வெள்ளி, 16 நவம்பர், 2018

பாரத பு(ருட)த்திரனே போற்றி... போற்றி...


ஈராயிரம் நரபலியில்
இறுமாப்பாய் தான் நடந்து
அரியணையில் வந்தமர்ந்த
அனுமானே போற்றி... போற்றி...
ஓயாது உழைத்திடவே
நாடோடியாய் சுற்றிவரும்
ஒப்பாரும் மிக்காருமில்லா
ஓடு(ம்) காளியே போற்றி.. போற்றி...






ஊரெல்லாம் சுத்திவந்து
ஊறுகாயாய் எம்நாட்டை
கூறுபோட்டு விற்றுவரும்
வித்தகரே போற்றி... போற்றி...
மலைமுழுங்கியாம் அதானிக்கு
மணிமணியாய் அள்ளித்தரும்
மாமனியே போற்றி... போற்றி...
ஆதாரில் எம்கமுக்கம்
அத்தனையும் தான் திருடி
அம்பானிக்கு கொடுத்திட்ட
அருட்கொடையே போற்றி.. போற்றி...
கருப்புப்பணம் கள்ளப்பணம்
கடுகு டப்பியில் கண்டெடுத்து
களவாடி கொண்டுசென்ற
க(ள)லை வானியே போற்றி... போற்றி...








நாட்டுக்கே படியளந்த
நாதியற்ற உழவனையும்
நடுத்தெருவில் அலையவிட்டு
நகைதிட்ட நகைமுகனே போற்றி... போற்றி..
நாட்டுக்கே தொண்டாற்றும்
நன்நடிகையுடன் தான் கலந்தே
நாட்டை முன்னேற்றும்- செல்பி
நாயகனே போற்றி... போற்றி...
இல்லாத குப்பையெல்லாம்
அள்ளாமல் அள்ளிச்செல்ல...
ஸ்வ(உ)ச்சா பாரத்தை பெத்தெடுத்த
உ(ன்ம)த்த(ம)னே போற்றி... போற்றி...







காமத்தில் திளைப்போரும்
காடறுத்து தின்போறும்
காவி(லி)ச்சாமியான போது
காத்தருள்வாய் போற்றி... போற்றி...
கோட்டு சூட்டு பத்து லட்சம்
பூட்டுங்கூட மாட்டி வந்து
"நீட்"டி கூட்டி முழங்கவந்த
நீலிக்கண்ணீராய் போற்றி... போற்றி...
கோமாதவை தத்தெடுத்த
கோமா(ளி)னே போற்றி... போற்றி...
புதிய இந்"தீயா"வை பெத்தெடுத்த
பாரத பு(ருட)த்திரனே போற்றி... போற்றி...

- சகா 
(04/09/2017)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக