நாட்டப்பத்தி எண்ணியதோ
நாதியத்து கெடக்குது...
நரவேட்டை ஆடியதோ
நாடாள வந்திருக்கு...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
சக மனுசன் கழிவகூட
அடுத்த மனுசஞ் சுமக்கது
கொஞ்சங்கூட வெக்கமில்ல
வெறுந்தரைய நக்கது
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
சாராயம் வித்ததெல்லாம்
கல்வித் தந்தையாகுது
கல்விதர வக்கில்லாம
டாஸ்மாக்க தெறக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
குடிக்க கொஞ்சம் கூழுயில்ல
குடும்பம் கூடியழுகுது
கெடச்ச கூலி வாங்கியதோ
டாஸ்மாக்கில் நிக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
அடுச்சுபுடுச்சு எப்படியோ
அரசு வாத்தியாகுது....
அவன்புள்ள அங்கயில்ல
தனியாருல திக்குது
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
அடிபட்டு விழுந்துபுட்டா
எந்த ரத்தமும் சேருது...
திருமணத்தில் மட்டும்தானே
ஜாதி சுத்தம் பாக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
-சகா
நாதியத்து கெடக்குது...
நரவேட்டை ஆடியதோ
நாடாள வந்திருக்கு...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
சக மனுசன் கழிவகூட
அடுத்த மனுசஞ் சுமக்கது
கொஞ்சங்கூட வெக்கமில்ல
வெறுந்தரைய நக்கது
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
சாராயம் வித்ததெல்லாம்
கல்வித் தந்தையாகுது
கல்விதர வக்கில்லாம
டாஸ்மாக்க தெறக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
குடிக்க கொஞ்சம் கூழுயில்ல
குடும்பம் கூடியழுகுது
கெடச்ச கூலி வாங்கியதோ
டாஸ்மாக்கில் நிக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
அடுச்சுபுடுச்சு எப்படியோ
அரசு வாத்தியாகுது....
அவன்புள்ள அங்கயில்ல
தனியாருல திக்குது
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
அடிபட்டு விழுந்துபுட்டா
எந்த ரத்தமும் சேருது...
திருமணத்தில் மட்டும்தானே
ஜாதி சுத்தம் பாக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
-சகா