெச்சு கிட்டு இதோ பிடித்து விட்டோம் என்று சொல்லிட்டு இருந்தான். “எங்கள் குழுவில் சிவசங்கர் மேனன், எம்.கே. நாராயணன் போன்றவர்கள் எங்களுக்கு பெரிதும் உதவினார்கள்” என்றான் கோத்தபய ராஜபக்சே. ஆக, போரை நடத்தியது இந்தியா, இந்தியா இல்லாமல் அவனுக்கு இந்த துணிவு வராது. என் கணவர் இறந்த நாளில் பிரபாகரன் உயிரை தர வேண்டும் என்பது தான் சோனியா வின் ஒப்பந்தம். 500 தமிழக மீனவர்களை சுட்டவான் சிங்களவன் இதை ஏன் இந்தியா கேட்கவில்லை. ஆக, போரை இந்தியா நடத்தவில்லை என்று சொல்வது அரசியல் பிழைப்பு வாதிகளின் பிதற்றல் தான்.

கேள்வி : ஈழத்தமிழர் பிரச்சனையில் ஜாதித் தமிழன், மதத்தமிழன், கட்சித்தமிழன் யார் ஆபத் தானவர்கள்?
ஜாதித் தமிழன் இனம் என்று சொல்லும் போது ஒடி வருகிறான். மதத் தமிழன் கூட தமிழீழம் தான் தீர்வு என்று வருகிறான். கட்சித் தமிழன் தான் இந்த இனத்தை வீழ்த்தியவன். இந்த போராட்டத்தில் ஒன்றிணைய மறுத்தவன். எல்லா உணர்வையும் அடக்கிக்கொண்டு பதவி பிழைப்புவாத அரசியலுக்காக கட்சியின் தலைமை வாய்திறக்காததால, கட்டளை இடாததால கைகட்டி, வாய்மூடி கடைசி வரை வேடிக்கை பார்த்தவன் இந்த கட்சித் தமிழன் தான். 

கேள்வி : “நாம் தமிழர்” இயக்கத்தின் குறிக்கோள், எதிர்காலத் திட்டம் என்ன?
என் மொழி, என் இனம் இதுதான்முதன்மை கொள்கை. என் மொழி சிதையக் கூடாது. அது சிதைந்தால் என் இனம் சிதைகிறது. என் இனத்திற்கு எந்த பங்கமும் வரக்கூடாது. உரிமை, உடமை பாதுகாக்கப்பட வேண்டும். உலகெங்கிலும் பரவிக் கிடக்கிற தமிழர்களின் நலன் காப்பாதிலிருந்து அத்தனைக்கும் இந்த “நாம் தமிழர்” இயக்கம் பாதுகாப்பு அரணாக இருக்கும். அதுதான் எங்களின் முதன்மை கொள்கை. என் இனத்திற்கு சிக்கல் முல்லைப் பெரியாறில் இருந்து தண்ணீர் தரமாட்டான் என்றால், அவன் தண்ணீர் தருகிற வரைக்கும் போராடும். என் இனத்திற்கு எதிராக, உரிமைக்கு எதிராக எது வந்தாலும் எதிர்த்து போராடுவோம். 

கேள்வி : இயக்கத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு எப்பொழுது?
என்றைக்கு தமிழர் இனம் வீழ்ந்தது, இனி அவ்வளவுதான் தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது என்று இந்தியத் துணை கண்டம் வளருகிற வல்லாதிக்க பேரரசு கருதியதோ, சிங்களவன் அறிவித்தானோ அந்த கறுப்பு தினத்தில் தமிழினம் வெகுண்டு எழுந்தது பார் என்பதை உலகுக்கு அறிவிக்கும் விதமாக “மே 17” அன்று மாபெரும் அரசியல் இயக்கமாக உருவாக இருக்கிறது. இதில் ஜாதி, மதம், கட்சி பிணக்கின்றி எல்லா தமிழர்களும் ஓடிவந்து உறவுக்கரம் நீட்டி “நாம் தமிழர்” பேரியக்கம் தமிழர் களுக்கான பெருங்குடும்பம் என்று மாறுவதற்காக வரவேண்டும் என்பதுதான் என்வேண்டுகோள்.

(2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுத்த பேட்டி )

திங்கள், 19 நவம்பர், 2018

நாங்கள் வேண்டுவது உரிமைகளே...!

 -திருநங்கைகளுடன் ஒரு கலந்துரையாடல்

அன்மையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவுக்குப் புதிய விளக்கம் அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ‘மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பால் புதுமையர்’ (எல்ஜிபிடிகியூ) சமூகத்துக்கு மட்டுமல்லாமல், நமது ஜனநாயகத்துக்கும் புதிய வழியைக் காட்டியிருக்கிறது. மாற்றுப் பாலினரிடையே மகிழ்ச்சியை பெற்றிருக்கும் அந்த தீர்ப்போடு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ‘திருநங்கைகள் மசோதா’ குறித்தும் திருநங்கைகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தலாம் என்று முடிவு செய்ததோம். அதனால் சென்னையில் இயங்கிவரும் ‘திருநங்கைகள் உரிமைச் சங்க’த்தின் தலைவர் ஜீவா மற்றும் திருநங்கைகள் மானு, சந்தனா, மோனி, நிர்மலா ஆகியோருடன் கலந்துரையாடினோம். திருநங்கைகள் போன்ற மாற்றுப் பாலினத்தவர் அனுபவிக்கும் வேதனைகள், வலிகள் என வழக்கமான உரையாடலாக இல்லாமல் அவர்கள் பொது சமூகத்திடமும், அரசாங்கத்திடம் கேட்பது என்ன? அவர்களுக்கான உரிமைகள் பற்றி அவர்கள் சொல்ல விரும்புவது என்ன? போன்ற விரிவான தளத்திற்குள் உரையாடலை கொண்டு சென்றோம். 
கேள்வி : இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
மானு : LGBT மக்களைப் பொறுத்தவரை இது மகிழ்ச்சியான தீர்ப்பு. சமூகத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பயந்து ஒதுங்கியிருந்தவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. 
ஜீவா : உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவை முழுமையாக நீக்கவில்லை. மாறாக நிறுத்தி வைத்துள்ளது. முன்னர் இந்த சட்டத்தின் மூலம் எங்கள் மக்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வந்தது. அப்படி இனி செய்ய முடியாது. திருநங்கைகள் தான் தேர்ந்தெடுத்த ஆணை திருமணம் செய்வதில் இருந்த தடை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. இனி இந்த சட்டத்தைச் சொல்லி எங்களை மிரட்டவோ கைது செய்யவோ முடியாது. ஏனெனில் ஏற்கனவே 2014 ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் எங்களை மூன்றாம் பாலினமாக சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. ஆக எங்களுக்கு இது மகிழ்ச்சியான தீர்ப்புதான்.  
  கேள்வி : நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் தொடர்பான மசோதா கொண்டுவரப்பட்டது.  அம்மசோதாவில் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன?
மானு : 2012ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கின் விளைவாக 2014ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினம் என்கிற அங்கீகாரம் கொடுத்தது. மேலும் எங்களுக்கான உரிமைகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆறு மாத காலத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வெளியாகி நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இப்போதிருக்கும் பா.ஜ.க அரசு திருநங்கைகளுக்காக மசோதா ஒன்றை பிறப்பித்தது. ஆனால் அது முற்றிலும் தவறான ஒரு மசோதா. பாலின அடையாளம், வாழ்வாதார உரிமை என அனைத்துமே சரியான புரிதலின்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து போராட்டங்களும் நடத்தினோம். எங்களின் தேவை என்பது இடஒதுக்கீடு தான். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு. போதுமான விழிப்புணர்வும், இடஒதுக்கீடும் இல்லாமல் எங்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு வாய்ப்பேயில்லை.
ஜீவா : இப்போதிருக்கும் பா.ஜ.க அரசு என்ன செய்ததென்றால், திருநங்கைகளை பற்றின சரியான புரிதலே இல்லாமல் சட்டம் இயற்றியது. யார் திருநங்கை என்பதிலேயே சரியான வரையறை இல்லை. மேலும் திருநங்கைகளின் வாழ்வாதார தொழிலே கடை கேட்பு தான். அதை செய்யக் கூடாது என்கிறது இந்த அரசு. ஆனால் மாற்று திட்டமும் குறிப்பிடவில்லை. இருக்கிற தொழிலையும் செய்யக் கூடாது, மாற்று தொழிலும் இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. இதை எதிர்த்து தான் தமிழகத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் வள்ளுவர் கோட்டத்தில் இணைந்து போராட்டம் நடத்தினோம். திருச்சி சிவா ஒரு தனி நபர் மசோதாவை கொண்டு வந்தார். அதில் எங்களைப் பற்றிய தெளிவான வரையறையும் எங்களுக்கு தேவையான திட்டங்களும் இருந்தது. நாங்கள் பெற்றோரோடு இருக்க வேண்டும், கல்வி வசதி, இட ஒதுக்கீடு என அனைத்து சிறப்பம்சங்களும் அதில் இருந்தது. ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பா.ஜ.க அரசின் சட்டத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை.
ஸ்டெல்லா : இந்த மசோதா குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவமனைகளில் எங்களுக்கு எப்படி மருத்துவம் பார்ப்பது என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை. எங்களை ஒதுக்கும் நிலை இன்றும் தொடர்கிறது. திருநங்கைகள் குறித்த அடிப்படை புரிதல் அவசியம். எங்களுக்கும் மருத்துவ காப்பீடு போன்ற வசதிகள் வேண்டும்.
சந்தனா : இப்போதிருக்கும் சூழ்நிலையில் போதிய பாதுகாப்பற்ற இடங்களில் தான் வாழ்கிறோம். அதிலும் நாங்கள் திருநங்கைகள் என்பதால் கூடுதல் வாடகை பெறப்படுகிறது. இந்த நிலையில் பொருளாதாரத்திற்கு நாங்கள் என்ன செய்வோம்? பிச்சை எடுப்பதும், பாலியல் தொழிலையும் தவிர வேறு வழி இல்லையே !
கேள்வி : திருநங்கைகள் பற்றிய புரிதல் இல்லை என்கிறீர்கள், திருநங்கைகள் பற்றிய சரியான வரையறை இல்லை என்கிறீர்கள். யார் திருநங்கை?
மோனி : அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் தான் திருநங்கை. அறுவை சிகிச்சை செய்யாமல், பெண்ணாக உணர்ந்த நிலையில் இருப்பது தொடக்க நிலை. அறுவை சிகிச்சை செய்யாதவர்கள் திருநங்கைகள் இல்லை என ஏன் சொல்கிறேன் என்றால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்கள், ஒரு கட்டத்திற்கு பிறகு தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொண்டு வேறு வேலைக்கு சென்றுவிட முடியும். ஆனால் எங்களால் அப்படி முடியாது. நான் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறேன். என்னால் கல் உடைக்கவோ, மூட்டைத் தூக்கவோ இயலாது.
ஜீவா : திருநங்கைகள் பற்றி தவறான வரையறை எவ்வாறு வந்ததென்றால், தில்லியில் உள்ள திருநங்கைகள் அனைவரும் சமூகநீதி அமைச்சகத்திடம் சென்று திருநங்கைகள் பற்றிய வரையறையை தருகிறார்கள். திருநங்கைகள் நல வாரியம் முதன்முதலில் தமிழகத்தில் தான் உருவானது. தமிழகம் தான் முதன்முதலில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு தந்தது. ஆனால் பிரச்சினை என்னவெனில் இங்கிருந்து தில்லி சென்று எங்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் பற்றி பேசுவதில் உள்ள மொழி சிக்கல் தான். 
கேள்வி : இதற்கு தமிழக அரசு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
ஜீவா : நான் வாரிய உறுப்பினராக இருக்கும் பொழுது, அமைச்சர் "உங்கள் மக்களுக்கு என்னென்ன தேவை?" என்று எங்களை கேட்பார். நாங்கள் மொத்தம் எட்டு உறுப்பினர்கள்.ஒவ்வொருவரும் ஆறு மாவட்டங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அதன் அடிப்படையில் எங்களின் பிரச்சினைகளை அமைச்சரிடம் முன்வைப்போம். அந்தந்த துறை அதிகாரிகளிடம் அது தொடர்பான உத்தரவுகளை அமைச்சர் கொடுப்பார். அது எங்கள் உரிமைகளை பெறுவதற்கான வாய்ப்பாக இருந்தது. திருச்சி சிவா, எங்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதனால் தான் இன்று அனைத்து திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டை கிடைத்துள்ளது. திருநங்கைகள் நல வாரியம் மூலமாகவும் பல உதவிகள் கிடைத்தன. 
கேள்வி : தற்பொழுது திருநங்கைகளுக்குப் போராடும் குணம் குறைந்து விட்டதா?
மானு : போராடித்தான் இத்தனை உரிமைகளையும் பெற்றோம். எந்தவொன்றும் எங்களுக்கு எளிமையாக கிடைக்கவில்லை.
ஜீவா : பிரித்திகா யாசினி கூட தேர்வெழுதியதும் காவல்துறையில் பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. திருநங்கை என்பதற்காக தொடக்கத்தில் அவர் நிராகரிக்கப்பட்டார். பின் நீதிமன்றத்தை அணுகி, நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் அவர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார். ஆதலால் போராட்டம் இல்லாமல் எங்களுக்கு எதுவும் கிடைத்ததில்லை. 

கேள்வி : திருநங்கைகளின் குறித்த கணக்கெடுப்பு தரவுகள் உங்களிடம் இருக்கிறதா? இல்லையென்றால் அதற்கு என்ன தீர்வு?
ஜீவா : கணக்கெடுப்பு பொறுத்தவரையில் 2007 - 2011 காலகட்டங்களில் தேசிய அளவிலான கணக்கெடுப்பின் போது, திருநங்கைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் எங்களை 'ஆண்' என்று தான் பதிவு செய்வோம் என்றார்கள். மாற்றுப்பாலினம் என்ற பிரிவு இல்லை என்றார்கள். நாங்கள் எங்களைப் பெண்ணாக உணர்கிறோம். ஆகையால் 'பெண்' என்று தான் பதிவு செய்ய முடிந்தது. எங்கள் எண்ணிக்கை முழுவதும் பெண்களின் எண்ணிக்கையில் சேர்ந்துவிட்டது. என்னுடைய வாக்காளர் அட்டையில் கூட பெண் என்று தான் குறிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அரசு ஒரு முகாம் நடத்தி, அதில் திருநங்கைகள் தங்கள் அடையாள அட்டைகளில் பாலின மாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்.

கேள்வி : உங்களுக்கான அரசுசாரா அமைப்புகள் பல இருக்கின்றன. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள திருநங்கைகள் பற்றி உறுதியான தரவுகள் இல்லையா?
ஜீவா : அப்படி புள்ளிவிவரங்களோடு சொல்ல முடியாது. 1994 காலகட்டத்திலேயே திருநங்கைகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று பதிவாகியிருந்தது. இப்பொழுது அதைவிட அதிகரித்திருக்குமே தவிர குறைந்திருக்காது. உறுதியான தரவுகள் எங்களுக்குக் கிடைத்தால் தான் சரியான எண்ணிக்கையைச் சொல்ல முடியும்.
மானு : இதற்கு என்ன தீர்வு என்றால், அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது  ஆண், பெண் பிரிவுகளோடு மாற்றுப்பாலினத்தவர் என்ற தனிப்பிரிவும் இருக்க வேண்டும். 
ஸ்டெல்லா எல்லா விண்ணப்ப படிவங்களிலும் மாற்றுப்பாலினத்தவர் என்ற பிரிவு இருப்பதில்லை. பெரும்பாலும் ஆண், பெண் என்ற பிரிவு மட்டுமே உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேருந்துகளில், தொடர் வண்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி இருக்கைகள் இருப்பது போன்று எங்களுக்கும் தனி இருக்கைகள் வேண்டும். 
கேள்வி : இந்த சூழலில் சமூக அளவில் என்னென்ன மாற்றங்களை எதிர்ப்பார்க்கிறீர்கள்? உங்கள் திருநங்கைகள் சமூகத்திற்குள்ளேயே என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டும்?
மோனி : இன்றைய சமூகம் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஓரளவிற்கு எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் 'கிuஸீtஹ்' என்று அழைக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கின்றது. கேலிப்பேச்சுகள் இன்றும் தொடர்ந்தாலும், முன்பிருந்த அவல நிலை இப்போது இல்லை. வேலைவாய்ப்பு வசதி மட்டும் அதிகப்படுத்தினால் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும். 
நிர்மலா : திரைப்படங்களில் எங்களை கேலியாக சித்தரிக்கிறார்கள். நாங்கள் செய்யும் தவறுகளை எல்லாம் சொல்கிறீர்கள், ஆனால் நாங்கள் செய்யும் நன்மைகளை மட்டும் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?
சந்தனா : ஆண்களில் சிலர் கொலை செய்கிறார்கள், அதற்காக எல்லா ஆண்களையும் கொலை காரர்கள் என்று சொல்வீர்களா? சில பெண்கள் தவறு செய்கிறார்கள், அதற்காக எல்லா பெண்களின் மீதும் குற்றம் சுமத்துவதில்லையே? ஆனால் ஏதோ ஒரு திருநங்கை தவறு செய்தால் மட்டும் ஏன் ஒட்டுமொத்த திருநங்கைகளையும் குற்றவாளிகளாக்குகிறீர்கள்? முதலில் இந்த மனநிலை மாறவேண்டு.

கேள்வி : வேலைவாய்ப்புகளை திருநங்கைகள் தட்டிக் கழிப்பதாக ஒரு கருத்து உள்ளதே?
சந்தனா : அப்படி எதுவும் இல்லை. நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். என் திறமைக்கேற்ற எந்த வேலையையும் செய்ய நான் தயார். ஆனால் தரமாட்டார்கள். "2000 ஆண்களுக்கு இடையில் நீ எவ்வாறு பணி செய்ய முடியும்?" என்று கேட்கிறார்கள். வாய்ப்பேத் தராமல், நாங்கள் எந்த வேலையையும் செய்ய மாட்டோம் என்று சொல்வது அபத்தம்.
மானு : அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புத் தர வேண்டும். அதற்கான சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். அப்பொழுது தான் இதுபோன்ற தவறான கருத்துகள் நீங்கும். குறைவான ஊதியத்தை தந்து, அதிக உழைப்பை சுரண்டுகிறார்கள். இதில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை.
நிர்மலா : எங்களை போன்ற திருநங்கைகள், சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர்கள். கல்லூரிக் காலங்களில் வெளிவந்தவர்களும் இருக்கிறார்கள். இதனால் எங்கள் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் என எதுவும் எங்களிடம் இருப்பதில்லை. நாங்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதற்கும், உடலுழைப்பால் சுரண்டப்படுவதற்கும் இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது.
ஸ்டெல்லா : இப்பொழுது ஒரு நிறுவனத்தில் ஒரு ஆண் பத்தாயிரம் ரூபாய் ஊதியமாக பெறுகிறான் என்றால், அதே வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு ஏழாயிரம் ரூபாய் தருகிறார்கள். ஒரு திருநங்கைக்கு நான்காயிரம் ரூபாய் தான் தருகிறார்கள். ஏன் இந்த வேறுபாடு? இந்த வருமானத்தை வைத்து கொண்டு நாங்கள் எப்படி வாழ்வது?

கேள்வி : அடுத்த தலைமுறை திருநங்கைகளை, இப்போதிருக்கும் சமூக அவலங்களிலிருந்து விலக என்ன செய்கிறீர்கள்?
நிர்மலா : நான் திருநங்கையாக கடை கேட்டு கொண்டிருந்தவள்தான். பிறகு, நான் படித்திருக்கிறேன் என்பதை அறிந்து, ஒரு திருநங்கை அமைப்பில் கள ஆய்வாளராக பணியமர்த்திருக்கிறார்கள். 
ஜீவா : முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருநங்கைகளின் பாரம்பரிய தொழில் என்பது கடைகேட்பு தான். அப்பொழுது அதற்கான வாய்ப்பு மட்டுமே இருந்தது. இப்பொழுது தான் ஓரளவிற்கு சமூக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆகையால் எங்களுக்கு அடுத்து வரும் திருநங்கைகளுக்குப் பல்வேறு வாய்ப்புகளை நோக்கி வழிகாட்டுகிறோம். இந்த நிலையை இன்னும் சீராக்க, அரசு மட்டும் போதாது.  தனியார் நிறுவனங்களும் எங்களைப் போன்ற திருநங்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். எங்கள் மீதான அனுதாபமோ, இரக்கமோ எங்களுக்கு தேவையில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் முதுகலை படிப்பை முடித்திருந்தால் வேலை கிடைக்கும் வரை அரசாங்கமே அவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. அது போன்று நம் நாட்டிலும் வழங்க வேண்டும். 

கேள்வி : உங்களின் உரிமைக்காக முகம் தெரியா நபர்களிடம் இத்தனைப் போராட்டங்களையும் வலிகளையும் வேதனைகளையும் தாங்கும் நீங்கள், உங்கள் பெற்றோரிடம் உங்கள் நிலையை புரிய வைத்திருந்தால், வீட்டை விட்டு வெளியேறும் அவசியம் இருந்திருக்காதே?
ஸ்டெல்லா : உறவினர்களின் இழிச்சொல்லுக்கு பயந்தே நிறைய பெற்றோர்கள் எங்களை ஒதுக்குகிறார்கள். நாங்களும் பெற்றோருடன் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், பெற்றோர்களை சிரமத்திற்குள்ளாக்க கூடாது என்ற எண்ணத்திலேயே வெளியேறுகிறோம். 

கேள்வி : இறுதியாக இதற்கெல்லாம் என்ன தீர்வு?
மானு : அரசு எங்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடுத் தரவேண்டும். ஊடகங்கள் எங்களைப் பற்றிய சரியான புரிதலோடு செய்திகள் வெளியிட வேண்டும். திருநங்கை ‘தாரா’ மரணத்தில் உள்ள மர்மம் பற்றி எந்த ஊடகங்களும் கவலைப்படவில்லை. இதே ஒரு பெண்ணோ, ஆணோ இப்படி இறந்திருந்தால் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருக்குமா? 
நிர்மலா : நான் டிப்ளமோ சிவில் படித்திருக்கிறேன். ஒரு தனியார் அமைப்பில் பணிபுரிகிறேன். என்னைப் போன்றோரை பொது சமூகத்திற்கு அறிகமுகப்படுத்தினால், புதிய வேலை வாய்ப்பும், என் குடும்பத்தினருடன் இணையும் வாய்ப்பும் கிடைக்கும்.
மோனி : எங்களை போன்றோரை பற்றியும் நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் செய்திகளும் கட்டுரைகளும் வெளியிட்டால் பொது மக்களுக்கு எங்களை பற்றிய விழிப்புணர்வு வரும். தகுதியான திருநங்கைகளைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு, அவர்களுக்கு கல்வி உதவியோ, வேலைவாய்ப்போ பெற்று தந்தால் எங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
சந்தனா : மகளிர் தினம் பற்றி மட்டும், அந்த வாரம் முழுவதும் விவாதங்கள், நிகழ்ச்சிகள், செய்திகள் எல்லாம் வரும். ஆனால் திருநங்கைகள் தினம், ஒரு மணி நேர நிகழ்ச்சியோடு முடிந்துவிடும். திருநங்கைகள் தினம் என்ற ஒன்று இருப்பதே பலருக்கு தெரியாது. நாங்களும் படித்திருக்கிறோம், எங்களுக்கும் வேலைவாய்ப்பு தந்தால் சிறப்பாக செயல்படுவோம்.

நேர்முகம் -சகா

ஞாயிறு, 18 நவம்பர், 2018

நூறு தாய்க்கு இணையாய் ஒரு நூரி



தன் பாலினமாற்றத்தை உணர்ந்த நாள் முதல் தனித்தே வாழ்ந்து வந்த நூரியின் அரவணைப்பில் இன்றைக்கு 50 குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்லாது ஆண்கள், பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டவர்களை தத்தெடுத்து தாயாக உருவெடுத்திருக்கிறார். திருநங்கையாக இருப்பதால் சமூகம் ஒதுக்குகிறது என்று புலம்பும் சராசரி திருநங்கைகளுக்கு நடுவே முன்மாதிரியாக திகழ்ந்து சமூக அங்கீகாரத்துடன் பல்வேறு தளங்களில் தனக்கென ஓரிடத்தை தக்க வைத்திருக்கும் திருநங்கை நூரி தானொரு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் என்பதை மிகவும் துணிவுடன் கூறி வருபவர். தன்னம்பிக்கைக்கு இலக்கணமாக திகழ்ந்துவரும் அவருடன் நாம் மேற்கொண்ட நேர்காணல். 

கேள்வி : உங்களின் இளமைக்காலம் பற்றி கூறுங்கள்? 

சிறுவயதிலேயே என்தாயார் இறந்துவிட என்னுடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் என்னுடைய 13வது வயதில் எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தேன். நடை, பாவனை, கூச்சம், வெட்கம் என்று பெண்மைக்குரியதாக கூறப்படும் அடையாளங்கள் எனக்குள் நிகழ்ந்தது. இதை மிகப்பெரிய அவமானமாக கருதிய சித்தி என் அப்பாவிடம் கூற என்னை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். அதேநேரம் என் சித்தியின் தம்பியால் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளானேன். இதிலிருந்து தப்பிக்க அந்த வயதிலேயே நான் சென்னைக்கு வந்தேன். சில இடங்களில் பணியாற்றினேன்.அந்த நேரத்தில் என் தந்தை நோய்வாய்பட்டு சென்னையில்தான் தங்கியிருந்தார். அந்த செய்தி கேள்விப்பட்டு அவரை பார்க்கப் போனேன். அவர் இரண்டு நாளில் இறந்துவிட்டார். பின்னர் என்னுடைய சித்தி எனக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டு ஒரு பெண்ணையும் பார்த்து முடிவு செய்த கையோடு திருமணப் பத்திரிகை உள்ளிட்ட எல்லா வேலைகளையும் செய்துவிட்டார். இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை நாம் பாழாக்கக்கூடாது என்கிற உறுதியோடு நான், அங்கிருந்து தப்பித்து மும்பைக்கு சென்று சேர்ந்தேன். அங்கு பாலியல் தொழிலாளியாக இருந்தேன். எங்களுக்கு இருந்த வாய்ப்பு ஒன்னு பிச்சை எடுக்கறது, இல்லைனா செக்ஸ் தொழில் செய்யறது. இப்படித்தான் எங்கள் நிலை இருந்தது. அந்த நிலைக்கு நானும் சென்றேன். மேலும் பணம் சம்பாதிக்கவும், நகைநட்டு சேக்கவும் இதுதான் எண்ணமாக இருந்தது.

கேள்வி : காதலை கடந்து போகாத திருநங்கையர் இருக்க முடியாது. உங்களின் வாழ்வில் நிகழ்ந்த அந்த காதல், திருமணம் போன்ற மகிழ்ச்சியான தருணத்தை கூறுங்கள்...? 

நான் மும்பையில் இருந்த போது ராணுவத்தில் பணியாற்றும் தத்தா என்பவருக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் உயிருக்குயிராக பழகத் தொடங்கினோம். அந்த சமயத்தில் அவருக்கு சென்னைக்கு பணி மாறுதல் கிடைத்தது. அதனால் நானும் அவருக்கு முன்னதாக சென்னைக்கு வந்து ஒரு குடிசை வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் வீட்டின் அருகிலேயே இன்னொரு குடிசையை வாடகைக்கு எடுத்து இன்னும் சில திருநங்கைகளை தங்க வைத்தேன். அங்கே நானும், அவர்களும் பாலியல் தொழில் செய்து வந்தோம். தத்தாவும் ஒரு மாதம் கழித்து சென்னை வந்து சேர்ந்தார். அப்பொழுதெல்லாம் நானும், அவரும் காதலிப்பதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டோம். வேறு எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் சட்டபடி என்னை திருமணம் செய்து கொண்டால்தான் என்னை நீங்கள் தொடலாம் என்று உறுதியாக கூறியிருந்தேன்.  

கேள்வி : உங்களின் எண்ணம் ஈடேறியதா? 

என் எண்ணத்தை ஏற்றுக் கொண்ட தத்தாவும் என்னை திருமணம் செய்துகொள்ள விரும்பி அவரின் குடும்பத்தாரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் குடும்பத்தார் அனைவரும் என்னை பெண் என்றே நினைத்து அன்போடு அரவணைத்தனர். எங்கள் திருமணத்திற்கு இரண்டு நாள்கள் இருந்த நிலையில் அவர்களின் குடும்ப வழக்கப்படி நெற்றியில் பச்சைக்குத்திக் கொள்ளச் சொன்னார்கள். அதில் உடன்பாடு இல்லாத நான் பச்சைக் குத்திக்கொள்ள மறுத்ததால் எனக்கும் தத்தாவுக்கும் வாக்குவாதம் வந்தது. அப்பொழுது கோபத்தில் என் குரலை கொஞ்சம் உயர்த்தி கத்தினேன். அதுவரை என்னை பெண் என்று நம்பிக் கொண்டிருந்த தத்தாவின் குடும்பத்தினர், நானொரு திருநங்கை என்ற உண்மையை தெரிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள், ஒரு பொட்டைய அழைத்து வந்து திருமணம் செய்கிறாயே என்றுகூறி என்னோடும், தத்தாவோடும் சண்டை போடத்தொடங்கினர். அப்பொழுது தத்தா அவள் பெண்ணா? ஆணா? என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் பொறுத்தவரை அவள் பெண். அவளை நான் விரும்பிவிட்டேன். இனி அவள்தான் என் மனைவி என்று மிகவும் உறுதியாக கூறினார். அவரின் அன்பு என்னை நெகிழச் செய்தது. அதனால் அவருக்காக பச்சை குத்திக் கொண்டேன். திருமணமும் நடந்தது. 

கேள்வி : பெரிய போராட்டத்திற்குப் பிறகு உங்களின் திருமணம் முடிந்திருக்கிறது. அதன் பின்னர் எப்பொழுது சென்னை வந்தீர்கள்?

திருமணம் முடிந்து தத்தாவின் வீட்டிற்கு வந்த உடனே முதல் சோதனையாக எனக்கு மஞ்சள் காமலை வந்துவிட்டது. அந்த ஊரில் மருத்துவ வசதிகள் இல்லாததால் என் உடல் நிலை மிகமோசமானதால், சென்னையில் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவு செய்து சென்னைக்கு வந்து சேர்ந்தோம். என் உடல் மீண்டும் பழைய ஆரோக்கியத்திற்கு திரும்பியது. பின்னர் இருவரும் ஒன்றாக சில மாதங்கள் சென்னையில் வாழ்ந்த நிலையில் அவருக்கு பணியிட மாற்றம் வந்தது. பல இடங்களுக்கு பணியிட மாற்றத்தில் சில இடங்களுக்குச் சென்ற என்னால் அவருடன் தொடர முடியவில்லை. அதனால் நான் சென்னையிலேயே இருப்பதாக முடிவுசெய்து அவர் மட்டும் சென்றார். அவர் இல்லாத காலங்களில் நான் செய்த தவறால் எனக்கு மிகப் பெரிய பரிசாக எச்ஐவி தொற்று ஏற்பட்டது.

கேள்வி : உங்கள் கணவருக்கு அதைப்பற்றி கூறியிருந்தீர்களா?

அந்த நேரத்தில் அவர் வெளிமாநிலத்தில் இருந்ததால் முதலில் நான் சொல்லவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஒருமுறை பத்துநாள் விடுப்பில் அவர் வந்தபொழுது எனக்கு வந்துள்ள பாதிப்பைப் பற்றி அவரிடம் வெளிப்படையாக கூறினேன். ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. மாறாக பெருந்தன்மையோடு அரவணைத் துக் கொண்டார். பயிற்சி முடிந்தபிறகு தன்னுடனே வைத்துப் பார்த்துக் கொள்வதாக சொல்லிச் சென்றவரின் இறந்த செய்திதான் எனக்குக் கிடைத்தது. அவர் இறந்தது 1991ஆம் ஆண்டு.

கேள்வி : எச்ஐவி பாதிக்கப்பட்ட பிறகு அந்த மனப்போராட்டத்தில் இருந்து மீண்டது எப்படி...? நீங்கள் மேற்கொண்ட பணிகய் என்ன...?

உண்மையில் என்னுய் தைரியத்தை வளர்த்து தன்னம்பிக்கை ஊட்டியவர் டாக்டர் உஷா ராகவன் என்பவர்தான். அப்பொழுதே நான்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தேன். அவர்களின் எதிர்காலத்தை எண்ணியும் என் நிலையை எண்ணியும் அழுதுகொண்டே இருந்தேன். இதை தெரிந்து கொண்ட டாக்டர் உஷா என்னைத் தேடி வீட்டிற்கே வந்துவிட்டார். 1993 வரை அவர் எனக்கு உதவினார். பின்னர் ஒரு என்ஜிஓவில் களப்பணியாளராக வேலை கிடைத்தது. அதன்பிறகு அடுத்தடுத்து என்ஜிஓக்களில் வேலை செய்து ‘ஐஎன்பி’ங்கற நிறுவனத்தில் துணைச் செயலாளராக பொறுப்போடு 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தேன். அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் எனக்கு உடன்பாடு இல்லாததால் அந்த வேலையை உதறிவிட்டு வெளியே வந்தேன்.1998 ஆம் ஆண்டு எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட ‘CAN’ (கம்யூனிட்டி ஆக்ஷன் நெட்வொர்க் ) என்கிற என்ஜிஓவில் சேர்ந்து 3 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் கம்யூனிட்டி மக்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறச் செய்வது தொடர்பான பணியை செய்துவந்தேன். 

கேள்வி : நீங்கள் ஒரு திருநங்கை... எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்... அப்படியிருக்க வேலை பார்த்த இடங்களில் எப்படியான அனுபவம் கிடைத்தது...?

எச்ஐவியால் பாதிக்ககப்பட்டவர்களின் கூட்டமைப்பே என்னை கேவலமாக பார்த்தது. கேலி பேசினார்கள். என்னைப் பார்த்தவுடன் கைகொட்டி சிரிப்பார்கள். அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக் கொள்வேன். இவர்களைவிட நான் எந்தவிதத்தில் குறைந்தவளாக தெரிகிறேன். இன்னும் சொல்லப் போனால் அவர்களைவிட நான்கு மடங்கு வேலைகளை பார்த்து வந்தேன். அப்படியிருக்க ஏன் நம்மை கேலி பேசுகிறார்கள் என்று மனப்போராட்டத்துடனே இருப்பேன்.

கேள்வி : எஸ்ஐபி+ நிறுவனத்தையும் எஸ்ஐபி நினைவு அறக் கட்டளையையும் எப்பொழுது எப்படி துவங்கினீர்கள்? 

டாக்டர் ஜோசப் என்பவர் நூரியம்மா நீங்கள் பல இடங்களில் வேலை செய்திருக்கிறீர்கள். உங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று எண்ணை ஊக்கப்படுத்தி தனி அமைப்பை துவங்கச் சொன்னார். அதற்கு நான் மூன்றாம் வகுப்புதான் படித்திருக்கிறேன்... என்னால் எப்படி முடியும் என்று கேட்டேன்... உங்களால் முடியும்.. தைரியமாக செய்யுங்கள்... என்றார்...அவர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக 2001ஆம் ஆண்டு எஸ்ஐபி+ (தென்னிந்திய எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு) நிறுவனத்தை தொடங்கினோம். இதில் பல வேலைத் திட்டங்கள் கிடைத்தன. குறுகிய காலத்தில் பெருமுயற்சி எடுத்து இந்த நிறுவனத்தை வளர்த்தோம். இதற்கு துணையாய் இருந்த செல்வி, இந்திரா, பழனி ஆகியோர் எச்ஐவியால் இறந்துவிட்டனர். அவர்களின் நினைவாகவே குழந்தைகள் இல்ல அறக் கட்டளையை 2003ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம். 

கேள்வி : உங்களுக்குப் பின்னால் எச்ஜவியால் பாதிக்கப்பட்ட பலர் இறந்து போயிருக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு அந்த நோள் இருப்பதற்கான அறிகுறிகூட தெரியவில்லையே... காரணம் என்ன?

எனக்குப் பின்னால் எச்ஜவியால் பாதிக்கப் பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துவிட்டார்கள். என்னுடைய ஆரோக்கியத்திற்குக் காரணம் என்னுடைய கட்டுப்பாடும், நடவடிக்கை களும்தான். நேரத்திற்கு உணவு, தேவையான மருந்து வாழ்விடத்தை தூய்மையாக வைப்பது, அத்தோடு ஒழுக்கத்தை கடைபிடிப்பது என்று வாழ்வதினால்தான் நான் ஆரோக்யமாக இருக்கிறேன். 

கேள்வி : இன்றைக்கு எஸ்ஐபி இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்கிறார்கள். இந்த எண்ணம் எப்பொழுது உங்களுக்கு எழுந்தது?

2005ஆம் ஆண்டு தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனை அருகில் உள்ள குப்பைத் தொட்டி யில் ஒரு குழந்தை கிடப்பதாக எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே என் தோழி டாக்டர் ஐஸ்வர்யாவுடன் போய் பார்த்தோம். அங்கே பிறந்து இரண்டே நாளான ஒரு குழந்தையை பாட்டில் கழுவும் ஒரு பெண்மணி வைத்துக்கொண்டு எங்களுக்காக காத்திருந்தார். அவரிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு வந்தோம். அந்த குழந்தைக்கு இப்பொழுது 11வயதாகிறது. அவளால்தான் இந்த இல்லமும் தொடங்கப்பட்டது. ஆக, எங்கள் இல்லத்துக்கும் அதே 11வயதுதான். 

கேள்வி : மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த நீங்கள் நிறைய நாடுகளுக்கு பயணம் போய்வந்ததாக கேள்விப்பட்டோம்? என்ன காரணங்களுக்கா அங்கே பயணம் போனீர்கள்? 

இதுவரை 24 நாடுகளுக்கு போய் வந்திருக்கிறேன். முதல் நாடு ஆஸ்திரேலியா. எல்லா நாடுகளிலும் எச்ஐவி குறித்த கருத்தரங்கில் பேச்சாளராக கலந்து கொண்டேன். மொழி எனக்கு ஒரு பிரச்சனையே கிடையாது. எப்படி என்றால், ஆங்கில உச்சரிப்புகளை தமிழில் எழுதி படித்துவிட்டு பவர்பாயிண்ட் மூலம் என்னுடைய கருத்தை வெளிப்படுத்துவேன். இதற்கு என்னுடைய பணியாளர்கள் நன்கு உதவி செய்வார்கய். மலேசியாவைப் பொறுத்தவரை கிறிஸ்துவ என்ஜிஓ மூலமாக பைபிள் படிப்பிற்காக சென்றேன். எங்கேயும் நான் பயந்து நின்றது கிடையாது. 

கேள்வி : உங்களால் மறக்கமுடியாத சம்பவம்எது? 

1998ஆம் ஆண்டு தமிழ்நாடு அரவானிகள் சங்கத்தின் துவக்கவிழாவிற்கு போயிருந்தேன். அங்கு வந்திருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் என்னுடைய பேட்டிஎடுத்து வெளியிட்டிருந்தார். அதில் நான் எச்ஐவியால் பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறியிருந்தேன். அதை படித்த மற்ற திருநங்கைகள், என்னால் அவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி என்னை கொளுத்த வேண்டும் என்று 10லிட்டர் பெட்ரோலுடன் என் வீட்டிற்கு வந்துவிட்டனர். நான் அதை கண்டு அஞ்சாமல் அவர்களுக்கு உண்மை நிலையை புரிய வைத்தேன். அதனால் அந்த பிரச்சனை ஓய்ந்தது. என்றாலும் அந்தப் பிரச்சனை இன்றும் என் மனதில் உள்ளது. 

கேள்வி : உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித் திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? 

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு திருநங்கைகளின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றுதான் சொல்வேன். குடும்பத்தார் கூட அங்கீகரிக்காமல் வெறுத்து ஒதுக்கப்படும் மாற்றுப் பாலினத்தவருக்கு இந்த தீர்ப்பு ஒரு அருமருந்து. தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திருநங்கைகளுக்காக பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதுபோல் எல்லா இடங்களிலும் இந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும். 

கேள்வி : எங்களை சமூகம் அங்கீகரிப்பதில்லை என்கிற திருநங்கைகளின் குற்றச் சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்? 

சமூகம் அங்கீகரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இப்பொழுது சமூகம் எவ்வளவோ மாறிவருகிறது. மேலும் மேலும் சமூகத்தை குற்றம் சொல்லாமல் சமூகத்தோடு ஒத்து வாழவேண்டும். நம்முடைய பிரச்சனைகளை மட்டும் பேசிக்கொண்டிருக் காமல் சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தின் அங்கீகாரம் முழுமையாக கிடைக்கும். 

கேள்வி : திருநங்கைகள் மாற்றிக்கொள்ள வேண்டியவை எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

தாங்கள் சம்பாதிப்பதில் பெரும்பகுதியை தங்களை அழகுபடுத்திக் கொள்ளவும், ஆடம்பரமாக வாழவுமே சில திருநங்கைகள் செலவழிக்கின்றனர். இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு என்பதே பல திருநங்கைகளுக்கு இல்லாமல் இருக்கிறது. தாங்கள் சம்பாதிப்பதை சேமிக்க பழக வேண்டும். அதேபோல் குறைந்த ஊதியம் என்றாலும் சுயமரியாதைகெடாத வேலை கிடைத்தால் தயங்காமல் செய்ய வேண்டும். காதலுக்கு அடிமையாகாமல் இயல்பாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே நான் விரும்பும் மாற்றம். 

கேள்வி : உங்களின் இலக்கு என்ன? 

நான் மறைந்தாலும் இந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்திருக்கவேண்டும். அப்படியான ஒரு பணியை என் வாழ்நாளுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. எங்களின் குழந்தைகள் இல்லத்திற்கு என்று சொந்தமாக இடமோ, கட்டடமோ கிடையாது. அதனால் வாடகை வீட்டில்தான் இருக்க வேண்டிய அவலத்தில் இருக்கிறோம். அந்த எஸ்ஐபி இல்லத்திற்கு என்று சொந்தமான கட்டடத்தை கட்டுவதற்கான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். அந்த பணியை வெகுவிரைவில் முடிக்க வேண்டும் என்பதே என்னுடைய தற்போதைய இலக்கு. அதற்கான முயற்சிகள் நல் இதயம் படைத்தவர்களின் உதவியோடும், ஆதரவோடும் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் எங்கள் குழந்தைகளுக்கான இல்லம் சொந்த கட்டடத்தில் இயங்கும். 

நேர்முகம் - சகா

வெள்ளி, 16 நவம்பர், 2018

பாரத பு(ருட)த்திரனே போற்றி... போற்றி...


ஈராயிரம் நரபலியில்
இறுமாப்பாய் தான் நடந்து
அரியணையில் வந்தமர்ந்த
அனுமானே போற்றி... போற்றி...
ஓயாது உழைத்திடவே
நாடோடியாய் சுற்றிவரும்
ஒப்பாரும் மிக்காருமில்லா
ஓடு(ம்) காளியே போற்றி.. போற்றி...






ஊரெல்லாம் சுத்திவந்து
ஊறுகாயாய் எம்நாட்டை
கூறுபோட்டு விற்றுவரும்
வித்தகரே போற்றி... போற்றி...
மலைமுழுங்கியாம் அதானிக்கு
மணிமணியாய் அள்ளித்தரும்
மாமனியே போற்றி... போற்றி...
ஆதாரில் எம்கமுக்கம்
அத்தனையும் தான் திருடி
அம்பானிக்கு கொடுத்திட்ட
அருட்கொடையே போற்றி.. போற்றி...
கருப்புப்பணம் கள்ளப்பணம்
கடுகு டப்பியில் கண்டெடுத்து
களவாடி கொண்டுசென்ற
க(ள)லை வானியே போற்றி... போற்றி...








நாட்டுக்கே படியளந்த
நாதியற்ற உழவனையும்
நடுத்தெருவில் அலையவிட்டு
நகைதிட்ட நகைமுகனே போற்றி... போற்றி..
நாட்டுக்கே தொண்டாற்றும்
நன்நடிகையுடன் தான் கலந்தே
நாட்டை முன்னேற்றும்- செல்பி
நாயகனே போற்றி... போற்றி...
இல்லாத குப்பையெல்லாம்
அள்ளாமல் அள்ளிச்செல்ல...
ஸ்வ(உ)ச்சா பாரத்தை பெத்தெடுத்த
உ(ன்ம)த்த(ம)னே போற்றி... போற்றி...







காமத்தில் திளைப்போரும்
காடறுத்து தின்போறும்
காவி(லி)ச்சாமியான போது
காத்தருள்வாய் போற்றி... போற்றி...
கோட்டு சூட்டு பத்து லட்சம்
பூட்டுங்கூட மாட்டி வந்து
"நீட்"டி கூட்டி முழங்கவந்த
நீலிக்கண்ணீராய் போற்றி... போற்றி...
கோமாதவை தத்தெடுத்த
கோமா(ளி)னே போற்றி... போற்றி...
புதிய இந்"தீயா"வை பெத்தெடுத்த
பாரத பு(ருட)த்திரனே போற்றி... போற்றி...

- சகா 
(04/09/2017)

மங்குனியே ஆண்டிடுவாய்...

மானம் இழ
மண்டியிடு
மண்ணையும் நக்கு
மாண்புமிகு ஆவாய்...








கண்ணை மூடு
கருத்தை விடு
காட்டியும் குடு
கோட்டையில் சேர்வாய்...
கொள்கை துற
கொண்டாடித் திரி
கூடியும் மகிழ்
கூட்டணியில் சேர்வாய்...

ஊழலை குடி
உத்தமனாய் நடி
ஊமையாய் விடி
ஊரையே விற்பாய்...





நீட்டைக் கொடு - சமூக
நீதியை கெடு
டெங்கையும் மறு - மக்கள்
சங்கை அறுவாய்...
அஞ்சுவது கலை
ஆளுமை தொலை
அண்டியே பிழை
ஆட்சியில் நிலைவாய்...
இலையை கிழி
மலரை பிடி
மதமும் கொள்
மனிதம் கொல்வாய்...







பகுத்தறிவை இழி - தமிழர்
பண்பாட்டை பழி
பாரதமாத துதி
காவியில் கலந்திடுவாய்...









திராவிடம் இகழ்
ஆரியம் புகழ் - ஆட்சி
பங்கை பெறு
மங்குனியே ஆண்டிடுவாய்...!

-சகா
(17/11/2017)